மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 பேரின் கருணை விண்ணப்பங்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் 18 பேரும் மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு உச்சநீதிமன் றத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப் பங்கள் மீதான ஆய்வை இந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு மேற்கொள்ளவிருக்கிறது.

இந்த 18 பேரில் இராசிவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாகப் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் இடம்பெற்றுள்ளனர். இருபது ஆண்டுகளுக் கும் மேலாக இவர்கள் சிறையில் இருக்கின்றனர். அரசமைப்புச் சட்ட விதி 61இன்படி குடியரசுத் தலை வருக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது.

ஆனால் கருணை விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது குறித்து ஆராயலாம். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகி யோரின் கருணை விண்ணப்பங்கள் 11 ஆண்டுகள் குடியரசுத் தலைவரின் மாளிகையில் தூசி படிந்து கிடந்தன. பிரதீபா பாட்டீல்தான் இம்மூவரின் விண்ணப் பங்களைத் தள்ளுபடி செய்தார்.

உச்சநீதிமன்றம் அதிக நீதிபதிகள் கொண்ட ஓர் அமர்வை ஏற்படுத்தி, தூக்குத் தண்டனை குறித்த புதிய ஆய்வை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அந்நிலையில், உரிய காரணங்களைக் கூறா மலேயே கருணை விண்ணப்பங்களை ஏற்க மறுப் பது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பத்து, பதினைந்து ஆண்டுகள் நாள்தோறும் உயிர் ஊசலாடிய வாறு வாழுகின்ற கொடுமை முதலானவை குறித்து மனித உரிமை அமைப்புகளும், வழக்குரைஞர்களும் எடுத்துரைப்பார்கள். இத்தகைய சூழல்களில் உச்சநீதி மன்றம் மனித உரிமை அடிப்படையில் மரண தண்ட னையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட உள்ளது.

மரண தண்டனை கூடாது என்று முதன்முதலில் இத்தாலியில் 1764இல் செசரே பெக்காரியா என்ற சட்ட வல்லுநர், “குற்றங்களும் தண்டனைகளும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் வலியுறுத்தினார். அக்கட்டுரையில், “காட்டுமிராண்டி நிலையிலிருந்து நாகரிகச் சமூகமாக மாறுவதற்கான வழிமுறைகளில் மரணதண்டனை ஒழிப்பு என்பது முதன்மையான தாகும். ஒருவருடைய உயிரைப் பறிக்க எப்படி எவருக் கும் உரிமையில்லையோ, அதேபோல, உயிரைப் பறிக்கும் உரிமை இல்லை. அரசுக்கும் மரணதண்டனை விதிப்பதாலேயே சமூகத்தில் கொலைகள் நிகழ்வதைத் தடுத்துவிட முடியாது. கொலைக்குச் சமூகச் சூழலும் பெருங்காரணம்” என்று மிகத் தெளிவாகக் குறிப் பிட்டுள்ளார்.

ஆயினும் மரணதண்டனை தேவையா? இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக் கிறது. மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப் படும் அமெரிக்காவில்தான், பள்ளிச் சிறுவர்கள் கூட துப்பாக்கியால், உடன்படிக்கும் மாணவர்களைச் சுடு வதும், கொலைகளும் மிகுதியாக நடக்கின்றன. இந்தியா வில் பிரித்தானிய ஆட்சியில் 1860இல் உருவாக் கப்பட்ட குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது ஏற்படுத்தப்பட்டது.

உலகில் போர்ச்சுகல் நாடுதான் 1976இல் முதன் முதலாகச் சட்டப்படி மரண தண்டனையை ஒழித்தது. அதன்பின் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் மரண தண்டனை ஒழிப்பில் முன்னோடியாக விளங்கின. ஆனால் கியூபாவில் மரண தண்டனைச் சட்டம் நீடிக் கிறது. ஆயினும் 2003ஆம் ஆண்டுக்குப் பின் கியூபாவில் எவரும் தூக்கிலிடப்படவில்லை. அய்ரோப் பாவில் பெலாரஸ் நாடு தவிர, மற்ற நாடுகளில் மரணதண்டனை இல்லை. ஆப்பிரிக்க நாடுகளில் கூட சிலவற்றில் ஏட்டளவில் இச்சட்டம் நீடித்தாலும், பல ஆண்டுகளாக மரணதண்டனை நிறைவேற்றப்பட வில்லை. ஆனால் அகிம்சையை உலகிற்கே அளித்த புத்தர் முதல் காந்தியார் வரையில் பல சான்றோர்கள் வாழ்ந்த இந்தியாவில் மட்டும் மரண தண்டனைச் சட்டம் நீடிப்பது அவலமல்லவா?

உலக அளவில் கடந்த இருபது ஆண்டுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு பெருகிவருகிறது. அய்க்கிய நாடுகள் மன்றத்தில் 193 நாடுகள் உள்ளன. 2007ஆம் ஆண்டு மரணதண்டனைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை 104 நாடுகள் ஆதரித்தன. 54 நாடுகள் எதிர்த்தன. 29 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வில்லை. 2012இல் இத்தீர்மானத்தை 111 நாடுகள் ஆதரித்தன. 41 நாடுகள் எதிர்த்தன. 34 நாடுகள் வாக் கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்தியாவில் 2012 திசம்பர் 16 அன்று இரவு தில்லியில், ஓடும் பேருந்தில் ‘நிர்பயா’ என்று ஊடகங் களால் பெயரிடப்பட்டுள்ள, 23 அகவை மருத்துவ மாணவி கொடூரமான முறையில் கூட்டாக வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, நிர்வாணமாக ஓடும் பேருந்திலிருந்து வீசி எறியப்பட்ட நிகழ்ச்சி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று மகாராட்டிர மாநிலம் கயர்லாஞ்சில் தாழ்த் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பய்யாலால் போட் மாங்கே வின் மனைவியும் 19 அகவை மகளும் நிர்வாண மாகத் தெருவில் இழுத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். நிர்பயா மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்தியாவே கொதித்தெழுந்ததுபோல கயர் லாஞ்சின் தலித் பெண்களுக்காக ஏன் குரல் கொடுக்க வில்லை?

நிர்பயாவுக்கு மிகச்சிறந்த மருத்துவம் அளிக்கப்பட்டது. அவரும் தீரமுடன் வாழ்ந்து காட்ட வேண்டுமென்று போராடினார். ஆயினும் இறந்துவிட்டார். அவரை இந்நிலைக்கு ஆளாக்கிய ஆறு குற்றவாளிகளையும் தூக்கில் போட வேண்டும் என்ற சீற்றம் இந்தியா முழுவதும் கடலலை போல் ஆர்ப்பரித்தது. அதனால் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து ஆராய நீதிபதி வர்மா தலைமையில் ஒரு குழு அமைக் கப்பட்டது. அதுவரையில், கற்பழிப்புக் குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பதாக இருந்தது.

இதற்கிடையில் நடுவண் அரசு அரசியல் ஆதாயத் துக்காக, பாலியல் வல்லுறவு குற்றத்திற்கு மரண தண்டனை என்கிற அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. நீதிபதி வர்மா குழு அளித்த அறிக்கையில், “கற்பழிப்பு வழக்குகளில் விரைவில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். குற்றவாளிக்கு அதிகபட்சமாக வாழ்நாள் தண்டனை அளிக்கலாம். அத்தண்டனை, குற்றவாளி இறக்கும் வரையில் சிறையில் இருப்பது என்பதாகவும் இருக்கலாம். மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் சிறப்புக் காவல் படையினருக்கும் இதே தண் டனை வழங்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நடுவண் அரசு, பாலியல் வல்லுறவுக் குற்றத்துக்கு மரண தண்டனை வேண்டாம் என்கிற வர்மாவின் கருத்தை ஏற்கவில்லை. கற்பழிப்புக் குற்றத் துக்கு மரண தண்டனை என்ற சட்டத்தை நாடாளு மன்றத்தில் பா.ச.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது.

சிறப்பு ஆயுதப்படையினருக்கும் இச்சட்டம் பொருந்த வேண்டும் என்கிற வர்மா குழுவின் பரிந்துரையை யும் நடுவண் அரசு புறக்கணித்துவிட்டது. ஆயுதப்படை யினரின் சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது 1958-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீரிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் இது நடப்பில் உள்ளது. இந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களை ஆயுதப் படையினர் கொல்கின்றனர்; பெண்களைக் கற்பழிக்கின்றனர். 1979 முதல் மணிப்பூரில் ஆயுதப் படையினரால் கொல்லப்பட்ட 1,528 பேரின் பட்டியல் 2012 செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தில் தரப்பட்டது.

அதன் அடிப்படையில் நீதிபதி சந்தோஷ் எக்டே தலைமையில் மூவர் கொண்ட குழுவை உச்சநீதி மன்றம் அமைத்தது. இக்குழு அளித்த அறிக்கை, ஆயுதப் படையினர் தமக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி எண்ணற்ற மனித உரிமை மீறல்களை யும், பாலியல் கொடுமைகளையும், படுகொலைகளையும் செய்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

2004ஆம் ஆண்டு மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஆயுதப்படை முகாமில் தங்கஜம் மனோரமா தேவி என்ற இளம்பெண் கொடிய முறை யில் துன்புறுத்தப்பட்டு, வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து ஆயுதப் படை தலைமை அலுவலகத்தின் முன், மணிப்பூர் மகளிர் சிலர் ஆடையின்றி ‘எங்களைக் கற்பழியுங்கள்’ என்ற பதாகையுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இச்செய்தி அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. இக்கொடிய ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று இளம்பெண் இரோன் ஷர்மிளா 2000 நவம்பர் 4 முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கட்டாயப்படுத்தப்பட்டு மூக்கின் வழியாக அவருக்கு உணவு செலுத்தப்படுகிறது. தில்லி மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு ஒப்பாரி வைக்கும் அரசியல் கட்சிகள், ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதற்கு ஏன் முன் வரவில்லை? நிர்பயா போன்ற எண்ணற்ற பெண்கள் காவல்துறையினராலும், இராணுவத்தினராலும் சொல் லொணா பாலியல் அளவில் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனரே!

நிர்பயா மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய ஆறு பேரில் அகவையில் மூத்த இராம்சிங் (34) சிறையிலேயே தூக்குப் போட்டுக் கொண்டான். முகேஷ் சிங் (26), அக்ஷய தாக்கூர் (28), குப்தா (19) வினய் சர்மா (20) ஆகிய நால்வருக்கும் தில்லி விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. மற் றொரு குற்றவாளி முன்னாவுக்கு 17 அகவை என்பதால் சிறுவன் என்ற பிரிவின் கீழ் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. இந்த ஆறு பேரும் இராஜஸ் தான், உ.பி., பீகார் மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி தில்லிக்கு வந்த ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். பொதுவாக நீதி வழங்கப்படுவதில்-தண்டனை விதிக்கப்படுவதில் வர்க்கச்சார்பும், சாதியப் பின்னணியும் காரணிகளாக உள்ளன. சிறைகளில் இருப்போரில் 90 விழுக்காட்டினர் கீழ்த்தட்டுச் சாதிக ளைச் சார்ந்த ஏழை எளிய மக்களாகவே இருக்கின்ற னர். அமெரிக்காவிலும் இதேநிலைதான். கறுப்பின மக்களே மிகப்பெருமளவில் சிறைகளில் இருக்கின்றனர்.

ஒன்பது மாதங்களுக்குள் நிர்பயா வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டமை அனைவராலும் வரவேற்கப்பட்டது. வர்மா அறிக்கையிலும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கற்பழிப்பு வழக்குகள் விசாரணைக்கு வருவதற்கே ஆறு முதல் எட்டு ஆண்டுகளாகின்றன. தற்போது இதுபோன்று 90,000 வழக்குகள் நிலு வையில் உள்ளன. மேலும் சாதாரண மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படாத மாநில அரசு களும், நிர்வாகமும் காவல்துறையும் நீதித்துறையும் இந்தியாவில் இருப்பதற்கான ஒரு சான்று-பெரும் எண்ணிக்கையில் உள்ள விசாரணைக் கைதி களாவர். இந்தியாவில் மொத்தமுள்ள சிறைகளில் 3,32,782 பேரை மட்டுமே கைதிகளாக வைக்க முடியும். ஆனால் தற்போது 2,04,480 பேர் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். பல விசாரணைக் கைதிகள் அவர்கள் செய்த குற்றத்துக்குரிய தண்டனைக் காலத்தைவிட அதிகமான ஆண்டுகளாகச் சிறையில் இருக்கின்றனர். அண்மையில் நடுவண் அரசின் சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில், “வழக்குப் பதிவு செய்யப்படுவோரில் ஆறு விழுக்காட்டினர் மட்டுமே தண்டனை பெறுகின்றனர்” என்று கூறியிருக்கிறார் (தினமணி, 23-10-13). காவல்துறையும், வழக்கு ரைஞர்களும், நீதித்துறையும் அப்பாவி ஏழை, எளிய மக்களை எப்படியெல்லாம் அலைக்கழித்துத் துன் புறுத்துகின்றனர் என்பதையே இது காட்டுகிறது. எனவே இத்துறைகள் உடனடியாகச் சீர்திருத்தம் செய் யப்பட வேண்டும்.

1982இல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பச்சன்சிங் எதிர் பஞ்சாப் அரசு வழக்கில், அரிதி னும் அரிதான வழக்குகளில் (Rarest of rare cases) மட்டுமே மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியது. இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்படும் எல்லா வழக்குகளி லும் ‘அரிதினும் அரிதான’ என்ற சொலவடை பயன்படுத்தப்படுகிறது.

2013 செப்டம்பரில் நிர்பயா வழக்கில் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை அளித்த தீர்ப்பில், ‘சமூகத்தின் ஒட்டுமொத்த உணர் வுக்கு - எதிர்பார்ப்புக்கு’ (Collective conscience of the community) மதிப்பளித்து இம்மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தான சொற்கோவையாகும். செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் ஜாட் சாதி இளம் பெண்ணை முசுலீம் இளைஞன் ஒருவன் கேலி செய்தான் என்ற தீக்குச்சியால் மூண்ட ஜாட் சாதியினர் - முசுலீம்கள் மோதலில் 54 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களில் பெரும் பாலோர் இசுலாமியர்கள். 40000 முசுலீம்கள் தாக்குதலுக்கு அஞ்சித் தம் வீடுகளை விட்டு வெளி யேறி அகதி முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர். இந்த வழக்கில் சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வு என்பது எப்படி நீதிமன்றத்தால் கணிக்கப்படும்? இதேபோன்று குசராத்தில் மோடி ஆட்சியில் 2002 ஆம் ஆண்டு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்டனரே - அதை ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் உளவியல் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?  

மரணதண்டனை, பெண்கள் மீதான வன்கொடுமைகள் இழைக்கப்படுவதைத் தடுக்கும் என்பது ஒரு மாயை. மேற்குவங்காளத்தில் 14 அகவை பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தனஞ்செய் சட்டர்ஜி என்ற இளைஞன் 2004 ஆகத்து 14 அன்று தூக்கிலிடப்பட்டான். அதனால் மேற்குவங்காளத்தில் பாலியல் குற்றங்கள் குறைய வில்லை. இந்தியக் குற்றப்பதிவு ஆணையத்தின் அறிக்கையின்படி, மேற்குவங்காளத்தில் 2012இல் 2,046 கற்பழிப்புகள், 4,168 பெண்கள் கடத்தல், 593 வரதட்சணைச் சாவுகள் பதிவாகியுள்ளன. எனவே எத்தகைய கடுமையான சட்டமும் குற்றங்கள் நிகழ்வதைத் தடுப்பதில்லை என்பது உலக அளவில் ஆராய்ந்து அறியப்பட்ட முடிவாகும்.

எனவே பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு - இளைஞர்களின், ஆண்களின் பாலியல் குறித்த இழிவான மனநிலைக்கு, நம் சமூகத்தில் மதஇதிகாசங்களில் உள்ள கதைகள், சாதிய மரபுகள், மேல்சாதி, கீழ்ச்சாதி அடிப்படையிலான பழக்கவழக் கங்கள் என்ற பெயரால் பெண்களைப் பற்றிய தவறான-இழிவான கருத்துகளும் கண்ணோட்டங்களும் காரணங்களாகும்.

நவீன ஊடகங்களும் ஆண்களின் வக்கிர பாலுணர்வுக்குத் தீனி போடுகின்றன. எல்லா நிலை களிலும் உள்ள ஆணாதிக்க மனப்போக்கை நீக்கவும், ஆணும் பெண்ணும் எல்லா வகையிலும் சமம் என்ற எண்ணத்தையும் நடைமுறையையும் வளர்ப்பதே வீடுகளிலும், வீதிகளிலும், சமூகத்திலும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை மட்டுமின்றி, பிற வகையான அடக்குமுறைகளையும் ஒழிப்பதற்கான வழிகளாகும். எனவே மரண தண்டனை எவ்வகையிலும் தீர்வாகாது. எல்லா வகையான குற்றங்களுக்கான மரண தண்டனைச் சட்டங்களுக்கும் இது பொருந்தும்! எனவே மரணதண்டனை உடனடியாக ஒழிக்கப்படவேண்டும்.

Pin It