ஆக்ராவில் மோடி அமர்ந்திருந்த நாற்காலி, கூட்டத்தில் 4.5 லட்சத் துக்கு ஏலம் போனது.   - செய்தி

நாற்காலியோட நிறுத்துங்க; மோடியையும் சேர்த்து ஏலம் விட்டுடாதீங்க...

இந்தியாவில் நகரங்களில் 70 சதவீதம் பேர் ஏழ்மையில் வாழ்வதாக அரசு நியமித்த எஸ்.ஆர். ஹஷீம் குழு தந்த அறிக்கையை ஓராண்டு காலமாக மத்திய அரசு முடக்கிப் போட்டு விட்டது. - செய்தி

எப்படியோ ஏழ்மையை முடக்கிப் போட்டிருக்கிறார்களா, இல்லையா? எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது.

மதங்கள் நடத்தும் புனிதச் சடங்கு களினால் எழும் புகை மூட்டங் களால் பசுமை இல்லங்கள் பாதிக் கப்பட்டு, இமயமலைப் பனிக்கட்டி களும் உருகி, பூமி வெப்பமடைய காரணமாகிவிடுகின்றன. - ஆய்வாளர்கள் தகவல்

கவலைப்பட வேண்டாம்; பூமியைக் காப்பாத்துறதுக்கும் யாகம் கைவசம் இருக்கு!

முடிகாணிக்கை வருவாயை அதிகரிப்பது குறித்து திருமலை தேவஸ்தானம் தீவிர ஆய்வு. - செய்தி

பக்தர்களுக்கு நீண்ட கூந்தல் வளர அமேசான் காடுகளின் மூலிகைகளைக் கொண்டு வந்து எண்ணெய் தயாரிப்பது பற்றி தேவஸ்தானம் பரிசீலிக்கலாமே!

திருப்பூரில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சந்தையில் வெங்காயம் திருட முயன்ற இருவர் கைது .- செய்தி

அய்யய்யோ... இது திருட்டு வழக்கில்லையே! தேசத் துரோக குற்றமாச்சே....!

கிரிக்கெட்டில் கோடி கோடியாக பொருள் ஈட்டிய - சமூகத்துக்கு எந்த சேவையும் செய்யாத சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ விருதா? - நீதிமன்றத்தில் வழக்கு

அப்படி சேவை எதுவும் செய்யா மல், சமூகத்தைக் காப்பாற்றியதற் காகத்தான் இந்த விருது!

1987 இல் ‘தண்ட’த்தை மடத் திலேயே விட்டுவிட்டு, தலை மறைவானவர் ஜெயேந்திரர். - தினமலர் செய்தி

‘சாமி’கள் மவுன விரதத்தைப் போல அது ‘தலைமறைவு விரதம்’ தெரிஞ்சுக்குங்க!

மாடுகளிடம் பரவி வரும் ‘கோமாரி’ நோயைத் தடுக்க பன்றிக் கொழுப்பு மருந்தாக தரப்படுகிறது.      - செய்தி

இராமகோபாலன் ஜி, பார்த்தேளா? புனித கோமாதாவுக்கு, பன்றிக் கொழுப்பை ஊட்டு றாளாம்! ‘இந்து’ விரோதிகளை விடாதீங்க, ஜி!

சிறப்பு வினா... விடைகள்...

சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன், விஜயேந்திரன் விடுதலை.   - செய்தி

‘ஆன்ம விடுதலை’ கிடைக்கிறதோ இல்லையோ; இந்த ‘பூத’ உடலுக்காவது விடுதலை கிடைத்ததே!

நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டபோது ஜெயேந்திரர் முகம் இறுக்கத்துடன் காணப் பட்டது. விஜயேந்திரர் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார்.    - செய்தி

அப்படி என்ன சிந்தித்துவிடப் போகிறார்கள்? போயும் போயும் ஒரு ‘சூத்திர’ நீதிபதி நம்ம ‘தலைவிதி’யை நிர்ணயிக்கிறானே என்று சிந்தித்திருப்பார்கள்!

தீர்ப்பு வெளிவந்தவுடன் செய்தியாளர்கள், ஜெயேந்திரனிடம் பேச முற்பட்டபோது அவர் கையை மட்டும் அசைத்தார். ‘சுவாமிகள் மவுனவிரதம்’ இருப்பதாக சீடர்கள் தெரி வித்தனர். - செய்தி

மவுன விரதம் இருப்பதாக - சாமிகள் சீடர்களிடம் கூறியிருப்பார் போல!

தீர்ப்பு வந்தவுடன் ஜெயேந்திரர் புதுச்சேரி யிலிருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து காரில் திருச்செந்தூர் போய் சாமி தரிசனம் செய்தார். - செய்தி

ஆதி சங்கரர் நடந்தே போனார்; அவரது ‘வாரிசு’ தனி விமானத்தில் பறக்கிறது.

பாரத வரலாற்றில் மகான்கள் தங்கள் தவவலிமையில் இன்னல்களைக் கடந்து இறைவனின் ஆட்சியை நிறுவிய வரலாறு மீண்டும் நிகழ்ந்துள்ளது.   - இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை

அரசு சாட்சிகளைப் பல்டி அடிக்க வைப்பதற்கும் ‘தவ வலிமை’ பயன்படும் போல!

தீர்ப்பு வந்தவுடன் சீடர்கள் புதுச்சேரி நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதி தேவதை சிலை முன் தேங்காய் உடைத்து பூஜை செய்ய முயன்றனர்.   - செய்தி

‘நீதி’ தேவதை யை இந்து கடவுள் பட்டியலில் சேத்துட்டேளா? அது ‘சூத்திரன்’ வடித்த ‘பிரதிஷ்டை’ செய்யப்படாத சிலை, தெரியுமோ?

திருச்செந்தூர், திருப்பதியில் ஜெயேந்திரர் தரிசனம் செய்தார். - செய்தி

வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு எப்போது ‘விஜயம்’ சாமி?

காஞ்சி சங்கர மடத்தில் சீடர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி. - செய்தி

நல்லா கொண்டாடுங்கோ! வெடிச் சத்தம் சங்கர்ராமன் குடும்பத்துக்கு கேட்கனும்!