குற்றம் சுமத்தப்பட்ட நபர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டால், அவரது முந்தைய நடவடிக்கையைப் பரிசீலனை செய்து. குற்றவியல் நீதித்துறை நடுவர் தண்டனை விதிப்பார். தண்டனைத் தீர்ப்புக்குள்ளான நபர் அவரது தண்டனையை எதிர்த்து, மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ள விரும்பினால், தண்டனையளித்த நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும்.

எதிர்பார்ப்பு பிணையில் விடுவிப்பு:

பிணையில் விட முடியாத குற்றத்திற்காகத் தான் கைது செய்யப்படக் கூடும் என்று ஒருவர் நம்புவதற்குக் காரணம் இருந்தால் அவ்வாறு கைது செய்யப்பட நேர்ந்தால் பிணையில் தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஆணையிடுமாறு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்திற்கு மனு செய்யலாம். அத்தகைய நபர், பிடிப்பாணை இல்லாமல் காவல் துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டால். அவர் பிணையளிக்கத் தயாராக இருந்தால், அவரைப் பிணையில் விடுவித்தாக வேண்டும். குற்றவியல் நீதித்துறை நடுவரால் குற்றவாளிக்கு எதிராக பிடிப்பாணை வழங்கப்பட்டால் அது உயர்நீதிமன்றம் அல்லது மாவட்ட அமர்வு நீதிமன்றம் கூறியுள்ள நெறிமுறைகளுக்கேற்ப பிணையில் விடுவிக்கக்கூடிய பிடிப்பாணையாக இருக்க வேண்டும். ஒருவர் எதிராளிகளால் பொய்யான வழக்கில் சிக்கவைக்கப்படும்போது பிணையில் விடுவிக்கப்படுவதற்கு மனு செய்து கொள்வதற்கு முன்பு சிறையில் சில நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு அவமானத்திற்குள்ளாவதிலிருந்து மீட்பதே இந்தப் பிரிவின் நோக்கம்.

பிணையில் விடுவிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களும் யோசனைகளும்: