மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

கூடங்குளம் போராட்டத்தின் மையப் பிரதேசமான இடிந்தக்கரையின் பேரெழுச்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் குழுவில் நானும் சென்றிருந்தேன். கம்யூனிஸ்டு இயக்கத்தின் மூத்த தோழர்.ஆர்.நல்லகண்ணு குழுவிற்கு தலைமையேற்றிருந்தார். மாநிலத்தின் முன்னணித் தலைவர்கள் பலரும் இதில் பங்கேற்றிருந்தார்கள். போராட்டப் பிரதேசத்தில் தோன்றிய உணர்வை அப்படியே ஒரு தலையங்கமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் அங்கேயே பிறந்து விட்டது.

தேரிகாடு காட்டுக்குள் இந்த இடிந்தக்கரை அமைந்திக்கிறது. தேரிகாடு என்பது, செம்மண் குவிந்து கிடக்கும் நிலப்பரப்பு. இதில் மறைந்துள்ள உயர்ந்த தாதுப் பொருட்கள் இன்றைய உலகத்தில் விலைமதிப்பற்றவை. இதனால் நவீனக் கொள்ளைக்காரர்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இந்த செம்மண் நிலப்பரப்பும் மாறிப் போனது. கூடங்குளப் போராட்டமும் இங்கு தான், கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

முழுத் தமிழகமும், அனல்கால வியர்வையில் மின்சாரம் இன்றி தவியாய் தவிக்கும் வேளையில், அணுஉலையால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும் என்பதைப் போல, பிரமையை உருவாக்க மத்திய அரசு பெரிதும் முயற்சி செய்கிறது. ஆனால் இடிந்தகரை மக்கள், தங்கள் வாழ்வு குறித்தும் தங்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக் குறித்தும் சில அடிப்படையானக் கேள்விகளை முன் வைத்துள்ளனர். போராட்டம், தீயைப்போல அவர்களிடம் தீவிரம் கொண்டு இருக்கிறது.

எட்டு மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாகும் வரை உண்ணாவிரதம், உண்ணாவிரதம், கவன ஈர்ப்பு என்று பலவடிவத்திலும் இவர்களின் போராட்டம் அமைந்து போனது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், வெளிநாடுகளில் பணிகளில் இருப்பவர்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. காவல்துறையின் பொறுப்பற்ற கண்மூடித் தனத்தை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ள சுப.உதயக்குமார். மண்ணினின் மீதும், மக்கள் மீதும் கொண்ட பிடிப்பு ஆழமானது. இவர் சிறந்த கல்வியாளர். யாராலும் பெறமுடியாத அடித்தள மக்களின் நம்பிக்கையை பெற்றவர். இவர் மீது 98 வழங்குகள் போடப்பட்டுள்ளன. ம.புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜன் ஆகிய போராட்டத்தின் முன்னணி தளபதிகள். இவர்கள் அனைவரின் மீதும் தேச துரோகம் குற்றமாக சாட்டப்பட்டுள்ளது. மிக அருவெறுப்பான அவதூறுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது.

அச்சமற்றவர்களை, யாரால் தான் என்ன செய்துவிட முடியும்? வழக்குகளைப் போட்டுப் பார்த்த ஆட்சியாளர்கள், 6 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறை, மற்றும் துணை ராணுவப்படையினரைத் தருவித்து, இடிந்தக்கரையையும் முற்றுகையிட்டுப் பார்த்தனர். அவர்களால் யாரையும் பணியவைக்க முடியவில்லை. வெகுமக்களின் போர்க்குணம் எத்தகையது என்பது மீண்டும் ஒருமுறை வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசு போராடும் உழைக்கும் மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள அடக்குமுறையை உடன் நிறுத்தி, அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று தாமரையின் சார்பில் வேண்டுகோளை முன்வைக்கிறோம். 

- சி.மகேந்திரன்