யாதும்; யாதோ?
யாவரும்; யாரோ?
விரட்டப்பட்ட
பூங்குன்றனார்கள்.

*
காந்தியைப்
பெற்ற மண் என்றார்கள்
வந்தபின் தெரிந்தது
காந்தியைக்
கொன்ற மண்.

*
கடல்தாண்டி
உயிர் பிழைத்தோம்
செத்துப்போனது மானம்.

*
விழுதுகள் பரப்ப
வெளியேறினோம்
வேர்களை வெட்டி
தொட்டியில் வைத்தீர்.

*
கூடுகளைப்
பறிகொடுத்து
கூண்டுக்குள்
அடைபட்டோம்...
எங்கள்
சிறகுகளைப் பார்த்து
சிரிக்கிறது வானம்.

- த.ரெ.தமிழ்மணி

Pin It