பாஜகவை வீழ்த்த வழிகாட்டும் ‘தமிழ்நாடு’

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி ஒரு நூற்றாண்டு ஆகிறது. அதன்பிறகு பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டது முதல் இப்போது வரை தமிழ்நாடு அடைந்திருக்கிற சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி என அனைத்துக்குமே மையப்புள்ளி இடஒதுக்கீடுதான். அதனால்தான் இந்தியாவின் மற்றெந்த மாநிலங்களையும் விட இடஒதுக்கீடு, சமூக நீதி சிந்தனைகளில் இன்றளவிலும் தமிழ்நாடுதான் முன்னோடியாக இருக்கிறது. நீட், புதிய கல்விக்கொள்கை போன்ற பாஜகவின் சூழ்ச்சிகரமான திட்டங்களை உடனுக்குடன் எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மதவாத வெறுப்புணர்வை உள்வாங்காத மாநிலம் தமிழ்நாடு. ஒட்டுமொத்தத்தில் சமூகநீதி களத்துக்கான சிந்தனைப் போக்கைக் கட்டமைக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ்நாட்டின் இந்த ‘திராவிட மாடல்’ சிந்தனைப்போக்குதான் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியாகவும், சவாலாகவும் இருந்து கொண்டிருக்கிறது. எனவே பாஜகவை வீழ்த்த இந்த சிந்தனைப்போக்கு கையிலெடுக்க தேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இருக்கிறது. இதை காங்கிரஸ் கட்சி நன்கு உணர்ந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டும் ஆவணமாக, அக்கட்சியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் அமைந்திருக்கின்றன. 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு இவ்வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மாநில சுயாட்சி உரிமைகள், மாநிலங்களின் நிதி உரிமைகள், கல்வி உரிமைகளை பாதுகாப்பதற்கான வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதிலும் மிகக் குறிப்பாக, மக்களின் உணவு- உடை- காதல் திருமணம் போன்ற தனிப்பட்ட உரிமைகளில் எக்காரணம் கொண்டும் அரசு தலையிடாது என்ற வெளிப்படையான அறிவிப்பும், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியால் வெறுப்புப் பேச்சு, மதமோதல்கள், வெறுப்பு குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியும் இன்றைய சூழலில் இந்தியாவுக்கு மிக அவசியமான வாக்குறுதிகள். திராவிட இயக்கப் பார்வையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாக்குறுதிகளை வரவேற்பதோடு, மக்களிடத்திலும் கொண்டு செல்வோம்.

முக்கிய வாக்குறுதிகள்:

விடுதலை இராசேந்திரன்