உணவுமுறைதான் காரணம். வெளிநாட்டில் முக்கிய உணவு தானியம் கோதுமை. இந்தியாவில் அரிசி. அதையும் மீறி வெளிநாட்டு போலீஸாருக்கு தொப்பை விழுந்தால் அந்த தோப்பையைக் குறைக்க போலீஸ் டிபார்ட்மெண்ட் டாக்டர்களின் உதவியோடு புதிய மாத்திரை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மாத்திரையை விழுங்கியதும் சிறுகுடலின் சுவரில் போய் அது ஒட்டிக் கொள்ளும். அங்கே ஒட்டிக் கொள்ளும் மாத்திரை உடம்புக்குத் தேவையான சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை ஜீரணம் செய்யவிடாமல் தடுத்து கழிவாக வெளியே அனுப்பிவிடுகிறது, அதனால் தொப்பை விழாது. இந்த மாத்திரை கரைந்துவிட்டால் மற்றொன்றை சாப்பிட்டுக் கொள்ளலாம்.