ambedkar 297இத்துடன் விஷயத்தை முடித்துக் கொள்வதானால், தூய்மைக் கேடு சம்பந்தமாக இந்துக்களிடையே நிலவும் கருத்து பூர்வீக, பண்டைய சமுதாயங்களில் நிலவிய கருத்துக்களிலிருந்து வேறுபட்டதல்ல என்று கூறுவதோடு நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் இத்துடன் நிறுத்திக்கொள்வது சாத்தியமல்ல. ஏனென்றால் இதுவரை நாம் குறிப்பிடாத மற்றொரு வகையான தீண்டாமை முறை இந்துக்களால் கைக்கொள்ளப்பட்டுவருகிறது. சில குறிப்பிட்ட வகுப்பினர் விஷயத்தில் பின்பற்றப்படும் பாரம்பரியமான தீண்டாமைதான் அது. ஒரு தனிநபர் எவர் உதவியும் இன்றி இத்தகைய ஒரு பட்டியலைத் தயாரிப்பது என்பது இயலாத காரியம்; அந்த அளவுக்கு இந்தப் பட்டியல் மிகவும் விரிவானது. அதிருஷ்டவசமாக 1935ல் இந்திய அரசாங்கம் இத்தகைய ஒரு பட்டியலைத் தயாரித்து 1935 ஆம் வருட இந்திய அரசாங்கச் சட்டத்துடன் இணைத்திருக்கிறது. இவ்வாறு இணைக்கப்பட்டிருக்கும் அட்டவணையில் ஒன்பது பகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு பகுதியும் ஒரு மாகாணத்தைக் குறிக்கிறது; அம்மாகாணத்திலுள்ள சாதிகளும், இனங்களும், பழங்குடியினரும், தீண்டப்படாதோர் எனக் கருதப்படுபவர்களும் அந்தப்பகுதியில் விவரிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தப் பட்டியலை மிகவும் விரிவானதும் அதிகாரப்பூர்வமானதும் எனக்கருதலாம். மரபு வழிவந்த தீண்டப்படாதோர் என இந்துக்களால் பல வகுப்பினர் கருதப்படுகின்றனர். 1935 ஆம் வருட இந்திய அரசாங்கச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அந்தப் பட்டியலைப் பின்வரும் அட்டவணையில் தருகிறேன்.

அட்டவணை

பகுதி I – சென்னை 

1) மாகாணம் முழுவதிலுமுள்ள ஷெட்யூல்டு வகுப்பினர்:

ஆதி-ஆந்திரர் கோசங்கி பைடி
ஆதி-திராவிடர் ஹட்டி பைண்டா
ஆதி-கர்னாடகர் ஹஸ்லர் பாகி
அஜிலர் ஹோலியர்கள் பள்ளர்
அருந்ததியார் ஜக்காலி பம்பாடர்
பைரர் ஜம்புவுறு பமிடி
பகுடர் கல்லாடி பஞ்சமர்
பண்டி கணக்கன் பனியர்
பரிக்கி கொடாலோ பன்னியண்டி
பட்டாடர் கூசா  
பவுரி கொரகர் பறையர்
பெல்லரர் குடும்பன் புலையர்
    பரவர்
பைகரி குறவா புதிரைவண்ணார்
    ரனேயர்
சச்சாதி மாதரை ரெல்லி
சக்கிலியன் மாதிகர் சமகரர்
சல்வாடி மைலா சாம்பன்
சாமர் மாலா சபரி
சண்டாளர் மால தாசு செம்மான்
செருமான் மாதங்கி தோட்டி
  மோகர்  
தந்தாசி முச்சி திருவள்ளுவர்
தேவேந்திரகுலத்தார் முண்டாலர்  
கசி   வள்ளுவன்
கொடகலி நலக்கேயவர் வால்மீகி
கோதரி நாயாடி வெட்டுவன்
கொட்டா பகடை  

2) மாகாண சட்டமன்றத்துக்கு பின்தங்கிய பிரதேசங்களின், பழங்குடியினரின் ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு 1935 ஆம் வருட அரசாங்கத்தின் சட்டப்படி அமைக்கப்பட்ட எந்தவொரு விசேடத் தொகுதியைத் தவிர மாகாணம் எங்கிலுமுள்ள ஷெட்யூல்டு வகுப்பினர் வருமாறு:

ஆர்நாடன் காட்டுநாயக்கன் குறுமன்
டோம்போ குடியா மலசர்
காடன் குடுபி மாவிலன்
கரிம்பாலன் குரிச்சன் பனோ

பகுதி – II – பம்பாய்

ஷெட்யூல்டு வகுப்பினர்:

அசோடி தோர் மங் கருடி
பகட் கரோடே மக்வல் அல்லது மொங்வார்
பாம்பி ஹால்லீர் மினி மாதிக்
பங்கி ஹல்சார் அல்லது ஹஸ்லார்

முக்ரி

நாடியா

சக்ரவர்த்திய – தாசர் ஹூல்சவர் ஷென்வா அல்லது ஷிந்தவா
சல்வாடி ஹொலயா  
சம்ப்வார் அல்லது மோச்சிகார் கல்பா ஷிந்தவ் அல்லது ஷிங்கத்யா
சார்மகர் கோல்ச்சா அல்லது கோல்கா சோச்சி
சேன-தாசரு கோலி-தோர் திமலி
சூஹார் அல்லது சூஹ்ரா லிங்கதர் துரி
தகலேரு மாதிக் வங்கர்
தெட் மாங் விதோலியா
தெகு-மெகு மகர்  

பகுதி III – வங்காளம்

மாகாணம் முழுவதிலுமுள்ள ஷெட்யூல்டு வகுப்பினர்:

அகரியா பூமிஜ் கோன்ரி
பக்டி பிண்ட் ஹதி
பஹேலியா பிர்ஜ்ஹியா ஹஜாங்
பைத்தி சாமர் ஹலால்கோர்
பௌரி தியனுவார் ஹரி
பெதியா தோபா ஹோ
பெல்தார் தோய் ஜாலிய கைபரட்டா
பெருவா தோம் ஜாலோ மாலோ (அ) மாலோ
பைதியா தோசத் காடர்
புய்மாலி காரோ கல்பஹரியா
புய்வா கசி கான்
காந்த் லோதா ஓரான்
காந்த்ரா லஹோர் பலியா
கவ்ரா மாஹ்லி பான்
காபூரியா மால் பாசி
கரேங்கா மாஹர் பாட்னி
காஸ்தா மல்லா போத்
கௌர் மெச் ராபா
க்ஷைரா மெஹ்தோர் ராஜ்பன்சி
க்ஷாதிக் முச்சி ராஜ்வார்
கோச் முண்டா சாந்தால்
கோனாய் நாகேசியா தியார்
கோரா நாமசூத்ரா  தூரி
கொதால் நாத்  
லால்பெகி நுனியா  

பகுதி IV – ஐக்கிய மாகாணங்கள்

ஷெட்யூல்டு வகுப்பினர்:

அகரிவா சாமர் கார்வார் (பென்பான்சி நீங்கலாக)
அஹேரியா செரோ  
படி தாபகர் க்ஷாதிக்
பாதிக் தங்கார் கோல்
பஹேலியா தானுக் (பங்கி) கோர்வா
பஜனியா தார்கர் லால்பெகி
பைகி தோபி மஜாவர்
பலாகர் தோம் நாத்
வால்மீகி தோமர் பங்கா
பான்மனுஷ் கராமி பரஹியா
பான்ஸ்போர் காசியா பாசி
பார்வர் குவால் பாதரி
பசோர் ஹபுரா ராவட்
பாவரியா ஹரி சஹர்யா
பெல்தார் ஹெலா சனவ்ரியா
பெங்காலி கய்ரறா சான்சீயா
பெரியா காலபஸ் ஷில்ப்கார்
பாண்டு கஞ்சார்  
புய்யா கபரியா தாரு
புய்யார் கார்வால் துரய்ஹா
போரியா கரோத்  

2) ஆக்ரா, மீரத், ரோஹில்கண்ட் பகுதிகள் தவிர மாகாணமெங்கும் – கோரி,

பகுதி V – பஞ்சாப்

ஷெட்யூல்டு வகுப்பினர் மாகாணமெங்கும்:

அத் தார்மிஸ் மரிஜா (அ) மரேச்சா க்ஷாதிக்
பவாரியா பெங்காலி கோரி
சாமர் பரார் நாத்
சஹ்ரா (அ) வால்மீகி பாஸிகர் பாசி
தாகி (ம) கோலி பஞ்ச்ரா பெர்னா
தும்னா சனால் செபேலா
ஓத் தானக் சிர்கிபந்த்
சான்சி காக்ரா மேகா
சரேரா காந்திலா ராம்தாசி

பகுதி VI – பீகார்

ஷெட்யூல்டு வகுப்பினர்:

1) மாகாணம் முழுவதிலும்

சாமர் ஹலால்கோர் மோச்சி
சௌபால் ஹரி முசஹார்
தோபி கஞ்சார் நாத்
துசத் குராரியர் பாசி
தோம் லால்பெகி  

2) பாட்னா, திர்ஹத் வட்டாரங்களிலும் பகல்பூர், மாங்கீர், பாலமௌ, பூர்ணியா மாவட்டங்களிலும்:

பௌரி பூமிஜ் ராஜ்வார்
போக்தா காஸி தூரி
பௌயா பான்  

3) மான்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த தான்பாத் உப வட்டாரத்திலும், மத்திய மான்பூம் பொதுக்கிராமப்புறத்தொகுதியிலும் பூருலியா, ரகுநாத்பூர் நகரசபைகளிலும்:

பௌரி காஸி ராஜ்வார்
போக்தா பான் தூரி
பூய்யா    

பகுதி VII – மத்திய மாகாணங்கள் மற்றும் பேரார்

ஷெட்யூல்டு வகுப்பினர் இடங்கள்

பசோர் (அ) புருத்

சாமர்

தோம்

கந்தா

மாங்

மேஹ்தார் (அ) பங்கி

மோச்சி

சத்நாமி

மாகாணம் முழுவதிலும்

அதேலியா பிலாஸ்பூர் மாவட்டம்
பாஹ்னா அம்ரோத்தி மாவட்டம்
பாலஹி (அ) பலாய் பேரார் வட்டாரம், பாலகாட், பந்தாரா, பெடுதல், சந்தா, சிண்ட்வாரா, ஹோஷங்காபாத், ஜப்பல்பூர், மாண்ட்லா, நாக்பூர், நிமார், சௌகோர், வார்தா மாவட்டங்கள்
பேதார் அகோலா, அம்ரோதி, புல்தானா மாவட்டங்களில்
சாதார் பந்தாரா, சௌகோர் மாவட்டங்களில்
சௌஹான் துர்க் மாவட்டத்தில்
தஹாயத் சௌகோர் மாவட்டத்தின் தாமோ உப வட்டாரத்தில்
தேவார் பிலாஸ்பூர், துர்க், ராய்ப்பூர் மாவட்டங்களில்
தானுக் தாமோ உபவட்டாரம் தவிர சௌகோர் மாவட்டத்தில்
திமார் பந்தாரா மாவட்டத்தில்
தோபி பந்தாரா, பிலாஸ்பூர், ராய்ப்பூர், சௌகோர் மாவட்டங்களில்
தோஹர் பேரார் வட்டாரம், பாலகாட், பந்தாரா, சந்தா, நாக்பூர், வார்தா மாவட்டங்களில்
காஸியா பேரார் வட்டாரம், பாலகாட், பந்தாரா, சந்தா, துர்க், நாக்பூர், ராய்ப்பூர், வார்தா மாவட்டங்களில்
ஹோலியா பாலகாட், பந்தாரா மாவட்டத்தில்
ஜங்கம் பந்தாரா மாவட்டத்தில்
கய்காரி பேரார் வட்டாரம், பந்தாரா, சந்தா, நாக்பூர், வார்தா மாவட்டங்களில்
காதியா பேரார் வட்டாரம், பாலகாட், பெடுல், பந்தாரா, பிலாஸ்பூர், சந்தா, துர்க், நாக்பூர், நிமார், ராய்ப்பூர், வார்தா மாவட்டங்கள், ஹோஷங்காபாத் மாவட்டத்தில் ஹோஷங்காபாத், சியோனி – மால்வா தாலுகாக்கள், சியோனி உப வட்டாரம் நீங்கலாக சிந்த்வாரா மாவட்டம் தாமோ உப-வட்டாரம் நீங்கலாக சௌகோர் மாவட்டம்.
காங்கார் பந்தாரா, புல்தானா, சௌகோர் மாவட்டங்கள், ஹோஸங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோஷங்காபாத், சியோனி மால்வா தாலுகாக்கள்
காதிக் பேரார் வட்டாரம், பாலகாட், பந்தாரா, சந்தா, நாக்பூர், வார்தா மாவட்டங்கள், ஹோஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோஷங்காபாத் தாலுகா, சியோனி உபவட்டாரம் நீங்கலாக சிந்த்வாரா மாவட்டம், தாமோ உப வட்டாரம் நீங்கலாக சௌகோர் மாவட்டத்தில்
கோலி பந்தாரா, சந்தா மாவட்டங்களில்
கோரி அம்ரோதி, பாலகாட், பெடுல், பந்தாரா, புல்தானா, சிந்த்வாரா, ஜப்பல்பூர், மாண்ட்லா, நிமார், ராய்ப்பூர், சௌகார் மாவட்டங்கள் மற்றும் ஹர்தா, சோஹக்பூர் தாலுகாக்கள் நீங்கலாக, ஹோஷங்காபாத் மாவட்டத்தில்
கும்ஹார் பந்தாரா, சௌகோர் மாவட்டங்கள், ஹோஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோஷங்காபாத், சியோனி, மால்வா தாலுகாக்களைத் தவிர ஹோஷங்காபாத் மாவட்டத்தில்
மாத்கி பேரார் வட்டாராம், பாலகாட், பந்தாரா, சந்தா, நாக்பூர், வார்தா மாவட்டங்களில்
மாலா பாலகாட்,பெடுல், சிந்த்வாரா, ஹோஷங்காபாத், ஜப்பல்பூர், மாண்ட்லா, நிமார், சௌகோர் மாவட்டங்களில்
மேஹ்ரா (அ) மஹர் ஹோஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஹார்தா, சோஹக்பூர் தாலுகாக்கள் நீங்கலாக மாகாணம் முழுவதிலும்
நாகர்ச்சி பாலகாட், பந்தாரா, சிந்த்வாரா, மாண்ட்லா, நாக்பூர், ராய்ப்பூர் மாவட்டங்களில்
ஓஜா பாலகாட், பந்தாரா, மாண்ட்லா மாவட்டங்கள் மற்றும் ஹோஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோஷங்காபாத் தாலுகாவில்
பங்கா பேரார் வட்டாரம், பாலகாட், பந்தாரா, பிலாஸ்பூர், சந்தா, துர்க், நாக்பூர், ராய்ப்பூர், சௌகோர், வார்தா மாவட்டங்கள் மற்றும் சியோனி உபவட்டாரம் நீங்கலாக சிந்த்வாரா மாவட்டத்தில்
பர்தி ஹோஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த நரசிங்கபுர உபவட்டாரத்தில்
பிரதான் பேரார் வட்டாரம், பந்தாரா, சந்தா, நாக்பூர், நிமார், ராய்ப்பூர், வார்தா மாவட்டங்கள் மற்றும் சியோனி உப வட்டாரம் நீங்கலாக சிந்த்வாரா மாவட்டத்தில்
ராஜிஹர் ஹோஷங்காபாத் மாவட்டத்தின் சோஹக்பூர் தாலுகாவில்

பகுதி VIII – அஸ்ஸாம்

ஷெட்யூல்டு வகுப்பினர்:

1) அஸ்ஸாம் பள்ளத்தாக்கில்

நாமசூத்திரா

கய்பர்ட்டா

பனியா அல்லது

பிரிட்டியால் –

பனியா

ஹிரா

லால்பெகி

மெஹ்தார் அல்லது பங்கி பான்ஸ்போர்

2) சூர்மா பள்ளத்தாக்கில்

மாலி (அ) புய்மாலி சூத்ரதார் கய்பர்ட்டா (அ) ஜலியா
தூபி (அ) தோபி முச்சி லால்பெகி
துக்லா (அ) தோலி பாட்னி மொஹ்தார் (அ) பங்கி

ஜாலோ (ம) மாலோ

மஹாரா

நாமசூத்திரா பான்ஸ்போர்

பகுதி IX – ஒரிசா

ஷெட்யூல்டு வகுப்பினர்:

1) மாகாணம் முழுவதிலும்

ஆதி – ஆந்திரர் சாமர் குசூரியா
அதேலியா சண்டாலா கோடகலி
பரிகி தந்தாசி கோதாலி
பன்சோர் (அ) புருத் தேவர் கோட்ரா
பவூரி தோபா (அ) தோபி கோகா
சாச்சதி கண்டா ஹத்தி (அ) ஹரி
இரிக்கா மால பஞ்சமா
ஜக்கலி மாங் பங்கா
காந்த்ரா மாங்கன் ரெல்லி
கதியா மெஹ்ரா (அ) மஹர் சபாரி
கேலா மெஹ்தார் (அ) பங்கி சாந்த்நாமி
கோடலோ மோச்சி (அ) முச்சி சியால்
மதாரி பைந்தா வால்மீகி
மஹூரியா பாமிடி  

2) கோண்ட்ஸ்மால் மாவட்டம், சம்பல்பூர் மாவட்டம் மற்றும் 1936 ஆம் வருட இந்திய அரசாங்க (ஒரிசா அமைப்பு) ஆணையின்படி சென்னை ராஜதானியில் விசாகப்பட்டினம், கஞ்சம் ஏஜென்சிகளிலிருந்து ஒரிசாவுக்கு மாற்றப்பட்ட பிரதேசங்கள் நீங்கலாக மாகாணம் முழுவதிலும்:

     பான் அல்லது பானோ

3) கோண்ட்ஸ்மால் மாவட்டம் மற்றும் மேற்கூறிய ஏஜென்சிகளிலிருந்து ஒரிசாவுக்கு மாற்றப்பட்ட பிரதேசங்கள் நீங்கலாக மாகாணம் முழுவதிலும்:

     தோம் அல்லது தாம்போ

4) சம்பல்பூர் மாவட்டம் நீங்கலாக மாகாணம் முழுவதிலும்

பௌரோ பூமிஜ் தூரி
புய்யா காஸி (அ) காஸியா  

5) சம்பல்பூர் மாவட்டத்தின் நவபாரா உப-வட்டாரத்தில்

கோரி நாகர்ச்சி பிரதான்

     இது மிகுந்த வியப்பூட்டும் ஒரு பட்டியலாகும், இதில் 429 வகுப்புகள் அடங்கியுள்ளன. இவர்களது ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, தொட்டாலே இந்துக்களுக்குத் தீட்டு ஏற்படக்கூடிய சுமார் 5கோடி முதல் 6கோடி மக்கள் இந்தியாவில் இருந்து வருவது புலனாகும். பூர்வீக சமுதாயத்திலும் பண்டைய சமுதாயத்திலும் நிலவிய தீண்டாமையை இந்தியாவில் கோடானுகோடி மக்களை வாட்டி வதைக்கும் மிகக் கொடிய தீண்டாமையுடன் ஒப்பிடும்போது அது அற்பத்திலும் அற்பமானதாகத் தோன்றுவதைக் காணலாம். இந்துக்களிடையே நிலவும் இந்தத் தீண்டாமை ஒரு தனி ரகமானது. உலக வரலாற்றில் இதற்கு வேறு எந்த உவமையும் இல்லை. ஆசியாவையும் ஐரோப்பாவையும் சேர்ந்த மிகப் பல நாடுகளின் மக்கட் தொகையைவிட அதிகமான எண்ணிக்கையிலுள்ள மக்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை வைத்து மட்டுமே இதைக்கூறவில்லை; இதற்கு வேறுபல காரணங்களும் உண்டு.

     429 தீண்டப்படாத வகுப்புகளைப் பாதிக்கும் இந்தத் தீண்டாமை முறையின் சில முக்கியமான அம்சங்களை பூர்வீக அல்லது பண்டைய இந்துவல்லாத சமூகங்கள் கடைப்பிடித்து வந்த தீண்டாமைப் பழக்கத்தில் காணமுடியாது.

     தூய்மைக்கேட்டுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு என்ற முறையில் இந்துவல்லாத சமுதாயங்கள் வகுத்தளித்த ஒதுக்கல் முறையை பகுத்தறிவுக்கு ஒத்தது என்று கூறமுடியாவிட்டாலும் அதனைப் புரிந்துகொள்ளமுடியும். பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற சில திட்டவட்டமான காரணங்களுக்காக அது கைக்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்து சமுதாயம் திணிக்கும் தனிமைப்படுத்தலுக்கோ வெளிப்படையான காரணங்கள் ஏதுமில்லை.

     பூர்வீக சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட தீட்டு தற்காலிகத்தன்மை உடையது. உண்பது, குடிப்பது போன்ற இயல்பான செயற்பாடுகளை மேற்கொள்ளும் குறிப்பிட்ட சமயங்களின்போதோ அல்லது பிறப்பு, இறப்பு, பூப்பெய்தல் போன்று தனிநபரது வாழ்க்கையில் இயற்கையாகத் தோன்றும் நெருக்கடியின்போதோதான் இந்தத் தூய்மைக்கேடுகள் தோன்றின. ஆனால் தீட்டுக்காலம் முடிந்து, தூய்மைப்படுத்தும் சடங்குகள் செய்துமுடிக்கப்பட்ட உடன் இந்தத் தூய்மைக்கேடுகள் மறைந்துவிடும்; சம்பந்தப்பட்ட நபர்கள் தூய்மை அடைந்து, மற்றவர்களுடன் பழகக்கூடியவர்களாகி விடுவார்கள். இதுதான் பூர்வீக சமுதாயத்தில் நடைபெற்றது. ஆனால் பிறப்பு, இறப்பு போன்றவற்றால் ஏற்படும் தற்காலிக தீட்டு போன்றல்லாமல் இந்தியாவின் 5 கோடி முதல் 6 கோடி மக்களைப் பீடித்திருக்கும் தூய்மைக்கேடு, தீட்டு காலகாலத்துக்குமாக நிரந்தரமாகிவிட்டது, நிலைத்துப் போய்விட்டது. அவர்களைத் தொடும் இந்துக்கள் தூய்மைக்கேட்டுக்கு உள்ளாகி, சுத்திகரிப்புப் பரிகாரங்களை மேற்கொண்டதும் பரிசுத்தமடைந்து விடுகிறார்கள். ஆயின் தீண்டப்படாதவர்களைத் தூய்மைப்படுத்துவதற்கு எதுவுமே இல்லை. அவர்கள் தூய்மையற்றவர்களாகவே பிறக்கிறார்கள், தூய்மையற்றவர்களாகவே வாழ்கிறார்கள், தூய்மையற்றவர்களாகவே இறக்கிறார்கள்; அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் தீண்டாமை என்னும் வடுவுடனேயே, களங்கத்துடனேயே பிறக்கிறார்கள். இது வழிவழி வந்த, தலைமுறை தலைமுறையாக வந்த கறையாகும். இந்த அழுக்கை, இழுக்கை எதைக்கொண்டும் போக்கிவிட முடியாது.

     மூன்றாவதாக, தூய்மைக்கேட்டில் நம்பிக்கை கொண்ட இந்துவல்லாத சமுதாயங்கள் சம்பந்தப்பட்ட தனிநபர்களையோ அல்லது அதிகப்பட்சம் அவர்களுடன் மிகவும் நெருக்கமானவர்களையோ தான் ஒதுக்கிவைத்தன. ஆனால் தீண்டாமையைக் கடைபிடிக்கும் இந்துக்களோ ஒரு சமுதாயப்பிரிவையே, 5கோடி முதல் 6கோடியுள்ள ஒரு பெரும் மக்கள் திரளையே ஒதுக்கி வைத்திருக்கின்றனர், தள்ளி வைத்திருக்கின்றனர்.

நான்காவதாக, இந்துவல்லாத சமுதாயங்கள் சம்பந்தப்பட்ட நபர்களைத் தனிமைப்படுத்த மட்டுமே செய்தன. தனி இடங்களில் ஒதுக்கிவாழ வேண்டுமென்று அவர்களை எவ்வகையிலும் நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் இந்து சமுதாயம் தீண்டப்படாதவர்கள் வசிக்கும் குடியிருப்பு வட்டாரங்களில் இந்துக்கள் வசிக்கமாட்டார்கள்; அதேசமயம் இந்துக்களின் குடியிருப்பு வட்டாரங்களில் தீண்டப்படாதவர்கள் வசிப்பதற்கும் அனுமதிக்கமாட்டார்கள். இது இந்துக்கள் கடைப்பிடிக்கும் தீண்டாமையின் ஓர் அடிப்படையான அம்சமாகும். இது தற்காலிகமான சமூக ஒதுக்கலோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்குச் சமூகத் தொடர்பை நிறுத்திக் கொள்வதோ அல்ல. மாறாக, இது தொற்றுத்தடுப்பு நடவடிக்கை போன்ற ஒன்றாகும்; பிரதேசவாரியான ஒதுக்கல்முறையாகும்; முட்கம்பியாலான ஒரு வகைக் கூண்டுக்குள் தூய்மையற்றவர்களை அடைத்து வைப்பது போன்ற கொடுமையிலும் கொடுமையான, மிக அட்டூழியமான செயலாகும். ஒவ்வொரு இந்து கிராமத்திலும் ஒரு சேரி இருக்கிறது. இந்துக்கள் கிராமத்திற்குள் வசிக்கிறார்கள், தீண்டப்படாதவர்கள் சேரியில் வசிக்கிறார்கள்.

இத்தகையதுதான் இந்துக்கள் கடைப்பிடிக்கும் தீண்டாமை. இந்துக்களல்லாத சமுதாயங்கள் கடைப்பிடிக்கும் தீண்டமையிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்பதை யார் மறுக்க முடியும்? இந்துக்கள் பின்பற்றும் தீண்டாமை தனித்தன்மை வாய்ந்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்துவல்லாத சமூகங்கள் சிலரைத் தூய்மையற்றவர்களாகக் கருதினாலும் அவர்களைத் தனிப்பட்ட நபர்களாகவே பாவித்தன. ஒரு முழு சமூகப் பிரிவே தூய்மையற்றதாக ஒருபோதும் கருதப்பட்டதில்லை. மேலும், அவர்களது தூய்மைக்கேடு தற்காலிகமானதாகவும், சில சடங்குமுறைகள் மூலம் தூய்மைப்படுத்தக்கூடியதாகவுமே இருந்தது. ‘ஒருவர் ஒரு சமயம் தூய்மையற்றவராகிவிட்டால் என்றென்றும் தூய்மையற்றவர்தான்’ என்ற அடிப்படையில் நிரந்தரமான தூய்மைக்கேடு எக்காலத்திலும் இருந்ததில்லை. இந்துவல்லாத சமூகங்களால் தனி நபர்கள் தூய்மையற்றவர்களாக கருதப்பட்டார்கள் என்பதிலும் சமூகத் தொடர்பிலிருந்து அவர்கள் துண்டிக்கப்படவும் கூடச் செய்யப்பட்டார்கள் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் நிரந்தரமான தனி முகாம்களில் அவர்கள் வைக்கப்பட்டார்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. இந்துவல்லாத சமூகங்கள் மக்களில் ஒரு பகுதியினரை தூய்மையற்றவர்கள் என்று கருதினார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்கள் குருதி உறவுக்கு அப்பாற்பட்ட அந்நியர்கள். இந்த சமூகங்கள் தங்கள் சொந்த மக்களிலேயே ஒரு பகுதியினரை நிரந்தரமான, வழிவழியான தூய்மைக்கேடானவர்களாக என்றுமே கருதியதில்லை.

இவ்வாறு, இந்துக்கள் கடைபிடிக்கும் தீண்டாமை உலகின் ஏனைய பகுதியிலுள்ள மனித சமூகம் அறியாத ஒன்று. பூர்வீக சமுதாயமாயினும் சரி, பண்டைய சமுதாயமாயினும் சரி, இன்றைய சமுதாயமாயினும் சரி எந்த ஒரு சமுதாயத்திலும் இத்தகைய ஓர் அவல நிலையை, கொடூரநிலையை, கொத்தியெடுக்கும் கோர நிலையைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. தீண்டாமையைப் பற்றிய ஆய்வில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் எழுகின்றன; எனினும் தற்போது பரிசீலனைக்குரியவையாக பின்கண்ட இரு பிரச்சினைகளை எடுத்துக்கொள்வோம்:

இந்த இரு கேள்விகளுக்கான விடைகளைப் பின்வரும் பக்கங்களில் காணலாம்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 2)