ஒரே ஒழுங்கில்
theatreஒரே ஒசையில்தான்
அடித்துக் கொள்வார்கள்
வில்லனும் கதாநாயகனும்

சொல்ல வேண்டிய யாவற்றையும் 
முழுமையாகச் சொல்லிவிட்ட பிறகுதான்
தலை சாய்ந்து போகிறது
துப்பாக்கியால் சுடப்பட்டவர்க்கு

சொல்லிவைத்தாற்போல் 
ஒரே தொனியில்தான்
ஒலமிடுவார்கள்
கற்பழிக்கத் துரத்தப்படும் 
கதாநாயகிகள்.

கதாநாயகன் வந்து
காப்பாற்றும் வரை
கதாநாயகியைக் கட்டி வைத்து
நிதானமாக பேசி 
சித்ரவதை செய்வான் வில்லன்

முக்கிய கட்டத்தில் 
கைத்துப்பாக்கியில்
தோட்டா தீர்ந்துபோகும்
கதாநாயாகனுக்கு.

அந்த காலத்தில் 
அம்மா பாடிய பாடலால்
ஒன்றிணைந்து கட்டியழுவார்கள்
அதுவரை எதிரிகளாயிருந்த
அண்ணனும் தம்பியும்

எல்லாமுமே 
ஒரே மாதிரியாகத்தான்
இருக்கிறது
கடந்த இருபத்தைந்து
ஆண்டுகளுக்கும் மேலாக.

இருந்தும் 
நாகூசாமல்
அடிக்கடி சொல்கிறீர்கள்
புத்தம் புதிய
தமிழ் திரைப்படம் என்று.


ஜெயபாஸ்கரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It