மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

இந்திய விவசாயிகள் பெரும்பாலும், இரசாயன உரத்தையே நம்பியுள்ளனர். போதிய அளவு மழை பொழிந்திருந்தாலும், உரவிலையேற்றம், உரத்தட்டுப்பாடு, கூலி ஆள் பற்றாக்குறை, இடுபொருள்கள் விலை உயர்வு, கூலி உயர்வு இவைகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் தத்தளித்துக்கொண்டு செக்கு மாடுபோல் வாழ்கின்றனர்.

இதுவரை ஓரளவு உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மய்ய அரசு, இவ்வாண்டு சௌமித்ரா சவுத்திரி கமிட்டியின் பரிந்துரையின் பேரில் உரங்களின் விலையை, உரக் கம்பெனிகளே தீர்மானித்துக் கொள்ள லாமென, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து உர நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு உரங்களின் விலையைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப உயர்த்தியுள்ளன.

இதுமட்டுமன்றி வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொட்டாஷ் உரத்தில் செயற்கையாகத் தட்டுப்பாட்டை உருவாக்கி, கள்ளச் சந்தையில் விற்றுக் கொள்ளை இலாபமடைகின்றனர்.

தமிழ்நாட்டில் 50% உரவிநியோகம், கூட்டுறவு விற்பனை இணையம் மூலமும் (டான்பெட்), மீதி 50% தனியார் மொத்த வியாபாரிகள் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. உரக்கடைகளில் உரம் முறையாக, நியாயமான விலையில் கிடைப்பதில்லை.

விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் யூரியா ரூ.265.50க்கு பதில் ரூ.350க்கு விற்கப்படுகிறது. அதேபோல் மற்ற உரங்களுக்கான விலைகளைத் தனியார் உர நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இவற்றின் விலையே அதிகம். ஆனால், அதைவிடக் கூடுதலான விலையில் கடைகளில் அவை விற்கப்படுகின்றன. அரசு இதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் எடுக்க வில்லை.

விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வரும், யூரியா, டைஅமோனியம்பாஸ்பேட், பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் 20:20, 20:20:0-13; 17:17:17. 10:26:26 என 15 வகையான காம்பௌக்ஸ் உரங்களை ‘இப்கோ’, ‘சில்’, `எம்.சி.எப்', `ஆர்.சி.எப்', என பல உரநிறுவனங்கள் உற்பத்தி செய்ததில் 1.4.2010க்கு முன், உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு, உரவிலை உயராத வகையில், உரமானியத்தை அரசு வழங்கி வந்துள்ளது. அனைத்து உர நிறுவனங்களும் அரசு நிர்ணயிக்கும் விலையில், வித்தியாசமின்றி உரத்தை விற்பனை செய்து வந்தன. இந்த ஏற்பாடு 31.3.2011 வரை அமுல் படுத்தப்பட்டதால், உரத்தின் விலை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.

1.4.2011 முதல் உரமானியக் கொள்கையில் மாறுதல் செய்து, தழைச்சத்து, சாம்பல்சத்து, மணிச்சத்து, கந்தகச்சத்து என உரத்தின், உரச்சத்தின் அடிப்படையில் உரமானியம் வழங்கிடவும், உரநிறுவங்களே உரத்தின் விலையை நிர்ணயித்துக்கொள்ளவும், மய்ய அரசு முடிவெடுத்ததன் காரணமாக உரவிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

உரச்சத்தின் அடிப்படையில்தான் அரசு மானியம் அளிக்கப்படும் என்றவுடன், ஏற்கனவே டி.ஏ.பி. (டைஅமோனியம் பாஸ்பேட்) உரத்தில் 18:46 என்ற அளவிலிருந்த மணிச்சத்து, தழைச்சத்து என்ற விகிதம் 16:44 என்ற அளவில் உரக்கம்பெனிகளால் குறைக்கப் பட்டள்ளது. ஏற்கனவே 100 கிலோ உரம் பயன்படுத்திய இடத்தில் தற்போது 120 கிலோ பயன்படுத்த வேண்டும்.

tables_370

தழைச்சத்து, சாம்பல்சத்து, மணிச்சத்து என்ற 3 வகையான உரங்கள் விவசாயத்திற்கு அடிப்படையான உரங்கள். இதில் சாம்பல்சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் உரங்களுக்கு ஆண்டு தோறும், ஒரு இலட்சம் கோடிக்கு மேல் உரமானியம் உர கம்பெனிகளுக்கு, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. உற்பத்தியை விடக்கூடுதலாக, உற்பத்தியைக் கணக்குக் காட்டி அரசிடமிருந்து பல மடங்குக் கூடுதலாக உர மானியம் பெறுகின்றனர் உரமுதலாளிகள். இதை மத்தியத் தணிக்கைக் கட்டுப்பாட்டு அறிக்கை அம்பல படுத்தியுள்ளது.

01.07.2008 முதல் 31.03.2010 வரை, உரநிறுவனங்களின் உற்பத்திச் செலவு, அதற்கு அரசு வழங்கும் உரமானியம், 50 கிலோ கொண்ட ஒரு மூட்டையின் விற்பனை விலை பற்றியும், 01.04.2010 முதல் 01.11.2011 வரை உர உற்பத்தியின் செலவும் அரசு வழங்கும் மானியம்; 50 கிலோ கொண்ட ஒரு மூட்டைவிலை பற்றிய விவரம்.

01.04.2010 முதல் உர உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு உரவிலை நிர்ணயித்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டு இதன்படி ஒவ்வொரு நிறுவனமும் தெரிவித்த பட்டியலில் இப்கோ, ஐ.பிஎல், சில், ஸ்பிக் உர நிறுவனங்கள் தெரிவித்த உற்பத்திச் செலவு மட்டும் மேலே பட்டியலிடப்பட்டள்ளது.

இப்பட்டியலை ஒப்பு நோக்கிப் பார்த்தால், 01.04.2010க்கு பின் 01.11.2011 வரை உற்பத்திச் செலவு குறைவாக உள்ளது. அதேபோல் உற்பத்திச் செலவிற்கேற்ப உரமானியமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உர விற்பனை விலையைப் பார்க்கும் போது, மிக அதிக அளவு உயர்ந்திருக்கிறது. இது ஆட்சியாளர்களுக்கு தெரியாதா? தன் குடும்பம் வாழ, ஊருக்குழைக்கும் கோடிக்கணக்கான விவசாயிகள் தலையில் ஒரு பெரும் சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. இதை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

எல்லாம் ஆண்டவன் விட்ட வழி, தலைவிதியென்று செக்குமாடுபோல் வாழ்ந்து கொண்டிருக்கும் உழவர் பெருமக்களே, நமக்காகப் போராட, யாரும் தயாராக இல்லை. நம் உரிமைக்கு நாம்தாம் போராட வேண்டும். ஒருங்கிணைந்து, உழவர்களின் உரிமை பெற, போராட வாரீர்! வாரீர்!!

பூமி பிளக்காமல் விதை முளைப்பதில்லை

போராடாமல் உரிமை கிடைப்பதில்லை.

- மாவோ