மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

கூடங்குளம் அணு உலையை மூடுதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 350க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் இடிந்தகரையில் கடந்த 10 நாட்களாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ள நேரத்தில், இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாகவும் தமிழக அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் சென்னையில் நூறு மணி நேர தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை இளைஞர்கள் தொடங்கி உள்ளனர்.

kudankulam_chennai_fast_620

‘கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின்’ சார்பாக இரண்டு பெண்கள் உட்பட தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த நான்கு தோழர்கள் நேற்று மாலை 5 மணியளவில் சென்னையில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ இவ் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர்.

தோழர்கள் ஜார்ஜ், பரிமளா, சமந்தா, ஜான்சன் ஆகியோரின் போராட்டத்தை இந்திய சமுக சனநாயக கட்சியின் (SDPI) தோழர் ஹரிம் அவர்கள் தொடங்கி வைத்தார்

உண்ணாநிலைப் போராட்டம் குறித்து தோழர் பரிமளா கூறுகையில், "கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த மே 01, 2012 முதல் 350க்கும் மேற்பட்ட மக்கள் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடங்கிய பத்து நாட்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையிலும் அரசு இதுவரை மக்களிடையே எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இறங்கி வரவில்லை. மாறாக சனநாயக வழியில் போராடிவரும் மக்களை ‘வன்முறையாளர்கள்’ என சித்தரித்து, அவர்களைத் தனிமைப்படுத்தி வருகிறது.

மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் இன்னொரு உத்தியாக, மக்களின் பாதுகாப்பை காரணம் காட்டி கூடங்குளத்தை சுற்றி ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனைத்து ஊர்களிலும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார் நெல்லை மாவட்ட ஆட்சியாளர். இது மக்களை அச்சுறுத்தி அவர்களை திறந்த வெளி சிறையில் அடைத்து வைக்கும் திட்டமே. ஒரு சனநாயக நாட்டில், பொது இடங்களில் கூடுவதற்கும், இடிந்தகரை மக்களைப் போல அமைதிவழிப் போராட்டத்தை நடத்தவும் மக்களுக்கு உரிமை உண்டு. அத்தகைய அடிப்படை உரிமையை இந்திய அரசு மதிக்க வேண்டும்” என்றார்

போராட்டம் குறித்து தோழர் ஜார்ஜ் கூறுகையில், "இடிந்தகரையில் நடக்கும் போராட்டம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் போராட்டம். போராடும் மக்கள் தனித்து இல்லை என்பதை இந்த அடக்குமுறை அரசுக்கு உணர்த்தும் விதமாகவே இப்போராட்டத்தை தொடங்குகின்றோம்" என்றார்.

இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

* இடிந்தகரைக்குள் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்கிடுக! குவித்துவரும் காவல் படைகளைத் திரும்பப் பெறுக!
* 10 வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் இருந்து வரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துக!
* போராடும் மக்கள் மீது தொடுத்துள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், கைது செய்தவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட போராடும் மக்கள் முன் வைத்துள்ள 6 அம்சக் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்துக!