மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பூர்வ குடிகளான ஜாரவா பழங்குடியினப் பெண்களை ஒரு வேளை உணவுக்காக கட்டாயப்படுத்தி அரை நிர்வாண‌ நடனம் ஆடவைக்கப்பட்ட நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடையேயும், நாகரிக சமுகத்தின் மீது அக்கறை விருப்பம் கொண்டுள்ளோரிடையேயும் பலத்த அதிர்வுகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

jarawa_tribe_400இந்த அவலத்தை முதன்முதலாக உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது தி அப்சர்வர், தி கார்டியன் ஆகிய ஆங்கில ஊடகங்களகும்.

அக்காணொளியின் மூலம் பெண்களும் சிறுவர்களும் கட்டாயப்படுத்தப்பட்டு நடனமாட வைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. அவர்கள் மீது பணமும் உணவுப்பொட்டலங்களும் வீசி எரியப்படும் காட்சி நாகரிக சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய நிலையை சுய விமர்சன‌ம் செய்து கொள்ள வேண்டுமென்பதை கட்டயமாக்குகிறது.

அந்தமானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க பழங்குடியினர்களை மிருகக்காட்சி சாலை விலங்குகளைப் போன்று ஆட்டுவிக்கும் இது போன்ற நிர்வாண‌ நிகழ்வுகளை உள்ளூர் காவல் துறையினர் கையூட்டு பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர் என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

பழங்குடியினரின் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டிச் செல்லும் அந்தமானின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் 46 மைல் நீள பிரதான சாலையில் தினமும் இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் காவல்துறையினரால் முறைகேடாக அனுமதிக்கப்படுவது சுற்றுலாவாசிகளின் இது போன்ற மிருகத்தனமான செய்கைகளுக்கு காரணமாகிறது.

அந்தமான் யூனியன் பிரதேசத்தின் பழங்குடியின நலத்துறை அமைச்சர் சந்திரா தேவ், இந்த அவலத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதகவும், ஜாரவா பழங்குடியினரின் வாழ்க்கை நலனை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது மற்றும் பிராதன சாலையை மூடிவிட அரசு ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது மற்றும் அவலத்தினை உலகின் பார்வைக்கு கொண்டு வந்த காணொளி காட்சியை படம் பிடித்த புகைப்பட கலைஞர் மற்றும் மகிழுந்து ஓட்டுனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது ஆகிய அனைத்தும் பிரச்சினைக்குரிய மையப்புள்ளியை கண்டறிவதில் அரசின் அக்கறையின்மையாகவும் கண்துடைப்பு நாடகமாகவும்தான் பார்க்கப்படுகின்றது.

அம்மக்கள் அப்பாவிகளாகவும் பலவீனமானவர்களகவும் உள்ளதால் உள்ளூர் காவல்துறையினரின் உதவியோடு சுரண்டலுக்கு உள்ளாகின்றனர்.

அணு ஆயுத வல்லரசாக மாறத்துடிக்கும் இந்தியாவில் ஆண்டுக்கு 40 லட்சம் டன் உணவு தானியங்கள் அரசின் சேமிப்புக் கிடங்குகளில் மக்கி வீணாகும் இந்தியாவில் நடந்திருக்கும் இந்நிகழ்வு உலகின் பொருளாதார மற்றும் ராணுவ வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக பொருளாதார‌ப்புலி மன்மோகன் சிங் வகையறாக்கள் செய்யும் கோயபல்ஸ் பிரசாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அழிவின் விளிம்பில் வெறும் 403 பேரையே எண்ணிக்கையாகக் கொண்ட அம்மண்ணின் பூர்வகுடிகளான ஜாரவா பழங்குடியினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இத்தாக்குதல் நாகரிக சமுகத்தின் மேல் அக்கறை கொண்ட எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவசரத்தேவையாக இப்போது கருதப்படுவது யாதெனில் முறையான விசாரணை மற்றும் தொலைநோக்குப் பார்வையிலான திட்டங்களுமேயாகும்.

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னான் பாரதி. என்ன செய்ய போகிறது மன்மோகன் அரசு?

- பண்ரூட்டி காமராஜ்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)