1. முருங்கைக்கீரை - இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வரக்கூடும்.

2. மீன் , பால் சுறாப்புட்டு மிகச்சிறந்த உணவு, இதுவும், செய்த அன்று சாப்பிடுவது நல்லது, வைத்திருந்து சாப்பிடக்கூடாது குறிப்பாக பால் கொடுக்கும் பெண்கள்.

3. கீரை வகைகள் அத்தனையும் சாப்பிடலாம்.

4. பசும்பால் குறைந்தபட்சம் 500 மிலி குடிக்கவேண்டும்.

தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் தாய்மார்களுக்கு:
*  தாய்ப்பால் ஊட்டுவதால் உடலில் உள்ள கொழுப்புச் சத்துக் குறைந்து பிரசவத்திற்கு முன் ஏறிய உடல் எடை தானாகக் குறைந்துவிடும்.
*மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது
* தாய்க்கும் குழந்தைக்குமான அன்யோன்யம் அதிகரிக்கிறது
* பிரசவத்திற்கு பின் இருக்கும் பெருத்த வயிறும் தாய்ப்பால் ஊட்டுவதால் ஓரளவு கட்டுப்படும்
(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)