மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

வரும் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 மாவட்டங்களில்  சிலிண்டருக்கான நேரடி மானியம் ஆதார் அட்டை மூலம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனால் இனி 410 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை 845 ரூபாயாக விலை உயர்த்தப்படும். சிலிண்டருக்கான மானிய தொகை 435ஐ அரசாங்கம் இனி ஆதார் அட்டையின் மூலம் மக்களின் வங்கிக்கணக்கில்  செலுத்திவிடும். கேட்பதற்கு இது என்னமோ இனிப்பாக தான் இருக்கிறது. ஆனால் இதன் பின் உள்ள அரசியலை உற்று நோக்கினால் தான் இதன் ஆபத்து புரியும்.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் ஆதார் அட்டையை அறிமுகப்படுத்திய பொழுது  ஆதார் அட்டையை அனைவரும் பெறவேண்டிய  கட்டாயமில்லை அவரவர் சுயவிருப்பத்தின் பெயரில் இதை பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால் இப்பொழுது பொருட்களுக்கான மானியங்களை ஆதார் அட்டையின் மூலம் அளிப்பதன் மூலம் ஆதார் அட்டையை அனைவரும் பெறவேண்டிய கட்டாயத்தை அரசாங்கம் ஏற்படுத்துகிறது.

மேலும் இப்பொழுது சிலிண்டருக்கு மானியத்தை வங்கிக்கணக்கில் அளிக்கப் போவதாக சொல்லும் இவர்கள் நாளை ரேசன் கடைகளை மூடிவிட்டு ரேசன் பொருட்களுக்கான மானியத்தையும் ஆதார் அட்டையின் மூலம் அளிக்கப் போவதாக சொல்வார்கள்.

நன்றாக யோசித்து பாருங்கள் சொந்தங்களே. ரேசனில் விற்கப்படும் ஒரு ரூபாய் அரிசிக்கு அரசாங்கம் உங்கள் வங்கியில் 5 ரூபாய்  போட்டுவிட்டு உங்களை வெளி சந்தையில் அரிசி வாங்கிக்கொள்ள சொல்லும். வெளியில் உங்களால் 6 ரூபாய்க்கு அரிசி வாங்கிவிட முடியமா என்ன?

நாளை மறுநாள் பெட்ரோலின் விலையை ஏற்றிவிட்டு இதையே சொல்வார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டியது சமையல் எரிவாயுவின் விலையும், பெட்ரோலின் விலையும், அரிசியின் விலையும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே தான் இருக்கும். ஆனால் அதற்கேற்றபடி அரசாங்கம் அவர்களின் மானியத்தை ஏற்றித் தருவார்களா  என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

மேலும் நேரடி மானியம் என்ற பெயரில் நாளை அரசு மருத்துவமனைகளும், அரசு பள்ளிக்கூடங்களும், அரசு போக்குவரத்து நிறுவனங்களும் கூட இழுத்து மூடப்படும் அபாயம் நடக்கத்தான் போகிறது.

ஆதார் அட்டையின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் பெரு முதலாளிகளுக்கும்  இது பயனுள்ளதாக இருக்குமே தவிர இதனால் பொதுமக்கள் நிச்சயமாக பயனடையப் போவதில்லை. ஏனென்றால் வங்கிகளில் செலுத்தப்படும் தொகையை நாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு அவசர தேவைக்காக பயன்படுத்தி விடுவோம். எனவே பொருட்களை வாங்கும் பொழுது அது அதிகப்படியான விலையாக இருந்தாலும் அரசு தான் நமக்கு மானியம் தந்துவிட்டதே என்று வாங்கப் பழகி விடுவோம். இன்று நேரடி மானியம் மூலம்  விலையேற்றத்தை சிறுக சிறுக உங்களிடம் பழக்கிவிட்டால் நாளை மானியம் குறைக்கப்பட்டாலோ அல்லது நிருத்தப்பட்டாலோ உங்களுக்கு அது பெரிய பிரச்சனையாக தெரியாது. உதாரணத்திற்கு எப்படி மின் தடையை பழகிக் கொண்டோமோ அதே போல் தான்.

ஆதார் அட்டையை பயன்படுத்துவதால் இது மட்டும் தான் பாதகமா என்றால் அது தான் இல்லை. நாளை அனைத்து துறையிலும் நேரடி மானியம் என்று அறிமுகப்படுத்தப்பட்டால், ஆதார் அட்டை மூலம் நீங்கள் எங்கே செல்கிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள், உங்கள் தனிநபர் வருமானம் என்ன, வங்கி இருப்பு என்ன  என்பது வரை உங்கள் தனிமனித விவரங்களை கண்காணிக்க முடியும். இது நல்ல விஷயங்கள் தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆதார் அட்டைக்கான விவரங்களை திரட்டுவது அரசாங்க அதிகாரிகள் அல்ல UIDAI தனியார் நிறுவனமே. ஒரு தனியார் நிறுவனத்திடம் எப்படி உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்  என்பதன் மூலம் இதிலிருக்கும் ஆபத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

ஆதார் எனும் பெயரில் நம் தனிமனித உரிமைகளை நசுக்க வரும் அரக்கனை எதிர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

- கார்த்திக், மே 17 இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)