மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

சாதிவாரி கணக்கெடுப்பு நீண்டநாள் கோரிக்கைக்குப் பிறகு, தற்போது நடைபெறத் தொடங்கி இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கிய நாளிலிருந்தே சாதி சங்கங்கள் ஒவ்வொன்றும் தங்கள் சாதியை எவ்வாறெல்லாம் மறுபெயரிட்டு அழைக்க வேண்டுமென்று பாடம் எடுக்கத் துவங்கியுள்ளன. தன் சாதியை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று தெரியாமலே இத்தனை ஆண்டுகள் ‘தமிழன்’ வாழ்ந்திருக்கானா என்று வியப்பாக இருக்கிறது.

சாதி ஒழிப்பும் சாதிவாரி கணக்கெடுப்பும்:‍

 சாதி என்பது தமிழ் வார்ததை அல்ல. ஆனால், தமிழர்கள் வாழ்க்கையில் ‘சாதியை’த் தவிர்த்து எதுவுமே இல்லை என்கிற அளவுக்கு “இந்துத்துவ” சூழல் நிலவுகிறது. இச்சூழலில் ‘சாதிவாரி கணக்கெடுப்பு' மிக அவசியமான ஒன்று. சாதி மறுப்பு மணத்தை மறுக்கும் பார்ப்பனீய புத்தி, பள்ளிகளிலும், வேலைவாயப்பு அலுவலகங்களிலும் சாதியை மறுப்பதையே தன்னுடைய போர்க்குணமாக காட்டிக்கொள்கிறது. சமூக எதார்த்தத்திலும் ஜனனம் முதல் மரணம் வரை ‘சாதி’ என்கிற நோய் தமிழனை விடாமல் துரத்திக் கொண்டே வருகிறது. சாதியால் ஈராயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழ்ச் சமூகம் உரிமைகளை மீட்பதற்காக, ‘சாதி’வாரி இட ஒதுக்கீடு கோரப்பட்டது. முஸ்லீம் லீக், அம்பேத்கரின் சட்டம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் போன்ற அமைப்புகளால் போராடி பெறப்பட்டது தான் இட ஒதுக்கீடு.

 1906-ம் ஆண்டே இசுலாமியர்களுக்கு விகிதாச்சார இட ஒதுக்கீடு கோரப்பட்டது. ஆனால், இன்று வரை மக்கள் தொகைக்கேற்ப விகிதாச்சார இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதற்கான முன்முயற்சிதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதை நாம் உணர வேண்டும். ஆனால் அதன் உள்நோக்கத்தையே கெடுக்கும் விதமாக ‘சாதி சங்கங்கள்’ அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

சாதி வேறு, சாதிப் பட்டம் வேறு:

 சாதி என்பது வேறு, சாதிப் பட்டம் என்பது வேறு. உதாரணமாக கள்ளர், மறவர், அகமுடையோர் என்கிற மூன்று சாதிகளும் 'தேவர்’ என்று பட்டம் போட்டுக் கொள்கின்றன. மூன்று சாதிகளுக்குள் மண உறவு கிடையாது. உண்மைநிலை அப்படியிருக்க மூன்றையும் ஒரே சாதியாகச் சேர்த்து “தேவர்” என்று அழைக்குமாறு சாதி சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. கள்ளர் சமூகத்தில் பிரான்மலைக் கள்ளர், சிவகங்கை நாட்டார், தஞ்சாவூர் வாண்டையார் என்று பகுதிகளுக்கு ஏற்றாற்போல் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இவர்கள் ‘கள்ளர்' என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் இவர்களுக்குள் மண உறவு சிடையாது.

 எனவே இவர்கள் தத்தம் அடையாளங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும். (மாவட்டம், ஊர் முதற்கொண்டு சரியாக பதிவு செய்ய வேண்டும்.) சரி, “தேவர்” என்று பொதுவாக அழைத்தால் என்ன? பிரிவினை சற்று குறைவது நல்ல விஷயம் தானே என்று சிலர் கேட்கலாம். சத்தியமாக இது பிரிவினையை உடைக்காது. அதிகரிக்கத்தான் செய்யும். மூன்று சாதிகளையும் (கள்ளர், மறவர், அகமுடையோர்) இணைத்து “தேவர்” என்று அழைத்தால், அகமுடையோர் சமூகமே அதிகம் பயன்பெறும். மூன்று சமூகத்தில் கல்வி, பொருளாதாரம் அளவில் முன்னேறிய சமூகம் அகமுடையோர் சமூகம். இவர்களை கள்ளர், மறவருடன் இணைப்பதன் மூலம் கள்ளர், மறவருக்குரிய இடஒதுக்கீடையும் சேர்த்தே அபகரித்துக்கொள்ளக் கூடிய அபாயம் நிகழும். அகமுடையோர் சாதி பிற்படுத்துப்பட்டோர் பட்டியலில் இருக்கிறது. கள்ளர், மறவர் இருவரும் சீர்மரபினர் பட்டியலில் வருகிறார்கள். (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) மூன்றையும் சமூகத் தளத்தில் ஒரே அடுக்காக வைத்துப் பார்ப்பது சமூக அநீதி. சாதிச் சங்கங்கள், தன் சாதிப் பெருமையை காட்டிக் கொள்வதற்காகவும், வாக்கு அரசியலில் தன் கட்சிக்கு அதிக தொகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் “தந்திரமாக” அறிக்கைகளை விடுகின்றன. இதில் அந்த சாதி மக்களுக்கு ஒரு பயனும் இல்லை என்பதை உணர வேண்டும்.

சைவப்பிள்ளையும், இல்லத்துப் பிள்ளையும் ஒன்றா?

வெள்ளாளர் என்பது சாதி, பிள்ளை என்பது பட்டம். திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள நாயர்களுக்கு ‘பிள்ளை’ என்றொரு பட்டம் உண்டு. அந்தப் பட்டம் தான் தமிழக வெள்ளாளர்களுக்கும் ‘பிள்ளை’ என்ற பட்டம் கிடைக்க காரணமாயிற்று. சைவ வேளாளர், சோழிய வேளாளர், கொடிக்கார வேளாளர், வீரகுல வேளாளர் என்று பல பிரிவுகள் உள்ளன. இதில் ‘சைவப் பிள்ளை’ மட்டுமே முற்படுத்தப்பட்ட சமூகம். இதர சமூகங்கள் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள். ஆனால் எல்லா பிள்ளைமார்களையும் ‘வெள்ளாளர்’ என அழைக்கும்படி ‘சாதிச் சங்கங்கள்’ கேட்டுக் கொள்கின்றன. இதனால் ‘சைவப் பிள்ளை’ சமூகம் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் இணைந்து பிற வெள்ளாள சமூகங்களின் உரிமைகளை அபகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 தொண்டை மண்டல முதலியார், சைவ முதலியார், செங்குந்த முதலியார் போன்ற சாதிகள் முதலியார் பட்டம் போட்டுக் கொள்கின்றனர். 'செங்குந்தர்’ என்றால் கைத்தறி நெசவு செய்யும் உழைக்கும் வர்க்கத்தினர். நிலவுடமை சமூகமான தொண்டைமண்டல முதலியாருடன், “செங்குந்தர்” சமூகத்தையும் இணைத்து “முதலியார்” என்றே பொதுவாக பதிவு செய்ய வேண்டும் என்று ‘சாதி சங்கங்கள்” வலியுறுத்துகின்றன. “முதலி” என்கிற சாதிப்பட்டத்திற்கு ஆசைப்பட்டு, “செங்குந்தர்” சமூக தோழர்களே உங்களுடைய உரிமைகளை இழந்து விடாதீர்கள். ‘செங்குந்தர்” என்றே பதிவு செய்யுங்கள். இதைப் போன்று. நாட்டுக்கொட்டை செட்டியார்(B.C), சைவ செட்டியார்(F.C.), வாணிய செட்டியார்(MBC) என அழைக்கப்படும் மக்கள் அனைவரும் “செட்டியார்” என்று பொதுவாக பதிவு செய்யாதீர்கள்.

தாழ்த்தப்பட்டோர் விடுதலையும், சாதிவாரி கணக்கெடுப்பும்:

விடுதலைச் சிறுத்தைகளின் ஊடகப்பிரிவு செயலாளர் செந்தில் தனது முகநூலில் (Facebook) ‘தாழ்த்தப்பட்டோர் அனைவரும் தலித்துகள் என பதிவு செய்ய வேண்டும்’ என்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டதாக செய்தி ஒன்றைப் பதிவு செய்திருந்தார். ‘இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் அவ்வாறு கேட்டுக்கொண்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது. தோழர் செந்திலிடம் பேசியபோது அந்த செய்தியை நான் உறுதி செய்து கொண்டேன். பள்ளர், பறையர், சக்கிலியர், மாதரி, பகடை என பல்வேறு சாதிகளாக இருக்கும் தாழ்த்தப்பட்ட தோழர்களை ‘தலித்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் பதிவு செய்யச் சொல்வது சரியான நடைமுறையாகாது.

தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் என தனித் தனியே பதிவு செய்யும்போது தான் விகிதாச்சார அடிப்படையில் தனித்தனியே அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வசதியாக இருக்கும். பள்ளர், பறையர் இருவரும் இணைந்து அருந்ததியர்களின் இட ஒதுக்கீட்டை பறித்துகொண்டனர் என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ‘தலித்’ என்று பொதுவாக பதிவு செய்தால் அருந்ததியர்கள் உட்பட தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை தெரிய வாய்ப்பில்லை. மீண்டும் உள்இட ஒதுக்கீடு பிரச்சனை எழுப்பப்படும். தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை சீர்குலையும் ஆபத்து உள்ளது. எனவே விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது கருத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சாதி ஒழிப்பு தான் உங்களுடைய நோக்கம் என்பதால் நான் உங்களுடன் உரிமையுடன் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்.

 சாதி வாரி கணக்கடுப்பில் உண்மை சாதியை பதிவு செய்வோம்.
 சாதி ஒழிப்பை உறுதி செய்வோம்
 சாதியை மறுத்து மணம் செய்வோம்
 சாதியற்ற சமூகத்தை உருவாக்குவோம்!