தேவையான பொருட்கள்:
கோழி – 1/2 கிலோ (தோல் நீக்கியது)
சின்ன வெங்காயம் – 1 கப் (நீளமாக நறுக்கியது அல்லது இடித்தது)
மல்லி – 2 தேக்கரண்டி
அரிசி – 1 தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
மிளகு – 10 துண்டுகள்
வத்தல் - 10 -15
அரைத்த தேங்காய் விழுது - 1/2 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இலை - 10
வெங்காயத்தாள் 1 தண்டு (optional)
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நல்லெணய் – 3 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
அரைக்க வேண்டியவை:
மல்லி – 2 தேக்கரண்டி
அரிசி – 1 தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
மிளகு – 10
வத்தல் - 10 -15
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
• கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரிசி, மல்லி, சீரகம், கறிவேப்பிலை, வத்தல் முதலியவற்றை சேர்த்து வதக்கவும் (குறிப்பு – மிதமான சூடில் வதக்கவும்)
• ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலாவாக நைசாக அரைக்கவும்.
• குக்கரில் சுத்தம் செய்த கோழி (சிறிய துண்டுகளாக நறுக்கியது) , அரைத்த மசாலா, சின்ன வெங்காயம், இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறவும். அத்துடன் உப்பு சேர்த்து வதக்கவும். விசில் போட்டு குக்கரை முடி வைக்கவும்.
• இரண்டு விசில் வந்த பின்பு அரைத்த தேங்காய் பாலை சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து கெட்டியாக வரும்போது கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். சூடாக சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.
Yummy
...
RSS feed for comments to this post