மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் வெறும் அரட்டை மடங்கள் என்று தோழர்.லெனின் கூறினார். வேறெந்த நாடுகளைக் காட்டிலும் அது இந்திய முதலாளித்துவ அரசின் நாடாளுமன்றங்களுக்கும், சட்டமன்றங்களுக்கும் சாலப்  பொருந்துவதாக இருக்கும். 'இங்கு அனைவருக்கும்  வாக்களிக்கும் உரிமை உள்ளது, இது தான் உண்மையான மிகப்பெரிய ஜனநாயக நாடு' என்று இந்திய ஆளும் வர்க்கம் அடிக்கடி கூறிகொள்ளும். ஆனால் இங்கு ஆளும் வர்க்கம் முன் நிறுத்தும் மோசமானவர்களில் யாராவது ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை மட்டும் தான் மக்களுக்கு உள்ளது, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாறினாலும், ஆளும் வர்க்கத்தின் நலன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.

விலைவாசி ஏற்றம் தடுக்கப்படும், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும், ஊழல் இருக்காது என்று பல்வேறு முழக்கங்களை வைத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த தற்போதைய ஆளும் கட்சியும், தேர்தலில் ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சியாகவும் தற்போது பிரதான எதிர்க் கட்சியாகவும் இருக்கக்கூடிய கட்சியும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் மக்கள் பிரச்னைகள் பற்றி உருப்படியாக எதையும் பேசாமல், உன்னோடு கூட்டணி வைத்ததற்கு நான் வெட்கப்படுகிறேன், வேத‌னைப் படுகிறேன் என்று மாறி மாறி வசை பாடுகின்றன. மிகவும் அநாகரிகமான முறையில் இரண்டு கட்சி உறுப்பினர்களும் நடந்து கொள்கிறார்கள்.

மக்கள் நலன் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், பால், பஸ் கட்டண விலையை பல மடங்கு தமிழக அரசு கூட்டியுள்ளது. மின்சார கட்டணத்தை இரண்டு மடங்கு கூட்டப் போகிறது. தினம் தினம் கொலை, கொள்ளை என்று தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுக் கிடக்கிறது. சென்ற அரசில் நடந்த ஊழல்களை பல்வேறு தரப்பினர் ஆதாரத்தோடு இந்த அரசிடம் கொடுத்தபோதும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தான்தோன்றித்தனமாக சென்ற அரசு அறிவித்த திட்டங்களில் நல்ல திட்டங்களையும் மாற்றி அறிவிக்கிறது. இவ்வாறு சட்டமன்றத்தில் பேச ஆயிரம் பிரச்னைகள் இருந்தபோதும், அதைப் பற்றி எதுவுமே பேசாமல் அனைத்துக் கட்சிகளும் இதை அரட்டை மடங்களாகவும், சந்தைக் கூடங்களைப் போலவும் ஆக்கிக் கொண்டு இருக்கின்றனவே தவிர, இந்த சட்டமன்றங்களினால் உழைக்கும் மக்களுக்கு யாதொரு நன்மையையும் இல்லை என்பதே மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

உண்மையிலேயே வெட்கப்பட வேண்டியது தற்போதைய ஆளும் கட்சியோ, அல்லது பிரதான எதிர்க் கட்சியோ அல்லது அதன் தலைவர்களோ அல்ல; இவர்களுக்கு எல்லாம் ஒட்டு போட்டு சட்டமன்றதிற்கு அனுப்பி வைத்த மக்கள்தான் வெட்கப்பட வேண்டியவர்கள்.