ஏசு, கோவில்களைக் கள்ளர்குகை என்றார், புத்தர் பார்ப்பனியத்திற்கு அஸ்தி வாரத்தில் வெடி வைத்தார், முகமது நபி விக்கிரகங்களை, கடவுளை பரிகாசம் செய்யும் சின்னம் ஆதலால் கண்ட கண்ட பக்கம் அதை வெறுங்கள் என்றார், காந்தியார் கோவில்களை குச்சுக்காரிகள் விடுதி என்றார். மற்றும் பல பெரியார்கள் கல்லிலும், மரத்திலும், செம்பிலும், காரை யிலும் சித்திரத்திலும் கடவுள் இருப்பாரா மடையர்களே என்றார்கள். இதைவிடவா நாம் சொல்லுகிறோம்? இவ்வளவு கூட நாம் சொல்லுவதில்லையே, இப்படியெல்லாமும் நாம் செய்வதில்லையே, அப்படி இருக்க இந்தப் பார்ப்பனர்கள் பழி சுமத்தி நம்மை ஒழிக்கப் பார்க்கிறார்கள்

periyar04நம் கழகச் சார்பாக சென்ற மாதம் இரு கூட்டங்கள் நடந்தன. அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 1. சென்னை மந்திரிசபை அமைப்பு 2. இங்கிலாந்து தூது கோஷ்டி தோல்வி 3. மதுரை கலவரம் முதலிய காரியங் களாகும். மந்திரி சபை அமைப்பு பற்றி காங்கிரஸ் தலைவர்களுக்குள் எவ்வளவு கோளாறுகள் இருந்தாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.

ஆனால் அதில் ஆந்திரர், தமிழர் என் கின்ற பாஷை உணர்ச்சியும், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற வகுப்பு பேத உணர்ச்சியும், அந்நிய மாகாணத்தார் பிரவேசம் கூடாது என்கின்ற மாகாண உணர்ச்சியும், யார் முதல் மந்திரி, யார் சாதாரண மந்திரி என்ற பதவி வேட்டைப் போராட்டமும், காங்கிரசுசார் இதுவரை குறை சொல்லி வந்த மற்ற கட்சிகள் நடத்தையையே சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். காங்கிரகாரர்கள் அல் லாமல் தேவர்களே வந்து மந்திரி சபை நடத்தினாலும் இந்தப் போராட்டங்கள் நடந்துதான் தீரும்.

இது அரசியலுக்கு இயற்கையே ஆகும். ஏனெனில் அர சியல் என்பது வடிகட்டிய சுயநலம், பித்தலாட்டம். ஆகவே எந்தப் பித்தலாட் டமும், ஏன், தெய்வீகமும் சில நாள் களுக்குத்தான் செல்லும். இது எப்படி இருந்தாலும் நமக்குக் கவலையில்லை. நம்மைப் பொறுத்தவரை நாம் இந்த மந்திரிசபையினால் நல்லது கிடைப்பதை நன்றியோடு பெற இருக்கிறோம். கேடு ஏற்பட்டால் போராடவும் பின்வாங்கப் போவதில்லை. போருக்குத் தயாராகவே இருக்கிறோம்.

இந்தி வந்தால் அனுமதிப்போம் என்று நான் சொன்னதாகச் சொல்லு கிறார்கள். அது தவறு. அதைவிட முக்கிய வேலை இருக்கிறது. வந்தால் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக் கிறார்கள். ஏற்படுத்தி விட்டு விட்டோம் என்றுதான் சொன்னேன். மற்றும் நம் பேச்சுக்களில் பார்ப்பனர்களைக் குறை கூறியதாக சில பார்ப்பனர்கள் பேசிக் கொண்டார்களாம்.

அதுவும் தவறு, நாம் அவர்களைக் குறை கூறுவதே இல்லை. நம் குறைகளைப் பற்றிப் பேசினால் அது அவர்களைக் குறைகூறுவதாகக் கருது கிறார்கள். அக்குறைகள் நீங்கும்படி சட்டம் ஏற்பட்டால் ஒழிய அல்லது அவர்கள் திருத்திக் கொண்டால் ஒழிய இந்த நிலைமை இன்னும் அதிகமாகுமே தவிர, குறையப் போவதில்லை.

ஆதலால் குறையையும் காரணங்களையும் சொல் லுகிறோம். இது அவர்களைத் திட்டு வதாகாது. அவர்களையும் அதாவது, பார்ப்பனர்களையும், நம்மையும் பார்த் தால் நமக்கு இருந்துவரும் குறையும், இழிவும், அசவுகரியமும் எவ்வளவு இருக்கின்றன? இதை அவர்களில் யார் சிந்திக்கிறார்கள்? தங்களைக் குறை கூறுவதாய்க் கருதும் பார்ப்பன சமுகம் இதற்காக என்ன செய்தது? என்ன செய்கிறது? அவர்கள் எப்போதும் அதி காரத்தில் இருப்பவர்கள், மதத்தில் பெரியவர்கள், ஆதலால் அந்த அதிகாரத்தை, மதத்தைக் கொண்டு நம்மை எவ்வளவு பாரபட்சமாகவும், இழிவாகவும் நடத்துகிறார்கள். அவர்கள் பத்திரிகை ஆதிக்கக்காரர்கள்.

அப்பத் திரிகைகளைக் கொண்டும் நம்மக்களை, நம் இயக்கத்தை எவ்வளவு கொடுமை யாக நடத்தி இழித்துக் கூறி நம்மைத் தலையெடுக்க விடாமல் எவ்வளவு வன்நெஞ்சமாய் அக்கிரமம் செய் கிறார்கள்? நம்மையும், நம் தலைவர் களையும், நம் ஸ்தாபனங்களையும் இழிவு படுத்திக் கடும் பழி சுமத்தி நாடெல்லாம் விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். மற்ற மாகாணத்தார் நம்மை இழிவாய்க் கருதுகிறார்கள்.

சென்னை மந்திரி சபை அமைப்பில் பிரகாசம் - ராஜகோபாலாச் சாரி கட்சி சண்டை இருந்தாலும், பிரகாசம் அவர்கள் மீது ஆச்சாரியார் கும்பலுக்கு எவ்வளவுதான் அசூயையும் ஆத்திரமும் இருந்தாலும், கட்சித் தலைவர் தேர்தலில் ஆச்சாரியார் கட்சியார், பிரகாசம் தலைவராக வரும்படியாகத்தான் நடந்து கொண்டார்களே தவிர, முத்துரங்க முதலியார் தலைவராக வருவது பார்ப்பனர் களுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.

ஆச்சாரியார் கூட்டம் உண்மையில் பிரகாசம் கூடாது என்று நினைத்து இருந் தால் அவர் தலைவராக ஆகி இருக்க முடியாது. எனவே பார்ப்பனர்களுக்குள் தங்கள் தங்கள் தனிப்பட்ட காரியம் வரும்போது தான் தங்களுக்குள் போட் டியே ஒழிய, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போட்டி வரும்போது பார்ப்பனர் யாவரும் ஒன்றுதான், நாம் தான் தனிப்பட்ட நமக்கு இல்லாவிட்டால் பார்ப்பனரே வரட்டும் என்று விபீஷணர்களாக நடப்பவர்களாக இருந்து வருகிறோம்.

இன்றும் பார்ப்பன மந்திரிகள் 5 பேர்கள் ஆகிவிட்டார்கள். இன்னும் ஒருவர் வரலாம். முக்கியமான இலாகாக்கள் பணம் கொழிக்கும் இலாகாக்கள் யாவும் அவர்கள் இடமே தஞ்சமடைந்துவிட்டன. வெறுந்தப் பட்டைகள்தான் நம்மவர்கள் இடம் அளிக் கப்பட்டு இருக்கின்றன. இப்படி இருந்தாலும் மந்திரி சபையில் காங்கிரசில் துவேஷப் புகை புகைந்து கொண்டிருக்கிறது.

இனி அடுத்தாற்போல் பிரிட்டிஷ் மந்திரி தூதுகோஷ்டி விஷயம். இது தோல்வி அடைந்ததில் அதிசயமென்ன? காங்கிரசு காரர்கள் (ஆரியர்கள்) ஒரு நாளும் பிரிட் டிஷாரை வெளியேற விடமாட்டார்கள். பிரிட்டிஷார் வெளியேறினால் இந்தியா முஸ்லிம் ராஜ்ஜியமாகிவிடும் என்கின்ற பயம் வடநாட்டுத் தலைவர்களுக்கு (ஆரியர் களுக்கு) உண்டு. ஏனெனில் முஸ்லிம்கள் ஒரே ஜாதி, கட்டுப்பாடுடைய ஜாதியாரா வார்கள். அவர்கள் தவிர்த்த இந்தியர்கள் பல ஜாதி, கட்டுப்பாடு இல்லாத விபீஷ ணர்கள் ஜாதி, ஆதலால் கட்டுப்பாடுடைய ஒரு ஜாதிதான் அவர்கள் யாராய் இருந் தாலும் எவ்வளவு சில தொகையினரானா லும் இந்தியாவை ஆளமுடியும். அதனால் தான் காங்கிரசார் வெள்ளையனை வெளியேற அனுமதிக்க மாட்டார்கள் என்கிறேன்.

ஆனால் வெள்ளையனே வெளியேறு என்று அவர்கள் மக்களை ஏமாற்றப் பித்தலாட்டத்தைச் சொல்லிக் கொண்டே வெள்ளையனோடு ஒப்பந்தம் பேசிக் கொண்டு மேல் ஜாதியாரும், பணக்காரர் களும் ஆன ஆரியர்கள் நன்றாக வாழ வழி செய்து கொள்வார்கள். இதனால்தான் தூது கோஷ்டி தோல்வி என்ற நடிப்பை நடத்தினார்களே ஒழிய உண்மையில் தோல்வி இல்லை. அது வெற்றி பெற்றிருந் தால் முஸ்லிம்களுக்குப் பகுதி ஆதிக்கம் வந்துவிடும். இதற்கு, வருணாசிரமத்திற்கும் பணக்காரர்களுக்கும் பரம பக்தரான காந்தியார் சம்மதிப்பாரா? ஆகவே, தூது கோஷ்டி தோல்வி என்பது ஆரியருக்கு வெற்றியேயாகும். இனி அடுத்தாற்போல் மதுரை சம்பவ விஷயம்.

மதுரை சம்பவம் நமக்கு மொத்தத்தில் கணக்குப் பார்த்தால் சிலர் அடிபட்டாலும் பலனில் லாபமே தவிர நட்டமில்லை. நமது இயக்கமும் கருப்புச்சட்டைப் படை அமைப்பும், இந்தியா முழுவதும் பரவி விட்டது.

நமது கொள்கைகளும் இந்தியா வெங்கும் தெரிந்து விட்டன. இது எதிர் பாராமல் நமக்குக் கிடைத்த லாபமாகும். இதில் பார்ப்பனர்கள் ஏமாந்து போய் விட்டார்கள் என்றே சொல்லலாம். நம்மில் பலருக்கு அடி உண்டு. நல்ல நஷ்டமும் உண்டு. போனால் போகட்டும். இலாபம் எவ்வளவு பெரிது பாருங்கள். உருவக் கடவுள் பேரால் அவர்கள் அடிக்கும் கொள்ளைபற்றியும் ஜாதிக் கொடுமைப் பற்றியும் நமது அப்பிராயம் என்ன? கருப்புச் சட்டைப்படை நோக்கமென்ன? திராவிடர் கழகக் கொள்கை என்ன? என்பவை ஒருவாறு இந்தியா பூராவும் விளம்பரம் செய்யப்பட்டுவிட்டன. இவர்கள் இப்படி செய்யாதிருந்தால் இந்தக் கொள்கை பரவுவது லேசான காரியமல்ல. இதைப் பரப்புவதற்கு ஒரு சிலர் அடி உதை பட்டால் இழிவு அல்ல.

இதற்கு ஆகவேதான் 2000 ஆண்டு களுக்கு முன்பே புத்தர், கிறிஸ்துநாதர், முகமது நபி ஆகிய சீர்திருத்தக்காரர்கள் பாடு பட்டார்கள். ஆனால், அது நம் நாட்டில் வெற்றி பெறவில்லை. இப்போது அதையே தான் நாம் செய்கிறோம். அவர்கள் பட்ட கஷ்டநஷ்டங்களைப் போலவே நமக்கும் கஷ்ட நஷ்டம் வந்துதான் தீரும். அதற்குப் பயப்படக் கூடாது. அப்படிப்பட்ட அந்தக் காட்டுமிராண்டி காலத்தில் அவர்கள் இந்தியா தவிர, மற்ற நாடுகளில் வெற்றி பெற்று விட்டார்கள் என்றால் இந்த விஞ்ஞான காலத்தில் அதே கொள்கை களில் அதுவும் அக்கொள்கைகளில் உலகத் தில் 200 கோடி மக்கள் இருக்கும்போது நாம் ஏன் வெற்றி பெற முடியாது? மதுரை சமணர்களைக் கழுவேற்றின ஊரல்லவா? அதை ஆதரித்துக் கழுவேற்றினவர்களுக்கு முக்தி கொடுத்த சிவன் உறையும் ஊரல் லவா? அது இப்போது சிலரை கல்லால் தடியால் அடித்து, மடியில் உள்ளதைப் பிடுங்கிக் கொண்டு, போய் கொட்ட கைக்குத் தீ வைப்பது மதுரைக்கு எப்படி இழிவாகும்? ஆதலால் மதுரை சம்பவம் பற்றி நாம் அதிசயப்படவோ குறைகூறவோ இடமில்லை.

ஏசு, கோவில்களைக் கள்ளர்குகை என்றார், புத்தர் பார்ப்பனியத்திற்கு அஸ்தி வாரத்தில் வெடி வைத்தார், முகமது நபி விக்கிரகங்களை, கடவுளை பரிகாசம் செய்யும் சின்னம் ஆதலால் கண்ட கண்ட பக்கம் அதை வெறுங்கள் என்றார், காந்தியார் கோவில்களை குச்சுக்காரிகள் விடுதி என்றார். மற்றும் பல பெரியார்கள் கல்லிலும், மரத்திலும், செம்பிலும், காரை யிலும் சித்திரத்திலும் கடவுள் இருப்பாரா மடையர்களே என்றார்கள். இதைவிடவா நாம் சொல்லுகிறோம்? இவ்வளவு கூட நாம் சொல்லுவதில்லையே, இப்படியெல்லாமும் நாம் செய்வதில்லையே, அப்படி இருக்க இந்தப் பார்ப்பனர்கள் பழி சுமத்தி நம்மை ஒழிக்கப் பார்க்கிறார்கள். மதுரை காலித் தனத்திற்கு அஸ்திவாரம், பிறப்பிடம் தோழர் வைத்திய நாதய்யர் என்கின்ற ஒரு பார்ப் பனரின் மூளையும், பணமும், ஆத்திரமும் என்பதாக அப்போதே மக்கள் என்னிடம் சொன்னார்கள். நான் முதலில் நம்ப வில்லை.
பிறகு அவரே அவரது தந்திர மான நடத்தையில் அதை வெளியாக்கிக் கொண்டு விட்டார். பிறகும் எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன. இந்தப் பார்ப்பனர், பார்ப்பனரில் யோக்கியர் என்று சொல்லப்படுபவர். இவர் சங்கதி இப்படி யானால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள். மதுரையில் நான் நம் தொண்டர்களை அடக்கிவிட்டதால் நமக்கு அடிவிழ நேரிட்டதென்றும், விட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதென்றும் நம்பிள் ளைகள் என் மீது குற்றம் சொல்லு கிறார்கள். நான் விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? இன்னும் சிலர் இரு பக்கத்திலும் செத்திருப்பார்கள். இதனால் நமக்கு என்ன லாபம்? நம்மவர்கள்தானே இருபக்கமும் அடிபட்டு சாகவேண்டி இருக்கும். ஆதலாலேயே நான் எங்கு சென்றாலும் நம்மவர்களை அடக்குவதும், பலாத்காரம் கூடாது என்பதும் ஆகுமே தவிர பயத்தால் அல்ல.

காங்கிரசாரானா லும், கம்யூனிட்ஸ் ஆனாலும் அவர்களில் நம்மவர்கள் என்றால் நாம் சற்று அடங்கி மரியாதையாய் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நாகரிகமாகும். இனி எந்தக் கட்சி ஆனாலும் நம்மவர்களுக்குள் சண்டை, கலகம், வசவு கூடாது.

கருப்புச் சட்டை படைக்கு இது முக்கிய கவனமாக இருக்க வேண்டும். அவர்களி டம் சிநேகம் கொள்ளுங்கள். இந்த புத்தி இல்லாததாலேயே பொது எதிரியை மறந்து அவனுக்கு மானங்கெட்ட அடிமையாகி விட்டோம். இதைத்தான் மதுரையில் முதல்நாள் கூட்டத்தில் வலியுறுத்திப் பேசி இருக்கிறேன்.

இப்போது மந்திரிசபை பார்ப்பன ஆதிக்கமாகிவிட்டது. சர்க்கார் காரியாலயம் பெரிதும் ஏற்கனவே பார்ப்பன அக்கிரகாரம், வெளி அய்.சி.எ. அதிகாரிகள், ஜட்ஜுகள், பெரிதும் பார்ப்பனர்கள். நம்ம வர்களிலும் பலர் அவர்கள் அடிமைகள், பத்திரிகைகளும் யாவும் அவர்களுடைய தும் அவர்களது ஆதிக்கத்தில் இருப்பது மாகும். நம் மந்திரிகள், நம் அதிகாரிகள் யாராவது (திராவிடர்கள்) இருந்தால் அவர்கள் சக்தி அற்றவர்கள், ஆதரவற்ற வர்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள் ளவே பாததீர்த்தம் அருந்த வேண்டிய வர்கள். இந்த நிலையில் நாம் இப்போது நான் செய்வதற்கு மேல் என்ன செய்ய முடியும்? இருக்கும் சக்தியையும், முஸ்தீபு சாதனங்களையும் வைத்துக் கொண்டு எவ்வளவு செய்யமுடியுமோ அதற்கு மேலேயே செய்வேனே ஒழிய விட்டுக் கொடுத்துவிடமாட்டேன். மாணவர்கள், இளைஞர்கள் சில பெரியார்களிடத்தில் எனக்கு உள்ள நம்பிக்கையையும் அவர் களுக்கு என்னிடத்தில் உள்ள அன்பையும் கொண்டு நம் முக்கிய குறைபாடுகளை நீக்கி நமக்குள் ஒரு ஒற்றுமை ஏற்படவே நான் திட்டம் வைத்திருக்கிறேன்.

அது நடைபெற வெற்றிபெற நீங்கள் கட்டுப் பாடாக, குயுக்தி இல்லாமல், உங்கள் சவு கரியத்திற்கு ஆக காரியங்களையே கெடுக்கப் பார்க்காமல் எனக்கு உதவி செய்யுங்கள், பொறுமையாய், கண்ணிய மாய், ஒழுக்கமாய், ஒழுங்கு முறைப்படி நடந்து கொள்ளுங்கள், வெற்றி நம்முடையதுதான். சந்தேகமில்லை.

----------------------------------------

26.05.1946 அன்று தேதி ஈரோடு காரைவாய்க்கால் மைதானத்தில் தோழர் குகநாதன் அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் இரவு 10 மணிக்கு மேல் துவக்கப்பட்டது. 5000 மக்கள் வரை வந்து இருந்தனர். நள்ளிரவு ஒரு மணி வரை சொற்பொழிவுகள் நடந்தன. அக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு - "குடிஅரசு" - சொற்பொழிவு - 15.06.1946

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It