பல லட்சம் ஆண்டுகளாய் நமது முன்னோர்கள் கட்டிக் காத்த இந்த மண்ணை, இந்த நாட்டை, இயற்கையை... சில பத்து ஆண்டுகளில் வளர்ச்சி என அழிக்கும் கூட்டத்திற்கு துணை நிற்கப் போகிறோமா?

அல்லது இடையறாது பல்வேறு உறுதியான செயல்பாடுகளை முன்னெடுத்து, நிலைமையை மாற்ற போகிறோமா என்ற கேள்வி நம் அனைவர் முன் பெருமலையாய் எழுந்து நிற்கிறது.

kalpakkam

நாம் சிந்தித்து செயல்படவேண்டிய அவசியமான காலமிது.

திருவள்ளூர் மாவட்டம் : அனல்மின் நிலையம், வடசென்னையில் உள்ள எண்ணற்ற இரசாயன தொழிற்சாலைகள், மீஞ்சூர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்,
புழல் அருகே உள்ள போக்குவரத்து தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள அம்மா குடிநீர்த் திட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டம்: கல்பாக்கம் அணு உலைகள், மாமண்டூர் பெப்சி ஆலை, திருபெரும்புதூர் கொக்கோ-கோலா ஆலை, திருபெரும்புதூர் சிப்காட் ஆலை கழிவுகள், புதிதாக அமைக்கப்பட இருக்கும் 4000 மெகாவாட்-செய்யூர் அனல்மின் நிலையம், பாலூர் அருகே தடுப்பணை கட்டி எடுக்கப்பட்டு வரும் இந்திய அரசின் தென்னக ரயில்வேயின் ரயில் குடிநீர், நெமிலி கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்.

வேலூர் மாவட்டம்: தோல் தொழிற்சாலை கழிவுகள், ஆற்று மணல் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம்: கவுத்தி வேடியப்பன் மலை ஜிண்டால் திட்டம்

கடலூர் மாவட்டம்: இரசாயன தொழிற்சாலைகள் (வாழும் போபால்)

விழுப்புரம் மாவட்டம்: தென்பெண்ணை ஆறு ஆற்று மணல் கொள்ளை

கிழக்கு மாவட்டங்கள்- சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுசேரி(பாகூர் பகுதி) மாவட்டங்கள்: மீத்தேன், கடற்கரையோரம் அமைக்கப்பட்டு உள்ள இறால் பண்ணைகள்

தமிழக காவேரி டெல்டா படுகையை பாலைவனமாக்க, காவேரிக்கு குறுக்காக கர்நாடக அரசால் கட்டப்படும் புதிய அணைகள்(48- டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை உட்பட இரு அணைகள்)

நாகப்பட்டினம் மாவட்டம்: அமைந்து, அமையவிருக்கும் 12 அனல் மின்நிலையங்கள்

ராமநாதபுரம் மாவட்டம்: அமையவிருக்கும் உப்பூர் அனல் மின்நிலையங்கள்

அரியலூர், பெரம்பலூர் : சிமெண்ட் ஆலைகள், நிலக்கரி சுரங்கங்கள்

திருச்சி: புதிதாக அமைக்கப்பட இருக்கும் டிஎன்பிஎல் (TNPL) காகித ஆலை, தினசரி 90,00,000 லட்சம் லிட்டர் எடுக்க அனுமதி பெற்றுள்ள சூரியூர் பெப்சி ஆலை, ஆற்றுமணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம்: கிரானைட் கொள்ளை

மேற்கு மாவட்டங்கள்: கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி: கெயில் திட்டம்

கோவை மாவட்டம்: எவரெசுடு ஆஸ்பெட்டாசு ஆலை, மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை, பல்வேறு தொழிற்சாலை கழிவுகள்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம்: கிரானைட் கொள்ளை

திருப்பூர் மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள்

ஈரோடு மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள், தோல் ஆலை கழிவுகள், பெருந்துறை சிப்காட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலை கழிவுகள், பெருந்துறை கொக்கோ-கோலா ஆலை, பவானி சாகர் பகுதியில் உள்ளகாகித ஆலை கழிவுகள்

சேலம் மாவட்டம்: அனல்மின் நிலையம், மால்கோ தொழிற்சாலைகள், விதிமீறி வெட்டப்படும் பாக்சைட்.

நாமக்கல் மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள், காகித ஆலை கழிவுகள், ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை,

கரூர் மாவட்டம்: காகித ஆலை கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகள், ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை,

மதுரை மாவட்டம்: வடபழஞ்சி அணுக்கழிவு ஆராய்ச்சி, கிரானைட் கொள்ளை, அமையவிருக்கும் சிவரக்கோட்டை சிப்காட்

மதுரை- விருதுநகர்(அருப்புக்கோட்டை)- தூத்துக்குடி மாவட்டம்: இண்டஸ்ரியல் காரிடார் திட்டம்

திண்டுக்கல்: தோல் தொழிற்சாலை கழிவுகள்

தேனி மாவட்டம்: நியூட்ரினோ

நெல்லை மாவட்டம்: கூடங்குளம் அணு உலை, தாமிரபரணி ஓரம் அமைந்துள்ள காகித ஆலை கழிவுகள், புதிதாக அமைக்கப்பட இருக்கும் டிஎன்பிஎல்(TNPL) காகித ஆலை , கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள கொக்கோ-கோலா ஆலை, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் பெப்சி ஆலை.

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்: தாது மணல் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம்: இந்திய அருமணல் ஆலை (IRE)

தூத்துக்குடி மாவட்டம்: ஸ்டெர்லைட், தாரங்கதாரா (வாழும் போபால்) சிப்காட் வளாக இரசாயன தொழிற்சாலைகள், தமிழ்நாட்டுக்கு ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கொடுக்காமல் தனி கிரீட் (மின்பாதை) அமைத்து அண்டையில் உள்ள கேரளா, கர்நாடக, ஆந்திரத்திற்க்கும், இலங்கை போன்ற வெளிநாட்டுக்கும் விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள, அமைக்கப்பட இருக்கும் 14,000 மெகாவாட் திறன் உள்ள 15 அனல்மின் நிலயங்கள்

இது போக

- தமிழ்நாட்டில் உள்ள 33 ஆறுகளிலும் வரைமுறையற்ற ஆற்று மணல் கொள்ளை

- 20 மாவட்டங்களில் வரைமுறையற்று மலைகளை வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கொள்ளை

- வரைமுறையற்ற முறையில் அள்ளப்பட்டுவரும் தாது மணல் கொள்ளை

- வரைமுறையற்ற முறையில் அள்ளப்பட்டு வரும் பல்வேறு கனிமங்கள்

- நீர்வளக்கொள்ளையாய் அனைத்து இடங்களிலும் நீரை உறிஞ்சி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கோகோ கோலா மற்றும் பெப்சி தொழிற்சாலைகள், பல்வேறு தனியார், அரசு(அம்மா குடிநீர், ரயில் குடிநீர்) தண்ணீர் தொழிற்சாலைகள்...

- தனிநபர்களின் கொள்ளைக்காகவும், அரசின் பொறுப்பற்ற கொள்கையால் அழிக்கப்பட்டு வரும் பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகள்.

- திட்டமிட்டு தமிழகத்திற்க்கு வரும் ஆறுகள் அண்டையில் உள்ள கேரளா, கர்நாடக, ஆந்திர அரசுகளால் மறிக்கப்படுதல்

-கடல்வளத்தை அழிக்கும் கடலோரங்களில், கடலில் அமைக்கும் எண்ணற்ற மாசுபடுத்தும் ஆலைகள், ஆய்வுகள். கடலில் அனுமதிக்கப்படும் பெரு நிறுவன கப்பல்கள்

- மலைகளில் உள்ள கனிமவளங்களைக் கொள்ளையடிக்க பாரம்பரிய பழங்குடிமக்களை வெளியேற்ற, தேன் தடவிய பெயரில் கொண்டுவரப்படும் இந்திய, தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள்

- தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் திட்டம் என்றாலோ, தொழில்கள் என்றாலோ அது அனைத்தும் உலகில் காலம்கடந்த(காலாவதியான) தொழில்நுட்பங்கள் திணிக்கப்படுவதாகவோ, உலகில் உள்ள கழிவுகளை கொண்டு வந்தோ அல்லது விசக்கழிவுகளை உண்டாக்கும் அழிவு திட்டங்களாகவோ மட்டும் உள்ளன‌.

நாம் நமது இயற்கையை, கனிமவளங்களை, நீர்வளங்களைக் காக்க ஒன்றுபட்டு செயல்படுவோம்.

பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலில் இருந்தும், இந்திய முதலாளிகளின் சுரண்டலில் இருந்தும் தமிழகத்தை மீட்போம்... தமிழ்நாட்டின் நிலைமையை மாற்றுவோம்...

- முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் & கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்