மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

பெங்களூர் பா.ஜ.க அலுவலகம் அருகே ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக கர்நாடக, தமிழ் நாட்டு காவல் துறைகள் திட்டமிட்டு தமிழக முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை, அரசியல் ஆதாயம் பெறுவதற்காக நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட சதியாகவே பார்க்க வேண்டும். இந்துத்துவ சக்திகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்த பாசிச நோக்குடன் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஒன்றும் புதிது அல்ல. மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோத்தா ரயில் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு என்று நீண்ட பட்டியல் ஒன்றை இதற்கு ஆதாரமாக சுட்டிக் காட்டலாம்.

அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் இதற்காக குற்றம் சாட்டப்பட்டு பலிகடாவாக்கப்படுவதும் நடந்தே வருகிறது. இந்த குண்டு வெடிப்பிலும், போக்குவரத்து காவலர் நஞ்சப்பாவிடம் இருந்து புகார் பெற்று, பெறப்பட்ட புகாரில் குற்றத்தை நேரடியாக பார்த்தவர்கள் ஒருவரும் இல்லையென்பதால் இதன் பின்னணியில் தேச விரோத பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெளிவாகிறது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்பே முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பது, குற்றவாளிகளை முன்னரே தீர்மானித்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. 14 இஸ்லாமிய இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு 11 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர்.

தேசிய மனித உரிமை கூட்டமைப்பின் உண்மை கண்டறியும் குழு பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை பல அதிர்ச்சித் தகவல்களை தருகிறது. அப்பாவி இஸ்லாமிய தமிழ் இளைஞர்கள் தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக் காட்டுவதுடன், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பிறருக்கு எதிராக பொய் சாட்சி சொல்வதற்கு வற்புறுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர் என்பதையும் பதிவு செய்கிறது. மேலும் குண்டு வெடிப்பிற்கு பயன்பட்ட சிம் கார்டுகளில் ஒன்று RSS தலைவர்களில் ஒருவருடையது அவரை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை. மேலும் சி.சி.டி.வியில் தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டை இருசக்கர வாகணத்தில் வைக்கும் காட்சிகள் பதிவாகியும் நஞ்சப்பாவைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் நிகழ்விற்கு கூட காவல் துறை முயற்சிக்கவில்லை. இவை அனைத்துமே காவல் துறையினரால் திட்டமிடப்பட்டு இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாத செயல்களுடன் சம்மந்தப்படுத்தப் படுவதையே சுட்டிக் காட்டுகிறது.
 
காவல் துறையின் இத்தகைய அப்பட்டமான சனநாயக மனித உரிமை மீறல்களை கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மே 17 இயக்கம் வலியுறுத்துகிறது. தொடர்ந்து அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களில் இருந்து அவர்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தீவிரவாத குற்றங்களை பொய்யாக முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தும் போக்கை காவல் துறை கைவிட வேண்டும் என்றும் மே 17 இயக்கம் வலியுறுத்துகிறது.

முஸ்லிம் சமுதாய மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக, அவர்களின் மீது சுமத்தப்படும் பொய் வழக்குகளில் இருந்து அப்பாவி இளைஞர்களை காக்க களத்தில் நின்று தோழமை கட்சிகள் / அமைப்புகளுடன் இணைந்து மே பதினேழு இயக்கம் போராடும்.

- மே பதினேழு இயக்கம்