இது நடந்தது இங்கிலாந்தில். கி.பி.1587 பிப்ரவரி 8ம் தேதியன்று, இங்கிலாந்து ராணியாக இருந்த முதலாம் எலிசபெத், தனது அக்காளான மேரிக்கு மரண தண்டனை விதித்தான். மேரி கம்பீரமாக அதனை ஏற்று உயிர் துறந்தாள். காரணம்? தன்னைக் கொல்ல மேரி சூழ்ச்சி செய்ததாக, தக்க நிரூபணங்கள் பேரில் தயக்கத்துடன் எலிசபெத் தீர்ப்பளித்தாள்.

அதற்கு முன்பு கிட்டத்தட்ட 19 வருடங்கள் வீட்டுக் காவலின் பேரில் ஒரு கோட்டையிலிருந்து இன்னொரு கோட்டைக்கு மேரி மாற்றப்பட்டுக் கொண்டு இருந்தாள். இவளுக்கு ‘பாதி விருந்தினர் - பாதி கைதி’ அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது.

(ஆர்.எஸ்.ராவ் எழுதிய ‘உங்களுக்குத் தெரியுமா?’ நூலிலிருந்து)