periiyarr 450ஓட்டல்காரன் - அன்னதானப் பிரபு ஆவானா ? சம்பள உபாத்தியாயர் - குருநாதனாவானா ? தாசி - காதலியாவாளா? என்பது போலத்தான் தன்தன் நலனுக்கு, தன்தன் பொறுப்புக்கு ஆகக் காரியம் செய்யும் எவனுடைய காரியம் - எப்படிப் பட்டதாயினும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக்கூடியதாகாது.

அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் - அதாவது தன்னைப் பற்றிய கவலையில்லாமல், பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துக் கொண்டு தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான்.

அத்தொண்டால் பாதகமடையும் தனிப்பட்டவர்கள் - தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம்; அது, பொதுவாக மதிக்காததாகாது.                     

(விடுதலை 08.04.1930)

- பெரியார்

Pin It