கைது செய்யப்பட வேண்டிய நபரைத்தேடி, இடத்தைச் சோதனையிடல்:

கைது செய்யப்பட வேண்டிய நபரைத் தேடி, ஒரு இடத்தில் சோதனை மேற்கொள்ளும்போது அனைவரும் தேவையான உதவி புரிய வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 47 வற்புறுத்துகிறது. சோதனை மேற்கொள்ளும் போது எந்தவொரு கதவையும் ஜன்னலையும் உடைத்துத் திறக்கவும், தன்னையும் கட்டிடத்திற்குள் அடைத்து வைக்கப் பட்டுள்ள வேறு எந்த நபரையும் விடுவித்துக் கொள்ளவும் காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.

கைது செய்யப்பட்ட நபரைச் சோதனையிடல்:

ஒரு நபரை கைது செய்த பின்பே, அவரைச் சோதனையிடும் உரிமை காவல்துறை அதிகாரிக்கு வருகிறது. சோதனையிட்ட பின்பு, அந்த நபரிடமிருந்து எடுக்கப்பட்ட எல்லாப் பொருட்களையும், பாதுகாப்பில் காவல்துறை அதிகாரி வைத்திருக்க வேண்டும். பொருட்களைப் பெற்றுக் கொண்ட தற்கான ரசீது, கைதியிடம் தரப்படவேண்டும்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்படும் சோதனை கண்ணியத்துடன் இருப்பது அவசியம்.

ஒரு பெண் மற்றொரு பெண்ணாலேயே சோதனையிடப்பட வேண்டும் (குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 51).

கைது செய்யப்பட்ட நபரை மருத்துவர் சோதனை செய்தல்:

ஒரு குற்றத்தை நிரூபிப்பதற்குச் சாட்சியளிக்கக்கூடும் எனத் தோன்றினால், உதவி ஆய்வாளர் தகுதிக்குக் குறையாத காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட நபரை மருத்துவப் பரி சோதனை செய்யக் கோரலாம் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 53).

சோதனை ஆணை:

கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக, சோதனை ஆணை. குற்றவியல் நீதித்துறை நடுவரால் வழங்கப்படுகிறது.

கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை:

சோதனையிடும் அதிகாரி:

சோதனையிடப்படும் இடத்தில் குடியிருப்பவரின் உரிமைகள்: