முகலாய மன்னர்கள் இந்துக்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றினார்கள். வாள்களைக் கொண்டே இஸ்லாதைப் பரப்பினார்கள் என்றெல்லாம் சங்பரிவாரங்கள் பரப்புரை செய்து வருவதுண்டு. அதேபோல, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பணம் கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பணத்தை திருடிக் கொண்டு ஓடும் பிக்பாக்கெட் திருடன்... ஓடிக் கொண்டே அதோ ஓடு றான் என்று அடுத்தவனை கை காட்டிவிட்டு பொது மக்களுடன் சேர்ந்து கொண்டு திருடனைப் பிடிக்க போகிறவனை ப்போல பாசாங்கு செய்வான். இது அப் படியே சங்பரிவாருக்குப் பொருந் தும்.

நாட்டில் கலவரத்தை ஏற்படுத் துவார்கள்! தேசப்பற்று மிக்கவர் களாக வேடமிடுவார்கள்! ஆயுதப் பயிற்சி எடுப்பார்கள்; முஸ்லிம் பகுதிகளில் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருப்பதாகப் புலம் புவார்கள்! குண்டு வைத்துப் பொது மக்களைக் கொல்வார் கள்; அந்தப் பழியைத் தூக்கி முஸ்லிம்கள் மீது போடுவார்கள்!

இப்படி அடுத்தவர் மீது பழி யைத் தூக்கிப் போடும் கொள் கைக்குச் சொந்தக்காரர்களான சங்பரிவாரத்தினர்! கடந்த ஜூலை 14ம் தேதி கர்நாடக மாநி லம் உடுப்பியில் சரலெபெட்டு சிவ பாடி உமாமகேஸ்வரி கோவி லுக்கு அருகில் வசித்து வரும் புஷ்ரா என்ற முஸ்லிம் பெண்ணை மதம் மாறும்படி கட்டாயப்ப டுத்தி மதம் மாற்றியுள்ளனர்.

தனது கணவர் ஜாஃபர் மற் றும் குழந்தைகளான இர்பான், பாத்திமா யாஸ்மீன், ஜலாலுத் தீன் ஆகி யோருடன் கடந்த 8 ஆண்டுகளாக உமா மகேஸ்வரி கோவிலருகே வசித்து வருகிறார் புஷ்ரா.

கடந்த 14ம் தேதி பஜ்ரங்தகள் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரது தலைமையில் வந்த பஜ்ரங்தள் தொண்டர்கள் புஷ்ராவின் கண வர் ஜாபரின் முன்னிலையிலேயே அவரது வீட்டிற்குள் புகுந்து புஷ்ராவை கோவிலுக்கு இழுத் துச் சென்று இந்துவாக மதம் மாறும்படி கட்டாயப்படுத்த... கடுமையான எ திர்ப்பு தெரிவித்த புஷ்ரா, தான் இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை என்று உறுதி காட்டியிருக் கிறார்.

இதனால் கோபமடைந்த பஜ் ரங்தள் வெறியர்கள் புஷ்ராவின் குழந்தைகளைக் கொன்று விடுவ தாக மிரட்டியுள்ளனர். உமா மகேஸ்வரி கோவில் பூசாரியோ, புஷ்ராவின் மன்றாட்டத்தை அலட்சியப்படுத்தி யபடியே வலுக்கட்டாயமாக பிரவர்த்தன் (மத மாற்றச் சடங்கு) செய்திருக் கிறார்.

இந்த கட்டாய மதமாற்றத் திற்கு புஷ்ராவின் கணவர் ஜாபரும் உடந்தையாக இருந்திருக்கிறார். அவர், பு ஷ்ராவை திருமணம் செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பே இஸ்லாத்தை ஏற்று பிர சாந்த் ஷெட்டி என்ற தனது பெய ரையும் ஜாபர் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார் இஸ்லாமிய முறைப்படிதான் புஷ்ராவை திரு மணம் மணமுடித்துள்ளார் ஜாபர்.

கடந்த சில வருடங்களாக பஜ் ரங்தள் தீவிரவாத அமைப்பினரு டன் ஜாபருக்கு நட்பு ஏற்பட்டி ருக்கிறது. பஜ்ரங்தள்காரர்கள், புஷ்ராவை இந்துவாக மாற்றி விடு என்று தொடர்ந்து ஜாபரி டம் சொல்லி வந்துள்ளனர். ஆனால் புஷ்ரா இஸ்லாமியக் கொள்கையில் உறுதியுடன் இருந் ததால் ஜாபரின் முயற்சிகள் பல னளி க்கவில்லை.

இந்நிலையில்தான் பஜ்ரங்தள் குண்டர்கள் நேரடியாக களமிறங் கியுள்ளனர். காவல்துறை ஐ.ஜி. அசோக் மோகனிடம் புஷ்ரா அளித்த புகாரில், “கடந்த 14ம் தேதி நான் சமையல் செய்து கொண்டிருந்தபோது என் வீட் டிற்குள் நுழைந்த மனோகரன் தலைமையிலான பஜ்ரங்தள் அமைப்பினர் என்னையும், என் குடும்பத் தினரை கட்டாயப்ப டுத்தி கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே வைத்து இந்துவாக மதம் மாற்றும் சடங்கை கோவில் பூசாரி மேற்கொண்டார். எனது மன்றாட்டத்தை அவர் பொருட் படுத்தவில்லை. அவர்கள் என் குழந்தைகளைக் கொன்று விடுவ தாக மிரட்டியதால் நான் அமை தியாகி விட்டேன். நான் இந்து வாக மதம் மாறி விட்டதாக வரும் தவறான செய்திகள் என்னை காயப்படுத்துகின்றன. என்னை கட்டாயப்படுத்தி துன்புறுத்திய அத்தனை பேர் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்...'' என தெரிவித்திருக்கிறார்.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார் ஐ.ஜி. அசோக் மோகன்.

மேலும் புஷ்ராவின் கணவர் ஜாபர், மனோகரை தொடர்ந்து தனது வீட்டில் இரவு நேரங்களில் அனுமதித்து வந்திருக்கிறார். அச்சந்தர்ப்பங்களில் ஜாபர் முன் னிலையிலேயே புஷ்ராவை பாலி யல் சீண்டல்களை செய்து வந்தி ருக்கிறார் மனோகரன்.

இச்சம்பவத்திற்குப் பின் கண வரை விட்டுப் பிரிந்து பிள்ளைக ளுடன் தக்ஷினா கன்னடாவில் வசித்து வரும் புஷ்ரா, “இனி ஜாப ருடன் சேர்ந்து வாழ விரும்ப வில்லை. அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கி றேன்...'' என்கிறார்.

போலீஸில் புகார் அளிக்கக் கூடாது என்று பஜ்ரங்தள் குண்டர்கள் புஷ்ராவை மிரட்டி வருவ தால்... உடுப்பிக்கு வெளியே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐ.ஜி. அசோக் மோகனிடம் வைத்திருக் கிறார் புஷ்ரா. மங்களூர் முஸ்லிம் கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கி றது புஷ்ரா விவகாரம்

பஜ்ரங்தள் போன்ற அமைப்பு கள் மத மாற்ற நடவடிக்கைகளை பகிரங்கமாக, மிரட்டி செய்து வரும் நி லையில், ஆர்.எஸ்.எஸ். ஸின் அங்கமான ஆர்ய சமாஜம் சைலண்ட்டாக மதம் மாற்றும் வைபவங்களை நடத்தி வருகிறது. இதில் பெரும்பாலும் கம்ப்யூட் டர் துறையைச் சேர்ந்த முஸ்லிம், கிறிஸ்தவப் பெண்களை குறி வைத்தே ஆர்ய சமாஜம் தனது மத மாற்றத் திட்டங்களை நிறை வேற்றி வருகிறது என்பது பலருக் குத் தெரியாத செய்தி.

- ஃபைஸல்

Pin It