சிரிப்பின் எக்காளத்தில்
அமிழ்கிறது
உள்ளங்களில் கிடக்கும்
வெஞ்சினம்

Vaiko and Jayalalithaஇடங்களின் மீது நடக்கும்
அரசியலின் சூதில்
ஏமாற்றுவதற்காய் காலியாக்கப்படுகின்றன
இல்லாத இதயத்தில் இடங்கள்

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
செரித்துக் கிளம்புகின்றனர்
கோரிக்கைகளின் கைகளை
சுருண்டு குழையும் வாலென
புறந்தள்ளி

ஒட்டிய மண்ணை
உதறிவிட்டு எழுகிறது
அழிக்க விம்மும் தடைகளை
மோதி உடைக்க
எளிய மக்களின்
புறக்கணிக்கப்பட்ட அரசியல்

புதிய விடியலாய்
புதிய விருட்சமாய்
புதிய விடுதலையாய் 

-யாழன் ஆதி

Pin It