மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

may17_marina_606

2009 முள்ளிவாய்க்கால் போரில் திட்டமிட்டு ஓர் இனப்படுகொலையை தமிழருக்கு எதிராக சர்வதேசத்தின் துணையோடு இலங்கை இனவெறி அரசு நடத்தி ஒரு லட்சத்து நாற்பாதாயிரம் தமிழர்களை கொன்று குவித்தது.

இனப்படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் ஆனபின்னும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. 'விடுதலை' என்கிற ஒற்றைச் சொல்லிற்காக ஒரு தலைமுறையே அழிந்தாலும் எதிரிகளை விடப்போவதில்லை, பிறந்த மண்ணை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என தமீழீழத் தமிழர்கள் போர் புரிந்து மடிந்தார்கள்.

இதோ இந்த தமிழர் கடலின் கரையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கும் இலங்கைத்தீவில் இலங்கையில் நாம் மற்றும் உலக நாடுகள் வேடிக்கை பார்க்க, பதைக்க பதைக்க, வதைத்து வதைத்து, வெட்டி வீழ்த்தப்பட்டார்கள் நம் உறவுகள். தமிழீழம் என்கிற தனது நாட்டினை இலங்கையின் பிடியிலிருந்து விடுவிக்காமல் ஓயமாட்டோம் என்று போராடி மடிந்த தமிழர்களுக்காக 2009இல் நாம் போராடாமல் மெளனம் காத்த கொடுமை உலகில் வேறு எந்த இனத்திற்கும் நடந்து இருக்காது.

நம் வரிப்பணத்தினை வைத்து இந்தியாவும், இனவெறி கொண்ட இலங்கையும் கைகோர்த்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் துணையோடு தனித்து விடப்பட்ட தமிழர்களை வேட்டையாடினார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாமும் அவர்களை கைவிட்ட பாவம் வரலாறு முழுவதும் நம்மை துரத்தும்.

இனி என்ன செய்யப் போகிறோம்? என்ற சூழ்நிலையில் தமிழர்களின் அரசியல் கோரிக்கைக்கு வலுசேர்க்கவும், இந்த இனப்படுகொலை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு வருடம்தோறும் சென்னை மெரினா தமிழர் கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் தமிழர்களின் அரசியல் கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும் விதமாக பொதுமக்கள் பங்கேற்க்கும் நினைவேந்தலை தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது மே17 இயக்கம்.

2011 சூன் 26ஆம் நாள் ஐ.நாவின் சித்தரவதைக்கு எதிரான தினத்தில் ஐ.நா மற்றும் ஏனைய நாடுகளின் கவனத்திற்கு தமிழீழ இனப் படுகொலையையும், இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய மீனவர்களின் நிலையையும் கொண்டு செல்வதற்காகவும் நினைவேந்தல் நடத்தப்பட்டது. இதில் 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், உணர்வாளர்கள், தலைவர்கள், வேற்று மொழி மக்கள் கலந்து கொண்டு தமிழீழத்தில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலையே என்ற கோரிக்கைக்கு வலுசேர்த்தார்கள்.

அதுபோல சென்ற ஆண்டு 2012 இனப்படுகொலை வாரமான மே 20ஆம் நாள் நினைவேந்தலை கீழ்க்கண்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள், தலைவர்கள் (குறிப்பாக இதில் வடநாட்டு தலைவர் திரு.ராம்விலாஸ் பசுவான் கலந்து கொண்டு தனி ஈழமே ஒரே தீர்வு என்று நமது கோரிக்கைக்கு மேலும் வலுசேர்த்தார். அதன் பின் அவர் ஈழம் சம்பந்தமாக யார் அழைத்தாலும் இந்த கோரிக்கையில் உறுதியாக இன்று வரை இருக்கிறார்.) பங்கேற்ப்போடு நடத்தினோம்.

1. தமீழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே.

2. தமீழீழ விடுதலைக்காக ஐ.நா அவையின் மேற்ப்பார்வையில் ஒரு பொது வாக்கெடுப்பானது தமீழீழத்தில் வாழும் தமிழர்களிடத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடத்திலும் நடத்தப்பட வேண்டும்.

3. இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை சர்வதேச சமூகம் முன் தண்டிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் அதில் ஆசிய நாடுகள் எதுவும் இருக்க கூடாது.

இதுபோல இந்த 2013ஆம் ஆண்டும் இனப்படுகொலை வாரமான மே 19ஆம் தேதி தமிழனப் படுகொலைக்கான நான்காம் ஆண்டு நினைவேந்தலை அதே தமிழர் கடற்கரையில் நீதீ கேட்ட கண்ணகி சிலையின் பின்புறம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இப்பொழுது நமது கோரிக்கைகள் ஆனது அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்து அது மாணவர் போராட்டமாக மாறி அரசுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து சட்டமன்றத்தில் ஈழம் சம்பந்தமாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக நிறைவேறியுள்ளது.

இனி என்ன செய்யலாம்?. தமிழர்களுக்கு நடந்த துயரத்தினை உலகம் மறக்க விரும்புகிறது. இனப்படுகொலை என சொல்ல மறுக்கிறது. இனப்படுகொலை என்று சொன்னால்தானே தனி நாட்டிற்கான நீதி கிடைக்கும் என்பதால் இதை மறுக்கிறார்கள்.
 
ஏப்24 1915ல் நடந்த இனப்படுகொலைக்காக 98 ஆண்டுகள் கடந்த பின்னும் ஆர்மீனிய மக்கள் தங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்காக இன்றும் ஒன்று கூடுகிறார்கள், யூதர்கள் 60 ஆண்டு கழித்தும் இன்றும் தங்களது வேலைகளை நிறுத்தி யூத இனப்படுகொலைக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள்.
 
உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வருடம் தோறும் இதே தமிழர்கடல் கரையோரம் மே மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நம் குடும்பம்-குழந்தைகளுடன் நினைவேந்தி 'தமிழினப்ப டுகொலையை மறக்கமாட்டோம், தமிழீழ விடுதலையை அடையாமல் ஓய மாட்டோம்' என உறுதி மொழியேற்போம்.
 
இந்த கருத்துப் பதிவுகளை மக்கட் சமூகங்களிடயே ஏற்படுத்தவும், அரசுகள் கவனத்தில் எடுக்கவும், அறிவுச்சீவிகள்-கலைஞர்கள் இந்த கோரிக்கைகளை மேலும் கூர்மைப்படுத்தவும் இந்த நினைவேந்தல் சென்னை மெரினாவில் மே 19 ஆம் தேதி நடைபெறுதல் அவசியமாகிறது. இந்த நிகழ்வு மே பதினேழு இயக்கம் மட்டுமே நடத்துகிற நிகழ்வாக அமையாமல் அனைத்து தோழமை இயக்கங்களும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளடக்கிய முழக்கங்களை முன்வைத்து இந்த நினைவேந்தலில் பங்களிக்க வேண்டுகிறோம்.

இந்த நிகழ்வை தங்களுடைய சொந்த நிகழ்வாக மாற்றி, அதற்கான பரப்புரைகளை மேற்கொள்ளுதலை வரவேற்கிறோம். மே பதினேழு இயக்கம் ஒழுங்கமைவுப் பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக செயல்படும். மேலும் விருப்பமுள்ள அமைப்புகள் எங்களது ஒழுங்கமைப்பு பணிகளில் பங்கெடுத்து, பணியை மேலும் செழுமை பெறச் செய்ய உதவுமாறும் வேண்டுகிறோம்.

2009 இல் தமிழீழ மக்களின் ரத்தம் கலந்த அதே தமிழர் கடற்கரையில் மே 19, 2013 ஆம் நாள் மாலையில் கண்ணகி சிலையின் பின்புறம் ஒன்று கூடி நமது வணக்கங்களை தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் செலுத்துவோம். நாம் இணைவோம்.
             
- மே பதினேழு இயக்கம்

9600781111/9443486285