மிகவும் அரிய வகை உயிரினமாக கருதப்படும் வெள்ளைப் புலிகள், உண்மையில் தனி இனம் கிடையாது. உலகில் சுமார் எட்டு வகையான புலிகள் வாழ்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவற்றில் தற்ச்சமயம் ஐந்து மட்டுமே காணப்படுகிறது. மற்ற இனங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. எந்த வகை புலியாக இருந்தாலும், அவற்றின் நிரமிக்குறைபாடு காரணமாகவே அவை வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கின்றன. இந்தியாவின் பெரும்பாலான மிருகக் காட்சி சாலைகளில் காணப்படும் வெள்ளைப்புலிகள் யாவும் வங்கப் புலிகளே. அவை தனிப்பட்ட புலி இனம் கிடையாது. 

இது போன்ற நிறக்குறைபாடு பெரும்பாலான விலங்குகளுக்கு ஏற்ப்படுவதுண்டு. எனவே அப்படி மாறுபட்ட நிறத் தோற்றத்தில் இருக்கும் யாவும் தனி ஒரு உயிரினமாக எடுத்துக் கொள்ள முடியாது. சென்ற ஆண்டு வனப் பகுதியில் விலங்குகள் கணக்கெடுப்புக்காக நான் சென்றிடுந்த போது வெள்ளை நிற புள்ளி மான் ஒன்ற நேரடியாகவே பார்த்து அதிசயித்தேன்.

நிறக்குறைபாடு காரணாமாக இருந்தாலும், இவை நிச்சயம் அதிசயமான, அரிய உயிரினங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

ஆப்ரிக்க சிறுத்தைகளிலும் இது போன்ற விலங்குகள் உண்டு. அவை முற்றிலும் நிறம் மாறாமல் அவற்றின் வடிவமைப்பில் மட்டும் மாற்றம் காணப்படுவதுண்டு. 

வெள்ளை சிங்கங்கள் இன்றும் ஆப்ரிக்க காடுகளில் காணப்படுகின்றன. பராமரிப்பில் வளர்க்கப்படும் வெள்ளை சிங்கங்களும் உண்டு. 

வேங்கை புலியோ அல்லது சிறுத்தை புலியோ நிறக்குறைபாடு காரணமாக முற்றிலும் கருமை நிறத்தில் காணப்படுவதுண்டு. கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கும் இவை மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. கருஞ்சிறுத்தை என்று அழைக்கப்படும் இவை இந்தியக் காடுகளில் வாழ்வதற்கான ஆதாரங்கள் உள்ளன.

பொதுவாகவே விலங்குகளும், பறவைகளும் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் இன்றைய காலகட்டத்தில், இயற்கையிலேயே அரிதாக உருவாக்கப்படும் இது போன்ற உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

அவ்வளவு சுலபத்தில் காணக் கிடைக்காத, இந்தியா காடுகளில் இல்லை என்று நம்பப்படுகிற, மிக மிக அரிய கருஞ்சிறுத்தை தோல், சென்ற மாதம் தாராபுரத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை வனத் துறையினர் (திரு.அருண்) கண்டுபிடித்தனர்.

Pin It