சிவகங்கை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இந்தியா தொடர்ந்து தந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். இதே சிதம்பரம், கடந்த பிப்.15 ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் பேசியது மறந்துவிட்டதா?
“விடுதலைப்புலிகள் ஆயுதத்தை கீழே போடட்டும்; பிறகு வேண்டுமானால் போர் நிறுத்தம் செய்ய முயற்சிக்கலாம்” - என்று ஆணவத்தோடு பேசியவர் இதே சிதம்பரம் தான். இப்போது - ‘காக்காய் உட்கார பணம் பழம்’ விழுந்ததைப்போல் உலக நாடுகள் நிர்ப்பந்தத்துக்கு ராஜபக்சே நடத்த முன் வந்துள்ள நாடகத்தை, தமது சாதனையாக்கி, வாக்காளர்களை ஏமாற்றத் துடிக்கிறார்.
இந்தியாவின் துரோகத்தை தமிழர்களிடம் மறைக்க முடியாது!
Dr. V. Pandian | |
2009-04-21 06:15:00 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
அரசியலின் முதல் பலி உண்மை. யாரை நம்புவது? மெத்தப் படித்தவர். டெல்லியிலும் வேட்டி கட்டி தனது தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக்காப்பவர். தமிழ்ப் பண்பாட்டின் முதன்மையான அங்கம் உண்மை ஆயிற்றே! அது தெரியாதா இவருக்கு? |