மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் இந்த முறை இலங்கையில் 2013ல் வருகின்ற நவம்பர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. அப்படி ஒரு கூட்டம் இலங்கையில் நடைபெறுமானால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவ்கூட்டமைப்பின் தலைவராக இராசபட்சேவே இருப்பார் என்பது கூட்டமைப்பின் விதி.

காமன்வெல்த் நாடுகள் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் காலனியாக இருந்த நாடுகளின் கூட்டமைப்பே ஆகும். இது 1867ம் விடுதலை பெற்ற கனடாவும் 1884ல் விடுதலை பெற்ற ஆஸ்திரேலியாவும் சேர்ந்து உருவாக்கியதே 'காமன்வெல்த் நாடுகள்' ஆகும்.

அதன்பின் பிரிட்டீஷிலிருந்து விடுதலை பெற்ற நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஐரீஸ் போன்ற நாடுகள் சேர்ந்து 1926ல் ஒரு மாநாட்டை கூட்டி அதில் ஒவ்வொரு நாடும் எவ்வாறு செயல்படவேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

ஆனால் இங்கிலாந்தின் மிகப்பெரிய காலனி நாடான இந்தியா 1947ல் விடுதலை பெற்றபின் ஏற்கனவே உள்ள நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்து 1949ல் இலண்டன் தீர்மானம்(London Declaration)மூலம் ஒரு புதிய காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கியது.

அதன்பின் 1950 மற்றும் 1960களில் காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் மேலும் பல புதிய நாடுகள் சேர்ந்து இன்று 54 நாடுகளுடன் அது செயல்பட்டு வருகிறது.

இந்த காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பானது இரண்டு முக்கிய தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

1.1971ல் கொண்டுவரப்பட்ட சிங்கப்பூர் தீர்மானம்(Singapore declaration 1971 in Singapore)

2.1991ல் கொண்டுவரப்பட்ட ஹராரே தீர்மானம்(Harare declaration 1991 in Zimbabwe)

மேற்குறிப்பிட்ட இரண்டு தீர்மானமும் சில முக்கியமான பொதுவிதிகளை உறுப்பு நாடுகளுக்கு விதிக்கிறது அவை.

1.உறுப்பு நாடுகளில் வாழும் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்.(Equal Rights for all citizens)2.உறுப்பு நாடுகளில் உள்ள மக்களை பாலின ரீதியாகவும், இனரீதியாகவும், மதரீதியாகவும்,நிற அடிப்படையிலும் அல்லது அரசியல் ரீதியாகவும் பாகுபாடின்றி நடத்தபட வேண்டும்.

மேற்கண்ட விதிகளின் அடிப்படையில்தான் காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் செயல்பட வேண்டும். அப்படி குறிப்பிட்ட விதிகளை மீறி உறுப்பு நாடுகள் செயல்படும் பட்சத்தில் அந்த நாட்டை காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யலாம் என்று விதிகள் கூறுகின்றன‌.

இதனடிப்படையில் 1995ஆம் ஆண்டு நைஜிரியா அரசு தனது நாட்டில் வாழ்ந்த பத்திரிக்கையாளரும் மற்றும் அங்குள்ள எண்ணைய் வளங்களை காக்கப் போராடிய ஒரு சமூகப் போராளியுமான கென் சரோ விவா( Ken Saro Wiwa)என்ப‌வரையும் அவருடன் சேர்த்து பத்து பேரையும் தூக்கிலிட்டது. அதன் காரணமாக காமன்வெல்த் நாடுகளின் விதியான 'அரசியல் ரீதியாக தனது மக்களை கொன்றது' என்ற விதியின் அடிப்படையில் 1995ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் அந்த நாடு இடைநீக்கம் செய்யப்பட்டது.

அதன்பின் பாகிஸ்தான் 18 அக்டோபர் 1999ல் தனது நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து இராணுவ ஆட்சியை பர்வேஷ் முஷரப் நிறுவினார் என்பதற்காக ஹராரே தீர்மானத்தின் படி அப்பொழுது பாகிஸ்தான் இடைநீக்கம் செய்யப்பட்டது. மேலும் பிஜி மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் மோசமான மனித உரிமை மீறல்களுக்காக காமன்வெல்த் கூட்டமைப்பின் சட்டத்துறை வல்லுனர்களால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதில் பிஜி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளானது இரண்டாவது முறையாக 2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் இடைநீக்கம் செய்யப்பட்டது. பிஜி நாட்டின் மீதான தடை இப்பொழுதும் தொடர்கிறது.

ஆனால் இதை விட பலமடங்கு மனித உரிமை மீறல்களையும், இனப் படுகொலைகளையும் செய்த, செய்து கொண்டிருக்கின்ற இலங்கையை ஏன் காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் இடைநீக்கம் செய்யவில்லை??

 இலங்கையை நீக்கம் செய்வதற்கான காரணங்கள்:

1.தனது சொந்த நாட்டில் வாழும் தமிழர்கள் என்ற தேசிய இனமக்களுக்கு கல்வி மறுத்து அவர்களுக்கு கட்டாய சிங்களத் திணிப்பை திணித்து இன்றுவரை தமிழர்களை இனரீதியாகப் பிரித்தது காமன்வெல்த் கூட்டமைப்பின் 1971 மற்றும் 1991ம் விதியின் படி விதிமீறலாகும்.

2.இலங்கையில் தமிழ் பேசும் இந்துக்களின் கோவில்களையும் (http://hinduexistence.org/tag/hindu-temple-destruction-in-sri-lanka/) மற்றும் முஸ்லீம்களின் தர்க்காக்களையும் (http://www.onislam.net/english/news/asia-pacific/462016-buddhist-attack-frets-sri-lanka-muslims.html) இடித்து அங்கு பவுத்த மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று மதரீதியாக தனது மக்களை துன்புறுத்தி வருவது ஒரு அப்பட்டமான விதிமீறலாகும்.

3. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி தனது சொந்த நாட்டு மக்கள் 90,000 பேரை முள்வேலிக்குள் அடைத்து வைத்து அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காதது மற்றும் அங்குள்ள பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதியில் மட்டும் 60,000 கைம்பெண்கள் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சமீபத்தில் அறிவித்தது இப்படி பெண்களுக்கு எதிராக கொடுமைகள் செய்வதும் காமன்வெல்த் கூட்டமைப்பின் 1971 மற்றும் 1991ம் விதியின் படி விதிமீறலாகும்.

4.நைஜீரியாவில் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டார் என்பதற்காக அந்த அரசை இடைநீக்கம் செய்த காமன்வெல்த் கூட்டமைப்பு, இலங்கையில் இதுவரை 60க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களை காணவில்லை என்று சமீபத்தில் வெளிவந்த ஐ.நா தீர்மானத்திலேயே குறிப்பிடப்பட்டதை கண்டுகொள்ளவில்லை. மேலும் ”சண்டே லீடர்” பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கரமசிங்கே "நான் இந்த அரசால் விரைவில் கொல்லப்படுவேன்" என்று முன்னரே தனது பத்திரிக்கையில் எழுதினார் (http://www.guardian.co.uk/commentisfree/2009/jan/13/wickrematunga-final-editorial-final-editorial) அதன்படியே இராசபட்சே அரசால் கொல்லப்பட்டார். இப்பொழுது சமீபத்தில் ஏப்ரல் 15, 2013அன்று உதயன் பத்திரிக்கை அலுவலகங்கள் அரசால் அடித்து நொறுக்கப்பட்டது. (http://cpj.org/2013/04/sri-lankan-daily-attacked-again-twice-in-two-weeks.php) இதுபோன்ற எண்ணற்ற ஜனநாயக மீறலை இலங்கை அரசு செய்கிறது.

5.இலங்கையில் உள்ள தமிழ் பேசும் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் யாரும் இலங்கையில் அதிபர் ஆகமுடியாது என்ற ஒரு சட்டத்தை நிறுவி அங்கு அரசியல் ரீதியாகவும் சொந்த மக்களின் மீது அடக்குமுறையை ஏவி காமன்வெல்த் நாடுகளின் விதியை மீறி செயல்படுகிறது இலங்கை அரசு.

6.மேலும் தனது அரசுக்கு ஆதரவாக இல்லை என்ற காரணத்தால் இலங்கையின் தலைமை நீதிபதியான சிறானி பண்டாராநாயகாவை ஜனவரி 13, 2013அன்று நீதிபதி பதவியை விட்டு நீக்கி (http://www.thehindu.com/news/international/rajapaksa-dismisses-chief-justice/article4304287.ece) இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு காமன்வெல்த் கூட்டமைப்பின் 1971 மற்றும் 1991ம் விதியினையும் மீறி செயல்பட்டு வருகின்றது இலங்கை அரசு.

7.இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மக்களை இராணுவத்தைக் கொண்டு மிரட்டுகிற‌து. அங்கு 22 மக்களுக்கு ஒரு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சொல்கிறது. மேலும் 1980ல் இலங்கையின் இராணுவ பலம் தரைப்படை, விமானப்படை, கடல்படை ஆகிய மூன்றையும் சேர்த்தே 30,000 ஆக இருந்தது. பின் இராசபட்சே பதவி ஏற்றபோது அது 1,25,000 ஆக இருந்தது. ஆனால் 2005 மற்றும் 2009 காலகட்டத்தில் மட்டும் இராசபட்சே அரசு மேலும் மேலும் ஆட்களை சேர்த்து இன்று அது 3,00,000 ஆக இருக்கிறது. ஆனால் திட்டமிடப்பட்ட இலக்கு என்பது 4,50,000 பேர். (http://www.colombotelegraph.com/index.php/notes-on-the-military-presence-in-sri-lankas-northern-province/) இப்படி இலங்கையை இராணுவ மயமாக்க இராசபட்சே அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதே காரணத்துக்காகவே பாகிஸ்தான் அரசு 1999ல் காமன்வெல்த் கூட்ட்மைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது.

இவ்வாறு இலங்கை அரசு காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள எந்த விதிகளையும் பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது. இத்தனை காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டு காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பை இலங்கையில் நடத்துவதை நிறுத்துவதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து விதிகளை மீறும் இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருந்தே நீக்கம் செய்ய வேண்டும் என்பதே உலகமெங்கும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

- சு.கி.கொண்டல், மே 17 இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)