தெரிந்த வகையில்
மண்வீடு கட்டி விளையாடினர்கள்
பலத்த காற்று வீச
கலைந்த மண்வீட்டை கண்டு
ஒருகணம் முழித்தாள்
மறுகணம் சிரித்தாள்
மறுபடியும் மண்வீடு கட்டி
சுற்றிசுற்றி விளையாடி சிரித்தார்கள்
மண்வீட்டை மிதித்தும் சிரித்தார்கள் !

குளிர்காற்று ஈரத்தில் சளி பிடிக்குமென
வேகமாக வீட்டிற்குள் இழுத்து சென்றதும்
படபடக்கும் திரைசீலையை பிடித்தவாறே
குழந்தை சொன்னாள் -
’அம்மா, வேர்க்குது ...’

- கே.சித்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It