. ரத்தப் பிரிவுகளான A, B, O, AB ஆகியவற்றைக் கண்டறிந்தவர் கார்ல் லேண்ட்ஸ்டினர் ஆவர். 1901 ஆம் ஆண்டு இதை உலகிற்கு அவர் அறிவித்தார்.

2. ஆர்வில் ரைட், வில்பர் ரைட் ஆகிய இரு சகோதரர்கள் 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாள் முதன் முதலாய் விமானத்தில் பறந்தார்கள். ஒரு மலை உச்சியிலிருந்து 12 அடி உயரத்தில் 12 வினாடிகள் மட்டுமே முதன் முதலில் அவர்களால் பறக்க முடிந்தது. அதே நாளில் மூன்று முறை பறந்தனர். மூன்றாவது முறை அவர்களால் 852 அடி உயரத்தில், 59 வினாடிகளுக்கு பறக்க முடிந்தது.

3. மார்க்கரேட் ரஸ்க் என்ற 47 வயது நிரம்பிய டச்சு நாட்டு பெண் மருத்துவர்தான் முதன் முதலில் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவராக மருத்துவமுறைகளின்படி அறியப்பட்டார். 1977ஆம் ஆண்டு இது நடந்தது.

karl_lansdinar 4. 1911 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி குஜராத் மாநிலம் அலகாபாத்திலிருந்து நைனி ரயில் நிலையத்திற்கு, 6000 கடிதங்களுடன் ஒரு குட்டி விமானம் பறந்துச் சென்றது. இதுவே உலகின் முதல் விமான அஞ்சல் போக்குவரத்து ஆகும்.

5. லேசலோ பிரோ என்ற அங்கேரி நாட்டு சிற்பி தான் உருள் முனைப் பேனாவை 1938ஆம் ஆண்டு முதன் முதலில் உருவாக்கினார்.

6. உலகின் முதல் அழகிப்போட்டி பெல்ஜியம் நாட்டில் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் நாள் நடந்தது. இப்போட்டியை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. பதினெட்டு வயது நிரம்பிய கிரியோல் அழகியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு 5000 பிரான்ஸ் பரிசளிக்கப்பட்டது.

7. ஜேம்ஸ் பில்லன்ஸ் என்பவர்தான் 1914ஆம் ஆண்டு, எடின்பர்க் உயர்நிலைப்பள்ளியில் முதன் முதலாக கரும்பலகையை உருவாக்கி பயன்படுத்தினார்.

first_bus 8. 1662 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில், பாரிஸ் நகரில் எட்டு இருக்கைகளைக் கொண்ட பேருந்து முதன்
முதலாக பொதுமக்கள் உபயோகத்திற்கென இயக்கப்பட்டது. பாஸ்கல் எனும் தத்துவ அறிஞர் இதை நண்பர்களோடு இணைந்து நடத்தினார்.

9. கேட் பார்டன் என்ற பெண்மணிதான் உலகின் முதல் பேருந்து நடத்துனர். 1909ஆம் ஆண்டு அவரின் தந்தையார் நடத்திய பேருந்து நிறுவனத்தில் அவர் பணி புரிந்தார். கேட் பார்டனின் சகோதரிகளான ரூத், ஈடித், ஆகியோரும் நடத்துனர்களாகப் பணிபுரிந்தனர்.

10. குழந்தைகள் படிப்பதற்கான முதல் புத்தகம் ஆங்கிலத்தில் தான் முதலில் வெளியானது (பாட புத்தகம் அல்லாத நூல்) 1563 ஆம் ஆண்டு இந்த நூல் அச்சிடப்பட்டது.