நாகசேனர், புத்தத் தத்தர், தம்மபாலரைப் போல புத்தகோசரும் சூக்தங்களுக்கும், பிடகங்களுக்கும் தன்னுடைய மாபெரும் விளக்க உரைகளைப் பாலிமொழியில் ஆக்கியளித்துள்ளார். தேரவாதியாக அறியப்படுகிற புத்தகோசர் இந்திய துணைக் கண்டத்துத் தென்பகுதியில் உள்ள சோழநாட்டில் சிறிது காலம் இருந்தவர். இலங்கை என்று சொல்லப்படுகிற ஈழத்து மஹாவீரையிலிருந்து திரும்பிவந்து தனது தாயகமான சோழநாட்டு தலைநகரான உரகுபுரம் என்று சொல்லப்படுகிற உறையூரில் தங்கியிருந்த புத்ததத்தரைச் சந்தித்துவிட்டு ஈழத்து மஹாவீரைக்குச் சென்று அங்கிருந்தபடியே புத்தகோசர் தனது ஆகச் சிறந்த ஆக்கமாகிய விசுத்திமக்காவை (Path of Purification) ஆக்கித் தந்ததாகத் தெரிகிறது. மிகச் சிறந்த உரையாளரான புத்தகோசரின் வாழ்வையும்-பணியையும் அறிவதற்குத் தமிழில் ஒரு கட்டுரையும் எமக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் கோசரின் வாழ்வையும்-பணியையும் அறிமுகம் செய்வதே எமக்குவாய்த்தப் பணியாகிவிட்டது. எனவே புத்தகோசர் குறித்த அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

                புத்தகோசரின் வாழ்வும் பணியும் குறித்த இக்கட்டுரை பின் வரும் தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ளது.

  • அடிப்படை ஆதாரங்கள்
  • புத்தகோசரின் வாழ்வு
  • பிறப்பிடம் குறித்த கருத்து வேறுபாடுகள்
  • மஹாவஸ்த்தி இரேவதாவிடம் கோசர் தம்மபதம் பயிலுதல்,
  • புத்ததத்தரை சந்தித்துவிட்டு புத்தகோசர் ஈழத்து மஹாவிகாரைக்குச் செல்லுதல்
  • புத்தகோசரின் பணிகள்,
  • புத்தகோசர் எழுதிய உரைகள்
  • விசுத்திமக்காவின் சாராம்சம்
  • விமரிசனங்கள்
  • தொகுப்புரை
  • அடிக்குறிப்புகள்
  • பார்வைநூல்கள்

என்கிற நிலையில் இக்கட்டுரை அமைகிறது.

 

  • 1.     அடிப்படை ஆதாரங்கள்

புத்தகோசர் ஞானிகள் பலரைப் போல தமது வாழ்க்கையை எழுதிவைக்கவில்லை. இதனால் கோசருடைய வாழ்வை அறிவது மிகவும் இடர் நிறைந்ததாகக் காணப்படுகிறது. பொதுவாக பிக்கு மற்றும் பிக்குணிகளின் வாழ்வு இடையறாத பயணத்தினாலானது. புத்தகோசரின் வாழ்வும் இவ்வாறு அமைந்து விட்டதனால் இவருடைய வாழ்வைக் குறித்து முழுமையாக அறிவதற்கில்லை. புத்தகோசர் எழுதிய உரைப்பகுதிகளில் வெளிப்படையாக இவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும்இவர் குறித்த நம்பகமான தகவல்களை மூன்று ஆவணங்களிலிருந்து பெறமுடிகிறது.புத்தகோசரின் உரைகளில் காணப்படுகிற முகவுரை என்று சொல்லப்படுகிற பாயிரம் பின்னிணைப்பு(short prologues and epilogues)”1” ஈழத்து வரலாற்று நூலான மஹாவம்ச, மிகச் சமீபத்திலறியப்பட்ட புத்தகோசபதி உள்ளிட்டவற்றில் இவர் வாழ்க்கை தொடர்பான தகவல்கள் காணப்படுகின்றன. இவைமட்டுமின்றி கந்தவம்சம், சாசனவம்சம், தீபவம்சம் உள்ளிட்ட நூல்களிலும் இவருடைய வாழ்க்கைக் குறிப்புகள் காணப்படுகின்றன.”3” புத்தகோசரின் சமகாலத்தவராக அறியப்படும் புத்ததத்தரின் அபிதம்ம அவதாரத்திலும், புத்தகோசர் விட்டுச் சென்ற குறைப்பணிகளை நிறைவு செய்தவர் தம்மபாலர் ஆகவே தம்மபாலரின் உரையிலும்”4” மற்றும் 13ஆம் நூற்றாண்டை சார்ந்த தர்மகீர்த்தியின் உரையிலும்”5” புத்தகோசர் வாழ்க்கைக் குறிப்பு கிடைக்கின்றன.

  • 2.    புத்தகோசரின் வாழ்வு

புத்தநெறிக்கான பாலி மொழி உரையாளர்களுள் ஆகச் சிறந்த ஆளுமையான புத்தகோசர் மரபான வைதீக பிராமண குடும்பத்தில் பிறந்தவர். “6” இவருக்கு பெற்றோர் இட்டப் பெயர் கோசர் என்பதாகும். புத்தநெறியை ஏற்றுக் கொண்ட பிறகே இவர் தனது பெயரை புத்தகோசர் என்று மாற்றிக் கொண்டிருக்கவேண்டும். “7” புத்தகோசர் என்ற பெயருக்கான பொருள் புத்தரின் குரல் என்பதாகும். “8”தேரரான இவர் பதாந்தகரிக்கா என்று அறியப்படுகிறார். பதாந்தகரிக்கா என்பதற்கு பயணத்தை மேற்கொள்பவர் என்று பொருள் இருக்கிறது. “9” தென்னிந்தியாவின் அன்றைய சோழநாட்டு பகுதியான காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர் புத்தகோசர். காஞ்சிபுர நகரத்தில் இவர் பிறக்கவில்லையென்றாலும் இப்பகுதிக்குட்பட்ட ஒரு சிற்றூரில் இவருடைய பெற்றோர் வாழ்ந்தனர். எனவே இவரும் பெற்றோர் வாழ்ந்த சிற்றூரிலே பிறந்து வளர்ந்திருக்கவேண்டும் எனக் கருதவும் இடம் உண்டு. என்றாலும் இவருடைய பிறந்த இடம் குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

 

  • 3.    புத்தகோசர் பிறந்த இடம் குறித்த கருத்துவேறுபாடுகள்

புத்தகோசர் தென்னிந்தியாவில் பிறந்தவர் என்றும் வட இந்தியாவிலிருந்த அன்றைய மகத அரசுக்குட்பட்ட புத்தகயாவிற்கு அருகில் பிறந்தவர் என்றும் ஆய்வாளர்கள் நடுவில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பரமிய மரபு கதையும், மஹாவம்சமும் இவ்விருகருத்து வேறுபாடுகளுக்கு அடிப்படைகளாக அமைகின்றன. மஹாவம்சம் கூறும் கருத்தே பெரும்பாலான ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது. ஆகவே மஹாவம்சம் கூறும் கருத்துக்களை முதலில் காண்போம். புத்தகோசர் முன்பே குறிப்பிட்டது போல பிராமண குடும்பத்தில் பிறந்தவர். மகத அரசுக்கு உட்பட்ட புத்தகயாவிற்கு அருகில் பிறந்தவர் என்றும் குறிப்பிடுகிறது. இவர் மஹாநாமா அரசரின் ஆட்சிகாலத்தில் ஈழத்து அனுராதபுரத்திற்கு வந்தார் என்றும், மஹிந்தா ஆட்சி காலத்திலும் இருந்தார் என்றும் கூறுகிறது. “Mahavamsa (Turnour), pp. 250-253. Cf Andersen's Pali Reader, pp. 1 13-1 14.

மேலும் ஈழத்து அனுராதபுரத்து மஹாவிகாரையிலிருந்து திரும்பிவந்து புத்தகயாவில் உள்ள போதி மரத்தை பார்த்தார் என்கிற தகவலை மஹாவம்சத்தை மேற்கோள் காட்டி அறிஞர்கள் சுட்டுகின்றனர். எஸ்.பொ. அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு மித்தரன் வெளியீடாக வந்துள்ள மஹாவம்சத்தில் மஹாவீரையிலிருந்த தலைமை ஆச்சாரியர் ஒருவர் புத்தகயாவில் உள்ள போதி மரத்தைச் சென்று பார்த்ததும், பிறகு அங்கிருந்து போதியின் ஒருப் பகுதி ஈழத்து மஹாவீரைக்குக் கொண்டுவரப்பட்டு நிறுவப்படுவதும் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் புத்தகோசர் போன்றதொரு ஆச்சாரியர்களுடைய பெயர்கள் இந்நூலில் காணப்படவில்லை. சிங்களக் கதையாளர்களால் மறைக்கப்பட்டுள்ள தமிழக தொடர்பு குறித்த தகவல்கள் சில அடிக்குறிப்புகளாக தரப்பட்டுள்ள போதிலும் பாலிமொழி ஆச்சாரியர்களின் வரலாறு குறித்த தகவல் எதுவும் காணப்படவில்லை. சமயப் பகைக்காரணத்தினால் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது எனக் கருத வேண்டியிருக்கிறது.

கோசரின் பிறப்பிடம் குறித்த இன்னொருக் கருத்தாவது தென்னிந்தியாவை சார்ந்தவர் என்பதாகும். பர்மாவின் மரபு கதை ஒன்றை ஆதாரங்காட்டி புத்தகோசர் தென்னிந்தியாவை பிறப்பிடமாக கொண்டவர் என விளக்குகிறார் தம்மானந்தாகோசாம்பி.மஹாவம்சத்தின் முகவுரை கூறும் கருத்துப்படிப் பார்த்தால் புத்தகோசர் சிறிது காலம் மட்டுமே காஞ்சியில் தங்கியிருந்தார் என்று கூறுகிறது. ஆனால் உண்மையில் புத்தகோசர் தென்னிந்தியாவில் பிறந்தார் என்று மேற்கத்திய அறிஞர்களான ஆஸ்கர்வோன்ஹினுபா மற்றும் பால்வாட் (Oskar von Hinüber and Polwatte)ஆகியோர் விளக்குகின்றனர். புத்தகோசர் ஆந்திரப் பகுதியிலிருந்து வந்தவர் என்கிற கருத்தும் உண்டு. இந்தத் தகவலை பிக்குபோதிபாலா தாம் எழுதியுள்ள ஆச்சாரியர் புத்தகோசர் என்கிற ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். காஞ்சிபுரமாவட்டத்தில் உள்ள மோரனசேதகம் என்கிற சிற்றூரில் தமிழ் பேசும் பிராமணக்குடும்பத்தில் புத்தகோசர் பிறந்தார் என்கிற கருத்து சுட்டத்தக்கது. மோரனா என்பதற்கு மயில் முட்டை என்று பெயர் மட்டுமல்லாமல் மயூரப்பட்டிணமான மயிலாடுதுரையில் இருந்தபடியே மனோரதபூரணி என்கிற உரையை ஆக்கினார், அடுத்தநிலையில் இவர் ஆந்திராவை சார்ந்தவர் என்று வைத்துக் கொண்டாலும் அன்றைய ஆந்திராவின் ஒருப் பகுதி தமிழகத்தோடு இருந்தது என்பதாலும், ரேனாட்டுச்சோழர் ஆந்திரப் பகுதியை ஆண்டனர் என்பதாலும் இவர் சோழநாட்டவர் எனலாம். இவர் பர்மாவில் பிறந்தவர் என்கிற கருத்தும் கூறப்படுகிறது.

கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்குமுன் பர்மாவில் புத்த நெறி பரவியிருக்கவில்லை. மட்டுமல்லாமல் குறிப்பிடத் தக்கவகையில் புத்த அறிஞர் யாரும் தோன்றியிருக்கவில்லை என்கின்ற ஆய்வாளர்களின் கருத்து நோக்கத்தக்கது. கி.பி.2.ஆம்நூற்றாண்டுமுதல் கி.பி.14.ஆம்நூற்றாண்டு வரை தமிழகத்தில் புத்தத்தின் செல்வாக்கு மிகுந்து இருந்தது. அதுவும் குறிப்பாகச் சோழநாட்டை மைய்யமாகக் கொண்டுதான் இருந்தது. மோரனா என்பது தமிழகத்தை சாரந்தது என்பதையும் நினைவில் கொண்டு பார்க்கிறபோது தமிழகத்தில் அன்றைய சோழநாட்டில் பிறந்தார் என்கிற கருத்து மேல்சுட்டிய அறிஞர்களின் கருத்துக்களோடு ஒத்துப் போகிறது. பாலிமொழி புத்த அறிஞர்களை வளர்த்தெடுத்ததில் தமிழகத்திற்கு மட்டும் வரலாற்றில் தனியிடம் உண்டு. குறிப்பாக காஞ்சிபுரத்தில் மட்டும் நாளந்தவுக்கான இருக்கைகள் இருந்தன. புத்த ஆச்சாரியர்களும் மாணவர்களும் காசி நாலாந்தாவிற்கு காஞ்சிபுரத்திலிருந்தே சென்றனர். கவுதமபுத்தருடைய சிந்தனைகள் யாவும் பொருள்முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலேயே தமிழகம் பொருள் முதல்வாத நாத்தீகக் கொள்கைகளை கற்பிக்கும் இடமாக விளங்கியிருக்கிறதை பின்வரும் சக்கரவர்த்திநயனாரின் தகவல் நமக்கு உணர்த்தக் கூடியது. “‘நீலகேசி’ என்ற காவியத்தின் பதிப்புரையில் பேராசிரியர் அ. சக்கரவர்த்தி நயினார் தமிழ்நாட்டில் பூதவாதம் வழக்கில் இருந்ததைக் குறித்து எழுதுகிறார்.

“இராஜகிருகத்தின் அருகில் நாளந்தா என்னும் நகரில் மாதவன் என்னும் ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு கோஷ்டிலன் என்ற மகனும் சாரி என்ற மகளும் இருந்தனர். கொள்கைக் கற்றுக்கொள்வதற்காகத் தென்னாடு சென்றான். சாரி, தென்னிந்திய பிராமணன் ஒருவனை மணந்துகொண்டாள். அவன் பெயர் திஷியன் .அவனுக்கு ஒரு மகன் பிறந்தான் அவனுக்கு உபதிஷியன் என்று பெயரிட்டார்கள் அவர்களுடைய இளைய மகனுக்கு சாரிபுத்தன் என்று பெயர. அவர்கள் வாழ்ந்த ஊருக்கு பக்கத்து ஊரில் மொக்கல் என்னும் சிறுவன் இருந்தான். இருவரும் அவர்கள் இருவரும் பலத்தத்துவங்களைக் கற்றார்கள் அவற்றுள் ஒன்று பூதவாதம்அவர்கள் இளைஞர்களான பின்னர் புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை அடைந்து அவருடைய சங்கத்தில் சேர்ந்தார்கள். “மாமன்னர் அசோகர் காலம் தொட்டே அதாவது கி.மு. 3ம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் புத்தநெறி வளரத் தலைப்பட்டது.

மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு தேரவாத புத்தக் கருத்துக்களும் பாலிமொழியும் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்திய துணைக் கண்டத்தின் வடக்கத்திய சூழலில் வைதீக சார்புடைய சமஸ்கிருத அறிஞர்களின் மஹாயானம் செல்வாக்குப் பெற்றது. அஸ்வகோசர், நாகார்ஜுனர், திந்நாகர், வசுபந்து போன்றோர் இந்த பின்புலத்தில் வந்தோர் என்பது குறிப்பிடத் தக்கது. இன்னும் சொல்ல போனால் கனீஷ்கர் காலம் தொட்டே மஹாயானம் எழுச்சி கொண்டது. மஹாயான ஆச்சாரியர்கள் அனைவரும் வைதீகசமஸ்கிருத நெறிப்பட்டவர்கள். இவர்களுக்கு அரசர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்துவந்தது. காஞ்சிபுரத்து புத்தகோசரின் சமகால வட இந்திய அரசனான சமுத்திரகுப்தனும் பாலிமொழி அறிஞர்களை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சங்ககாலம் தொட்டே கி.பி.14-ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் தேரவாத புத்தநெறிக்கும் பாலிமொழிக்கும் ஆதரவு இருந்து வந்திருக்கிறது. அசோகரின் அறவெற்றி பயணத்தின்போது (தர்மவிஜயத்தின்போது) மஹிந்திரரின் புகார் நகரத்தில் ஏழு புத்த விகாரைகள் கட்டுவித்தார். இது சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திரவிகாரை என்றுச் சுட்டப்படுகின்றன. பழந்தமிழக அரசர்களும் புத்தத் தேரர்களுக்கு விகாரை அமைத்துக் கொடுத்துள்ளனர். பாண்டிய அரசன் ஒருவன் அரிட்டருக்கு ஒரு ஊரை அளித்த செய்தியை அரிட்டாப்பட்டி கல்வெட்டு கூறுகிறது.

சேர அரசன் ஒருவன் வெங்காயபன் என்ற புத்த தேரருக்கு படுக்கை அமைத்து கொடுத்தான். இத்தகவலை அரிச்சலூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதியமானும் திருக்கோவிலூருக்கு அருகில் தேரர் ஒருவருக்கு பள்ளி அமைத்து கொடுத்த செய்தியை ஜம்பைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றைத் தவிர கி.பி.3-ஆம் நூற்றாண்டுமுதல் புத்த அரசர்களே தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளனர். அசோகவர்மன், குமாரகுப்தன், அச்சுதவிக்கந்தன் போன்றோர் குறிப்பிட தக்கவர்கள். இந்த புத்த அரசர்களை சைவ தமிழர்கள் கலப்பிறர் பல்லவர் என்று ஒதுக்குகின்றனர். வடக்கே தேரவாத புத்த நெறியும் பாலிமொழியும் மதிப்பிழந்த போது தமிழகத்தில் தேரர்கள் குடியேறி விகாரைகள் தோரும் பாலிமொழியைக் கற்பித்தனர். இதனால் பாலிமொழி புத்த அறிஞர்கள் அனைவரும் தமிழகப் பின்புலத்தை கொண்டவர்களாகத் தெரிகிறது. புத்தத் தத்தத்தேரரும்,புத்தகோசரும் அச்சுதவிக்கந்தன் காலத்தில் தமிழகத்திலிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி.3-ஆம் நூற்றாண்டுவாக்கில் இருந்து தேரவாதமும் பாலிமொழியும் தமிழகத்துக்குரிய சொத்தாக மாறிவிட்டது என்று சொல்லுமளவிற்கு தமிழகம் சிறப்புற்றிருந்த்து. தேரவாதம் என்பது திராவிடம் என்பதை குறிக்கிறது என்கிற கருத்தும் உண்டு. இத்தகைய தமிழக சூழலில் பிறந்து வளர்ந்தவர்தான் புத்தகோசர் எனச் சொல்லமுடியும். இத்தகைய சிறப்புவாய்ந்த புத்தத் தமிழக வரலாறு குறித்து இலங்கை உருவாக்கக் கதையான மஹாவம்ச எதுவும் குறிப்பிடவில்லை. சிங்கல இன அரசியலைக் கட்டியெழுப்புவதற்கான வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் கதைதான் மஹாவம்சம் என்பதாக இருக்கிறபோது தமிழக புத்த வரலாற்றை மறைப்பதில் வியப்பெதுவும் இல்லை. இதனால் புத்தகோசர் மகத அரசுக்குட்பட்ட பகுதியில் புத்தகயாவிற்கு அருகில் பிறந்தார் என்கிற மஹாவம்சத்தின் கருத்து நம்பகத் தன்மையற்றது. ஒருதலை சார்புடையதாகத் தெரிகிறது.

மஹாவஸ்த்தி இரேவதாவிடம் அபிதம்மம் பயிலுதல்

புத்தகோசர் இளமையிலே வேதங்களின் மீது கேள்விகளை எழுப்பி விவாதங்களை நடத்திவந்தார். கி.பி.4ஆம் நூற்றாண்டுமுதலே புத்த சமயத்தோரின் புனித இடமான புத்தகயா இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்தது. கி.பி.5ஆம் நூற்றாண்டில் மஹாவஸ்த்தியாக இரேவதா புத்தகயாவில் இருந்தபோது அந்த விகாரைக்குள் புத்தகோசர் அனுமதிக்கப்பட்டார். ஒருநாள் காலையில் புத்தகோசர் விகாரையில் பதஞ்சலியின் சூத்திரத்தை பாடினார். புத்தகோசரின் பாடலில் சுருதி பிசகுவதை கண்டுகொண்டிருந்த இரேவதாவிடம் புத்தகோசர் என்பாடல் நன்றாக இருக்கிறதா என்று கேட்க, ‘சரியில்லை’ என்று பதில் அளித்தார் இரேவதா. புத்தகோசர் எனக்கு சரியாக கற்றுத் தரமுடியுமா என்று கேட்க இரேவதா கோசரை அன்று முதல் மாணவராக ஏற்றுக் கொண்டு அபிதம்மத்தைக் கற்றுக் கொடுத்து இதன் மூலப் படிகள் எல்லாம் ஈழத்து மஹாவிகாரையில் இருப்பதாக சொல்லி நீ சென்று அவற்றையெல்லாம் தேடி உரையெழுதி புத்த நெறியை அனைவருக்கும் பரப்புவாயாக என்று வாழ்த்துக் கூறி கோசரை இரேவதா ஈழத்திற்கு அனுப்பினார் என்றுக் கூறப்படுகிறது.

புத்ததத்தரை சந்தித்தல்

புத்தகோசரைப் பற்றி அறிவதற்கு தமிழில் காணப்படுகிற மிக முக்கியமான வரலாற்று ஆதாரமாக நமக்கு கிடைப்பது புத்தத்தத்தருடனான சந்திப்பாகும். எனவே புத்தத் தத்தருடனான புத்தகோசர் சந்திப்புக் குறித்து அறிவது மிக இன்றியமையாததாகிறது. புத்தத் தத்தர் ஏனைய பாலி அறிஞர்களைப் போல தமிழகத்தைச் சார்ந்தவர். அச்சுதவிக்கந்தன் என்கிற கலப்பிர அரசன் என்று வைதீகத் தமிழர்களால் குறிப்பிடப்படுகிற புத்தநெறி அரசன் காலத்தில் வாழ்ந்தவர் மட்டும் இல்லை இவ்வரசனின் ஆதரவைப் பெற்றவர். இந்த அரசனின் வேண்டுகோள்படி வின

விநிச்சையம் என்கிற நூலை ஆக்கினார். என்கிற இத்தகவலை கே.கே. பிள்ளை தமிழகவரலாறு மக்களும் பண்பாடும் என்கிற நூலில் குறிப்பிடுகிறார். புத்தத் தத்தர் ஈழத்து மஹாவிகாரையிலிருந்து திரும்பி வந்து தனது தாயகமான சோழநாட்டு நாகப்பட்னத்து மண்டலத்துக்கு நிகமம் உரகுபுரமான உறையூரில் தங்கியிருந்தபோது புத்தகோசரைச் சந்தித்தார். தேரரின் ஈழத்து அனுபவம் குறித்து கேட்டறிந்தார் எனக் கூறப்படுகிறது. புத்தகோசர் புத்தத் தத்தர் சந்திப்பு குறித்து தமிழ் மற்றும் வட இந்திய ஆய்வாளர்கள் இடையில் இருவேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மேலே காட்டப்பட்டுள்ள கருத்து தமிழ் ஆய்வாளர்களின் தகவல்களிலிருந்து பெறப்பட்டது. புத்த அறிஞர்கள் (budhist scalars 1954. T.n. ramachandhiran) குறித்து எழுதிய ராமசந்திரன் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் கே.கே. பிள்ளை, பவுத்தமும் தமிழும் மயிலை சீனி. வேங்கடசாமி போன்றோர் கருத்துபடி புத்தகோசரும் புத்தத்தத்தரும் காஞ்சியில் இருந்தவர்கள் புத்தத் தத்தர் ஈழத்து மஹாவிகாரையில் சிறிதுகாலம் இருந்து தம் பணிகளை முடித்துவிட்டுத் தாயகமான சோழநாட்டுக்குத் திரும்பிவந்த பிறகு அவரோடு உரையாடிவிட்டு புத்தகோசர் ஈழத்துக்குச் சென்றார். என்பதை அறியமுடிகிறது.” களப குலத்தைச் சார்ந்த அச்சுதவிக்கிராந்தன் என்றொரு மன்னன் சோழ நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தான் என அறிகின்றோம். இவன் காலத்தில் புத்ததத்தர் என்ற பௌத்த அறிஞர் ‘விநய விநிச்சயம்’ என்னும் நூலைத் தாம் எழுதியதாகக் கூறுகின்றார். “கே.கே பிள்ளை (தமிழகவரலாறும் மக்களும் பண்பாடும்)

“பேர்பெற்ற புத்த கோஷர் என்னும் பௌத்த ஆசிரியரும் இவரும் தற்செயலாக ஒருவரை ஒருவர் கண்டு உரையாடியதாகக் கூறப்படுவதாலும், புத்தகோஷர் முதலாவது குமார குப்தன் என்னும் அரசன் காலத்தில் வாழ்ந்திருந்தவராகையாலும், சோழ நாட்டை ஆண்ட அச்சுத நாராயணன், அல்லது அச்சுத விக்கந்தன் என்னும் களபர (களம்ப) அரசனும் மேற்படி குமார குப்தனும் ஒரே காலத்தவராகையாலும், புத்ததத்த தேரரை அச்சுத விக்கந்தன் ஆதரித்தவனாகையாலும், இவர் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர். பவுத்தமும் தமிழும் , மயிலை சீனி ‘‘residence: Kanci in southern India.[5] Some scholars thus conclude (among them Oskar von Hinüber and Polwatte Buddhadatta Thera) that Buddhaghosa was actually born in South India and was relocated in later biographies to give him closer ties to the region of the Buddha.[5]

The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history.[15]” இனி வட இந்திய ஆய்வாளர்களின் கருத்துகளை காண்போம். வட இந்திய ஆய்வாளர்கள் பெரும்பாலோர் மஹாவம்ச கருத்துகளை ஏற்போர் என்பது முன்பே சுட்டப்பட்டுள்ளது. புத்தகோசர் புத்தகயாவிலிருந்து ஈழத்த அனுராதபுரத்து மஹாவீரைக்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தபோது ஈழத்து மஹாவீரையிலிருந்து புத்தத் தத்தர் திரும்பிவந்து கொண்டிருந்தார். வழியில் ஒருவரையொருவர் பார்த்து பார்த்துப் பேசி கொண்டனர். (தத்தர்) “சகோதரனே எங்கிருந்துவருகிறாய்?” (கோசர்) “புத்தகயாவிலிருந்து வருகிறேன்.” (எங்கே போய் கொண்டிருக்கிறாய்” (கோசர்) “ஈழத்து அனுராதபுறத்து மஹாவீரைக்கு.” (தத்தர்) “எதற்காக செல்கிறாய்?” (கோசர்) புத்த மறை நூல்களுக்கு உரையெழுத போகிறேன்.” (தத்தர்) “நல்லது நானும் அவ்வண்ணமே திரு பணியாற்றிவிட்டு ஈழத்து மஹாவீரையிலிருந்த்தான் வருகிறேன்.” (கோசர்) “அப்படியா எந்த எந்த மறைநூல்களுக்கு நீங்கள் உரை செய்துள்ளீர்கள் அவற்றையெல்லாம் எனக்கு கொடுக்க முடியுமா” (தத்தர்) “ஓ, தாரளமாக” என்று சொல்லி தாம் எழுதிய அபிதம்ம அவதாரத்தை அபிதம்மத்துடனும், வினையவினிச்சையத்தை வினையபிடகத்துடனும் அவ்வற்றிற்குரிய புனித பேழையிலிட்டு கோசரிடம் தத்தர் கொடுத்தார். புத்தகோசர் தத்தரிடம் உரைப் பணிகளை கேட்டுக் கொண்டிருந்த போது த்த்தர் கோசரிடம் தாம் தாம் எழுதிய உரைகளையும் பிடகங்களையும் அவ்வவற்றிற்குரிய பெட்டிகளில் இட்டு கோசரிடம் கொடுத்தார். எழுதும் உரைகளில் ஒவ்வொரு படியை தவராமல் தமிழ் நாட்டிற்கு அனுப்பவேண்டும் என்று கோசரை தத்தர் கேட்டுக் கொண்டார். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோதே படகு வேகமாக சென்றது. அதாவது கோசர் ஒரு படகில் போகவும் த்த்தர் ஒரு படகில் வரும் படகில் சென்றபடியே இருவரும் பேசிக் கொண்டனர் என்பது போல கருத்து காணப்படுகிறது. இக்கருத்துகளை 2500 years in Buddhism, history of pali litterature, disiples in Buddhism போன்ற நூல்கள் சுட்டுகின்றன. உண்மையில் இதுபோன்ற கதை மிக சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தகோசபதி என்னும் நூலில் காணப்படுகிறது. கிட்டத்தட்ட இதுவும் மஹாவம்சத்தை போன்று சிங்கல கருத்தியலை முன்வைப்பதாக காணப்படுவதை மறப்பதற்கில்லை.

புத்ததத்த தேரர்

‘‘இவர் சோழநாட்டவர் இலங்கையில் அநுராதபுரத்திலிருந்து மகாவிகாரையில் இவர் சிலகாலம் தங்கியிருந்தார். பின்னர், கவீரபட்டினம் (காவிரிபட்டினம்) உரகபுரம் (உரையூர்), பூதமங்களம், காஞ்சிபுரம், முதலான ஊர்களில் வாழ்ந்துவந்தார். பிறந்த சோழ நாட்டினைத் தமது நூல்களில் பாராட்டிக் கூறியிருக்கின்றார்.

துறைமுகப்பட்டினமென்ற, செல்வத்தொகுதியும் மக்கட்கூட்டமும் நெருங்கிய இடமென்றும், அப்பட்டினத்தில் இவர் தங்கியிருந்த பௌத்தப்பள்ளி நெடுஞ்சுவர்களால் சூழப்பட்டுப் பெரியவாயில்களை உடையதென்றும், பள்ளிக்கட்டிடங்கள் பெரியனவாய் வெண்சுதை பூசப்பெற்றுக் கயிலாயம்போல் வெண்ணிறமாக விளங்குமென்றும் அபிதம்மாவதாரம் என்னும் நூலில் இவர் எழுதியிருக்கின்றார்.

காவிரிப்பூம்பட்டினத்துப் பௌத்தப்பள்ளியில் இருந்த போது, தமது மாணவராகிய புத்த சீகா என்பவர் வேண்டுகோளின்படி புத்தவம்சாத்தகாதை என்னும் நூலையும், சுமதி என்பவர் வேண்டுகோளின்படி, அபிதம்மாவதாரம் என்னும் நூலையும் இயற்றினார். சோழநாட்டுப் பூதமங்களம் என்னும் ஊரில் கண்ணதாசர் அல்லது வேணுதாசர் (இவர் வைணவராக இருந்து பின்னர் பௌத்தர் ஆனார் போலும்) என்பவரால் கட்டப்பட்ட பௌத்தபள்ளியில் தங்கியிருந்தபோது, இவர் பினய வினிச்சயம் என்னும் நூலைப் புத்தசீகா என்பவர் வேண்டுகோளின்படி இயற்றினார். அன்றியும், இலங்கையில் வாழ்ந்திருந்த மகாதேரர் சங்கபாலர் என்பவர் வேண்டுகோளின்படி உத்ர வினிச்சயம் என்னும் நூலைனைச் செய்தார். அன்றியும், புத்தவம்சம் என்னும் நூலுக்க மதுராத்த விலாசினி என்னும் உரையையும் ரூபாரூபவிவாகம், ஜினாலங்காரம் என்னும் நூல்களையும் இயற்றியிருக்கின்றார். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பௌத்தர்களால் இவர் மிகவும் போற்றப்படுபவர்.

பேர்பெற்ற புத்த கோஷர் என்னும் பௌத்த ஆசிரியரும் இவரும தற்செயலாக ஒருவரை ஒருவர் கண்டு உரையாடியதாக்க் கூறப்படுவதாலும், புத்தகோஷர் முதலாவது குமாரகுப்தன் என்னும் அரசன் காலத்தில் வாழ்ந்திருந்தவராகையாலும், சோழ நாட்டை ஆண்ட அச்சுத நாராயணன், அல்லது அச்சுத விக்கந்தன் என்னும் களபர (களம்ப) அரசனும் மேற்படி குமார குப்தனம் ஒரே காலத்தவராகையாலும், இவர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர். (மயிலை சீனி. வேங்கடசாமி – பௌத்தமும் தமிழும்)

புத்தகோசரின் பணிகள்

தமிழகத்திலிருந்து ஈழத்துமஹாவீகாரைக்குச் சென்ற புகழ் மிகு அறிவர் ஆச்சாரிய புத்தகோசர் வாழ்வியல் அனுபவத்தை எழுதுதல், புத்த பாலி அறிவரின் நூல்களுக்கு விளக்க உரைகள் எழுதுதல், பாலிபிடகங்களுக்கான சிங்கள உரைகளை மீண்டும் பாலிக்கு மாற்றி நுண்பொருள்மாலை ஏற்றுதல் என்கிற நிலையில் இவர் தம் பணிகளை அமைத்துக் கொண்டார். புத்த பாலி மொழி அறிவரின் நூல்களுக்கு புத்தகோசர் இயற்றிய உரைகளைப் பற்றி முதலில் குறிப்பிடுவது தேவையாகிறது.

தமிழகத்திலிருந்தபோதும் ஈழத்திலிருந்தபோதும் தமது உரைப்பணியை தொடர்ந்து செய்தார். ஆச்சாரிய புத்தகோசர் நாடகம், கவிதை, பிடகங்கள் என்று பலவற்றிற்கு உரைகளை ஆக்கி அளித்துள்ளார். என்பதை மஹாவம்சம் தெரிவிக்கிறது.பாலி புனித நூல்களுள் ஒன்றான திபிதக்கா மூலமாக 14. நூல்களது பெயர்கள் மட்டுமே தற்போது தெரியவருகின்றன. அவை வருமாறு, வினையபிடகத்திற்கு வினையா என்று பொதுவாகவும் சாமந்தபசதிகா, பாத்திமக்கா, கந்தவித்ரானி, சுத்தப்பிடகத்தில் உள்ள தீகநிகாயத்திற்கு சுமங்கலவிலாசினி, மற்ஜிமநிகாத்திற்கு பாபாசாஸுவதமி, சம்யுக்த்தநிகாயத்திற்கு சரத்தப்பக்கசீனி, அங்குத்தரநிகாயத்திற்கு மனோரதபூரணி, குத்தகநிகாயத்திற்கு குத்தகபதா, பரமார்த்தஜோதிகா, தம்மபததிற்கு தம்மபத அட்கதா, சுத்தநிபாத்திற்கு சுத்தநிபாதஅட்டக்கதா, ஜாதகாவிற்கு ஜாதகாத்தவநாநா, ஜாதகாட்டக்கதா, அபிதம்மாபிடகத்திற்கு தம்மாசங்கானி, அத்தசாலினி, விபங்கா, தாத்துக்கதா, சாமோஹாவினோதனி, பசப்பாகரமாத்தக்கதா, கதாவத்து, எமகம், பத்தானி ஆகிய உரைகளை புத்தகோசர் ஆக்கி அளித்துள்ளார். இந்த தகவலை மஹாவம்சம் 19, 20, 21. ஆகிய அத்தியாயங்களும் திபிதக்கா என்கிற நூலும் நமக்கு தெரியப்படுத்துகின்றன.

புத்தகோசர் முதலில் ஞானோதயம் என்கிற தன் அனுபவ நூலை இயற்றினார். பிறகு அத்தசாலினி என்பதையும் அதனை அடுத்து மஹாவஸ்தி ரேவதாவின் தம்ம போதனைக்கு தம்மசங்கானி என்கிற உரையையும் இயற்றியுள்ளார். இவர் உறையூரிலிருந்தபோது மனோரதபூரணியை எழுதினார். தன் காலம் வரை வாழ்ந்தபுத்த அறவோர் அறிவோர் குறித்தும், புத்தரின் 45. மழைகாலங்கள் குறித்தும் இந்நூலில் கோசர் குறிப்பிடுகிறார்.கவுதம சித்தார்த்தர் 45. மழைகாலங்கள் இந்த பூவுலகில் புத்தராக வாழ்ந்தார என்கிற தகவலைக் கோசரின் இந்நூல் நமக்குத தருகிறது. மழை காலங்களும் தங்கியிருந்த நகரங்களும் வருமாறு, இசிபட்டினம், 2-4. ராசகிருகம், 5. வைசாலி, 6. மான்குல பருவதம், 7. திரிசங்கு சொர்க்கம், 8. பகிச்கலவனம், 9. கோசாம்பி, 10. பரிலேயகா, 11. நளா, 12. வெரன்னியம், 13. கலிய பருவதம், 14. ஸ்ராவஸ்த்தியில் உள்ள ஜதிவனம், 15. கபிலவஸ்த்து, 16. அலாவியா, 17. ராஜகிருகம், 18-19 சாலிய பர்வதம், 20. ராஜகிருகம், 21-40. ஜேதவனம், புப்பராமம்.“ உள்ளிட்ட நகரஙகளில் கவுதமபுத்தர் தங்கி தமது போதனைகளை நிகழ்த்தினார். இந்த தகவலை புத்தகோசர் மனோரதபூரணியில் குறிப்பிடுகிறார். தமிழகத்திலிருந்தபோதுதான் கோசர் இந்நூலை ஆக்கியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rainy Seasons Places
First Rsi-patana
Scond to fourth Rajagrha
Fifth Vaisali

S

Ixth

Mankula-parvata
Seventh Trayastrimsa Heaven
Eighth Bhesakalavana, near
  Sumsumara-giri.
Ninth Kausambi
Tenth Pari leyy aka
Eleventh Nala
Twelfth Veranja
Thirteenth Caliya-parvata
Fourteenth Jetavana in Sravasti
Fifteenth Kapilavastu
Sixteenth Alavi
Seventeenth Rajagrha
Eighteenth & nineteenth .. Caliya-parvata
Twentieth Rajagrha
Twenty-first to forty- Jetavana or Pubbarama in
sixth Sravasti.

ஜாதகஅட்டகதா என்பது இலங்கை உருவாக்கத்திற்கான தொன்மகதைகளைக் கொண்டது. இலங்கை அரசர்களின் முன்னோர்களாக மனுநீதி, சிபி குறித்த தொன்மங்கள் இந்நூலில் விவரிக்கப்படுகின்றனர். தசையிழந்த புறாவுக்கு தன்னையே கொடுத்த செம்பியன் சோழர்களின் முன்னோனாக விவரிக்கும் புறநானூற்றுச் செய்யுளும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. அட்டக் கதா மஹாநாமா என்பவர் கி.பி.5.ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் மஹாவிகாரை நிறுவியது முதற்கொண்டு இலங்கை புத்த வரலாற்றை தெறிவிக்கிறது. கி.பி. 2.ஆம் நூற்றாண்டில் கணித்கர் அரசனின் ஆதரவை பெற்ற சமஸ்கிருத ஆச்சாரியர் அஸ்வகோசரின் சுந்தரநந்தன் உள்ளிட்ட காவிய நாடகத்தை புத்தகோசர் தொகுத்து 13. அத்தியாயங்களை பாலியில் ஆக்கியுள்ளார். கி.பி. 7.ஆம் நூற்றாண்டில் இந்நாடக காவியம் மகதியாகிய பாலியிலிருந்து சீனமொழியில் பெயர்த்து எழுதப்பட்டதாக தெரிகிறது. புத்தகோசர் பிராமணக்குடும்பத்தைச் சார்ந்தவர் என்பது இக்கட்டுரையின் முன் பகுதியில் கூறப்பட்டுள்ளது. கோசர் தீகநிகாயத்திற்கு எழுதிய சுமங்கலவிலாசினி என்கிற உரையில் பிராமணர்களின் வேதவேள்வி வழிபாடுகள் போன்ற நடைமுறைகளை விளக்குகிறார். அவற்றின் சாரத்தை சுருக்கமாக காண்போம். இருக், எஸூர், சாம, அதர்வனம் என்று 4. வேதங்கள் பிராமணருக்கு உண்டு. பிரம்மனின் தலையில் பிறந்தவரே பிராமணர். பாதத்தில் பிறந்தவர் சூத்திரர். பிராமணர் யாரும் பிரம்மனை கண்டதில்லை ஆனால் இந்திரன், வருணன், பிரஜாபதி, மாருதி, எமன் உள்ளிட்ட தெய்வங்கள் பிராமணரால் ஆடு, பசு முதலியவற்றைப்பலி கொடுக்கப்பட்டு உதவிக்கு அழைக்கப்படுகின்றன. மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அரசனைப்போல கவுரவித்து விருந்தளித்து பலி கொடுக்கும் பழக்கத்தையும் குறிப்பிடும் கோசர் இவ்வகையான பழக்கங்கள் யாவும் அகற்றப்பட வேண்டியன.

புத்தரின் கொல்லாமை உள்ளிட்ட கொள்கைகளே சமூகத்தை மாற்றியமைக்கவல்லது. என்று சுமங்கலி விலாசினியில் புத்தகோசர் குறிப்பிடுவதை மாலசரண்லா தனது ‘Life and work In budha ghosha’ என்கிற நூலில் எடுத்துக்காட்டுகிறார். வேதமரபுகளையும் பிற சமூக கிளை மரபுகளையும் நன்கு அறிந்து அவற்றின் மீது கேள்விகளை எழுப்பி விவாதிப்பது புத்தகோசரின் முறை என்கிற ரைஸ்டேவஸ் போன்றோரின் கருத்தும் மனங்கொள்ளதக்கது. பிராமணனரின் இலக்கியங்களான இதிகாசங்களில் உரையாடலுக்கான பண்பில்லை அவை ஒருவகையான சுருதியோடு மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது இந்த சுருதிநிலைக்கு நிறுக்தம் என்று பெயர் இதற்கு யாஸ்கர் இலக்கணம் எழுதியுள்ளார். என்பதை சுட்டிக்காட்டும் கோசர் புத்தமரபில் உள்ள உரையாடல் முறையை விவரிக்கிறார். ஆச்சாரியர் நாகசேனாவுக்கும் அரசர் மிலிந்தருக்கும் இடையில் நடைபெற்ற கேள்வி பதிலாக அமைந்த உரையாடலை மிலிந்தபன்கா என்கிற நூலிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். புத்தகோசரின் பபங்கசூடாமணி போன்ற நூல்களில் காணப்படுகிறது. இவற்றிலிருந்து அனைத்து அறிவு மரபுகளையும் புத்தகோசர் அறிந்து கொண்டு புத்தநெறி சொல்லாடல்களைக் கருத்தியல் தளத்திலும் சமூக நடைமுறையிலும் உருவாக்கினார் எனலாம். புத்தநெறி அடிப்படையிலேயே உரையாடல் தன்மையோடுதான் தோன்றி வளர்ந்த்து. சீடர்களும், பொதுமக்களும் கேள்வி கேட்க கவுதமபுத்தர் பதில் அளிக்கும் நிலையை சூக்தங்களும் பிடகங்களும் நமக்கு உணர்த்துகின்றன. நாகசேனாவின் மிலிந்தபங்காவும் புத்தகோசரின் பாபங்கசூடாமணியும் உரையாடல் தன்மையில் அமைவன என்பது குறிப்பிடத்தக்கது. புத்தநெறியோடு தொடர்புடைய உரையாடல் பண்பை பிராமணியம் தனதாக்கிக்கொள்ள பகவத்கீதையையும், பிற உபநிடதங்களையும் உருவாக்கியது. என்பது மனங்கொள்ளத்தக்கது.

விசுத்திமக்கா

  • விசுத்திமக்கா என்பது ஒரு கலைக் களஞ்சியமாகும். புத்தசமயத்தின் அனைத்து சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் தத்துவ விளக்கங்களையும் உள்ளடக்கியது. ஆனால் இதனை உரை என்று கொள்வோரும் உண்டு. இதனை ஆக்கியவர் கி.பி.5.ஆம் நூற்றாண்டை சார்ந்த ஆச்சாரியர் புத்தகோசர். இவர் ஈழத்தில் உள்ள அனுராதபுரத்து மகாவிகாரையில் இருந்தபோது இவர் ஆக்கினார் எனச் சொல்லப்படுகிறது. உபதிசா என்பவரின் விமுக்திமக்கா என்கிற சிங்களமொழிநூல் இதற்கு முதல்நூலாகவும் சொல்லப்படுகிறது. ஆச்சாரியா புத்ததத்தரை தொடர்ந்து ஈழத்து அனுராதபுறத்து மஹாவிகாரைக்கு ஆச்சாரியர் புத்தகோசர் சென்ற நிலையில் அங்கிருந்த ஆச்சாரியர்களும் பிக்குகளும் புத்தகோசரின் அறிவாற்றலைச் சோதிக்கும் நிலையில் சூக்தத்திலிருந்த இரண்டு பாக்களை கோசருக்குக் கொடுத்து உரை எழுத சொன்னபோது இந்த விசுத்திமக்கா என்கிற நந்நெறி விளக்கத்தை ஆக்கினார் எனவும் சொல்லப்படுகிறது. முதல் முறை எழுதப்பட்ட விசுத்தி மக்கா படி காணாமல் போய்விட்டது என்று சிங்களாச்சாரியர்கள் சொல்ல இரண்டாவது முறை கோசர் எழுத அதுவும் காணாமல் பே ய்விட்டது என்று சிங்களவர் சொல்ல மூன்றாவது முறையும் ஒரு எழுத்துக்கூட மாறாமல் கோசர் அப்படியே ஆக்கித்தர மேலும் கோசருடைய ஆற்றலை சோதிக்க அச்சம் கொண்ட சிங்களவர்கள் ஆச்சாரியர் புத்தகோசரின் சிறப்பான நினைவாற்றலுக்கு மதிப்பளித்து ஏற்றுக் கொண்டனர். விசுத்திமக்கா சிங்கள மொழியில் இயற்றப்பட்டது. என்கிற கருத்து தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இது நம்ப தகுந்ததன்று. ஏனெனில் கி.பி. 12.ஆம் நூற்றாண்டுவரை ஈழத்து அனுராதபுரத்து மஹாவிகாரைக்குச் சென்று கடனாற்றியவர்கள் அனைவரும் மாகதி அல்லது பாலி மொழி ஆச்சாரியர்களே என்பது குறிப்படத்தக்கது. இலங்கையின் வரலாற்றுத் தரவுகளான மஹாவம்சம், சாசனவம்சம், தீபவம்சம், ஜம்புதீபம், அட்டக்கதா, ஜாதக கதா உள்ளிட்டவை மாகதி அல்லது பாலியில் அமைந்திருக்கின்றன. இதனால் விசுத்திமக்காவும் பாலி மொழி நூல் எனக் கொள்ளவேண்டும். இப்படி சொல்வதற்கு ஆதாரங்கள் பல உண்டு என்றாலும் சுருக்கம் கருதி ஒன்றை மட்டும் குறிப்பிடப்படுகிறது. அட்டக்கதா, சாசனவம்சம், கங்கவிதராணி, விசுத்திமக்கா போன்று உரைநூல் பகுதிகளில் மாகதி அல்லது பாலி மொழி இலகணவிதிகள் புத்தகோசரால் விளக்கப்பட்டுள்ளது. மேலும் விசுத்தி மக்காவில் காணப்படுகிற பெரும்பாலான சொற்கள் பாலிமொழி சொற்கள் என்பதுவும் மனங்கொள்ளத்தக்கது. விசுத்திமக்கா இலங்கைக்குரியது மட்டுமல்ல இன்று தெற்காசியாவாக விளங்குகிற அனைத்து நிலப்பரப்புக்கும் உரிய சிந்தனைகளையும் உள்ளடக்கியது இந்நிலையில் இந்நூல் அனைத்து நிலப்பரப்புக்கும் உரியது. கி.பி.505இல் விசுத்திமக்கா பாலியிலிருந்து சீனமொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

The work is entirely lost in Ceylon and it exists only in a Chinese translation dated A.D. 505 by a Cambodian priest named Sanghapala. Mr. Nagai in Section 5 of his article shows how the Chinese text agrees generally with the text of the Visuddhimagga, and further records thus, "the difference in each case can be accounted for in one way or another on the ground of re arrangement, interpolation or curtailment. On the whole, the description of the Chinese is much simpler than that of the Pal” (that of the Pali." (J.l'.T.S., 1017-1919, PP- 69-80.( J See chapters I and II. (2 Buddhism, Primitive and Present, by Coplcston, p. 213. )

இதே சமகாலத்தில் பர்மியமொழியில் விசுத்திமக்கா ஒலிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. மாகதி மொழியின் இலக்கண விதிகளு இதில் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். கம்போடியாவில் புத்தகோசவிகாரை என்கிற விகாரை காணப்படுகிறது. புத்த நெறியின் அனைத்துத் தத்துவங்களையும் உள்ளடக்கி இறுதியாக தோன்றிய ஆகசிறந்த புத்த புனித ஆக்கம் விசுத்திமக்கா என்றும் மதிப்பிடுகின்றனர். வெவ்வேறு மக்களிடையே தோன்றிய வேறுபட்ட தத்துவங்களை கொண்டிருப்பதனால் பிடகங்களிலிருந்து இது மாறுபட்ட தன்மையை உடையது. தியானம், நற்சிந்தனை, உள்மெய், துன்ப தொடரிலிருந்து விடுதலை அல்லது மன அமைதி போன்றவற்றை விசுத்திமக்கா சாரமாகக் கொண்டுள்ளது. மேலே விவாதிக்கப்பட்டவற்றிலிருந்து இரண்டு கருத்துக்களை பெறமுடிகிறது. ஒன்று விசுத்தி மக்கா மாகதி அல்லது பாலிமொழியில் ஆக்கப்பட்டது. இரண்டு உபதிசா என்கிற சிங்களவரின் விமுக்த்திமக்கா இதற்கு முதல் நூல் அல்ல. விமுக்த்திமக்கா விசுத்தமக்காவுக்கு பிறகு தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் கி.பி.5.ஆம் நூற்றாண்டுவாக்கில் சிங்கலமொழி அறிவு மொழியாக வளர்ந்திருக்கவில்லை என்கிற கருத்தும் உண்டு. இனி விசுத்திமக்காவின் உள்ளடக்கம் அமைப்பு குறித்து விளக்குவது இன்றியமையாத்தாகிறது.

விசுத்திமக்காவின் உள்ளடக்கமும் அமைப்பும்

விசுத்திமக்கா என்பதற்கு ‘Path of purification’ என்று ஆங்கிலத்தில் மொழியாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழில் நன்நெறி, அல்லது நல்வழி என மொழியாக்கலாம். இது பொருள்நிலை நோக்கி செய்யப்பட்டதாகும். சொல்லுரை அல்லது பதவுரையை நோக்குவதும் சிறிது புரிதலை ஏற்படுத்தக்கூடியது என்கிற நிலையில் பார்த்தோமானால் விசுத்திமக்க என்பதை வி+சுத்தி+மக்க என பிரிக்கலாம். மிகச் சிறந்த தூய்மையான வழி என்று பதவுரை கொள்ளமுடியும். எளிமையும் பொருள்நலமும் நோக்கி இதனை நன்நெறி கலைக்களஞ்சியம் அல்லது நல்வழி கலைக்களஞ்சியம் எனச் சுட்டுவது தகும். புத்தகோசர் என்கிற தேரவாதியால் இந்தக் கலைக்கலஞ்யிம் ஆக்கப்பட்டது என்றாலும் தேரவாதம், ஹீன ஏனம், மஹாயேனம், யோகசாரம், அபயகிரி உள்ளிட்ட பல புத்தசமய நெறிகளுக்குமான அதிகாரபூரவமான நம்பகத்தன்மைவாய்ந்த விரிவான தகவல்களைக் கொண்டுள்ளது. விசுத்திமக்காவில் விளக்கப்படுகிற தத்துவங்கள் குறித்த குறிப்புகள் சில புத்தகோசரின் சுமங்கலிவிலாசினியிலும் தரப்பட்டுள்ளது. அவற்றின் பெயர்கள் முதலில் தரப்படுகிறது. சுமங்கலிவிலாசினியில் இயற்கை நெறியான சீலகாதை என்ற ஒரு பகுதி அமைந்துள்ளது. இதில் தூதுதர்மா, காமவிதானி ஆகியவை காணப்படுகிறது. இதில் காரியவிதானி என்ற தலைப்பில் ஜினானி சாமபதி, அபிவினா, பாவனா, காந்தா, தாத்து, இந்திரியானி அரியசங்கானி, பச்சையகாரா, புரந், நையா, மஹா விபாசனானா உள்ளிட்ட தத்துவங்கள் இருப்பதை எடுத்துக்காட்டுகிறார் ஸ்பென்ஸாடி. விசுத்திமக்கா குறிப்பிடத்தக்க பல சிறப்பான தத்துவங்களை விளக்குகிறது என்கிறார் ஜேம்ஸ்கிரே. 15 அத்தியாயங்களை உடைய விசுத்திமக்காவில் முதல் நான்கு அத்தியாயங்கள் குறித்து பின்வரும் கருத்தினை தெரிவிக்கிறார் ஸ்பென்ஸராடி. முதல் அத்தியாயம் பின்பற்றவேண்டிய ஐந்துவகையான சீலங்கள் (ஒழுக்கங்கள்) குறித்து விளக்குகிறது. இரண்டாம் அத்தியாயம் புத்த தம்மத்தை ஏற்றுக் கொண்ட ஆச்சாரியர்களும் துரவிகளும் பின்பற்றவேண்டிய பழக்கவழக்கங்கள் ஆற்றவேண்டிய பதிமூன்று கடமைகள் போன்றவற்றை விவாதிக்கிறது. மூன்றாம் அத்தியாயம் ஜென்குருமார்கள் தியானமுறைகளை எவ்வாறெல்லாம் ஒழுகவேண்டும் என்பது குறித்து விளக்குகிறது. நான்காம் அத்தியாயம் விகாரையில் தங்கியிருக்கும் ஆச்சாரியர்கள் பிக்குகள் செய்யக்கூடாத பதினெட்டு குற்றங்கள் குறித்து விவரிக்கிறது. (Spence Hardy, Manual of Buddhism, p. 531-532.) (James Gray, Buddhaghosuppatti, Introduction, p. 31)

மேலும் திரு வாரன்ஸ் கருத்து படி பார்த்தால் ஐந்தாவது அத்தியாயம் நல்வழி பெறுவதற்கான பத்துப் படிநிலைகளை விளக்குகிறது.

ஆறாவது அத்தியாயம் அசுபா குறித்து பேசுகிறது. சுபா என்பதன் எதிற் சொல்லாகும் அசுபா. அதாவது நீதி அநீதி என்பது போல. இன்னொரு வகையில் சொன்னால் இதனை அநிச்சையம் எனலாம். இதனை புத்த உள்மெய்ப்படி சொன்னால் இயல்பு மாறும் நிலை என்பதாகும். ஏழாம் அத்தியாயம் மூவுலகக் கொள்கை குறித்து விவரிக்கிறது. எட்டாம் அத்தியாயம் அநுசதி குறித்துப் பேசுகிறது. இந்த அநுசதியை சாக்காடு என தமிழாக்கலாம். இதனோடு எட்டுவகையான மூடநம்பிக்கைகள் உள்ளிட்ட பலவற்றை விளக்குகிறது. ஒன்பதாம் அத்தியாயம் பிரம்மவிகாரை என்பதை விளக்குகிறது. களையப்படவேண்டியவை என வகைப்படுத்தப்பட்ட பகை எண்ணங்கள் (enemity)) அல்லது முரண்பாடுகள் குறித்து விவரிக்கிறது. பத்தாம் அத்தியாயம் அருபங்கள் குறித்து விவரிக்கிறது. நம்மிடம் உள்ள நான்கு வகையான அரூபங்கள் அல்லது வடிவிலி பண்புகள் குறித்து விளக்கிக்காட்டுகிறது. பதினொன்றாம் அத்தியாயம் சமாதி குறித்து விவரிக்கிறது. இந்த அத்தியாயத்தில் மகிழ்ச்சி பொருள்கள் (Blessings) ஐந்தினைக் குறித்தும் விளக்கப்படுகிறது. இந்நூல் இன்னும் பல மெய்மைகளை புத்தநெறியாகக் கொண்டு மிகவும் பரந்துப்பட்ட நிலையில் விளக்குகிறது. விசுத்தி மக்காவின் உள்ளடக்கம் குறித்து மிகவும் சுருக்கமாக குறிப்பிடுவது மிகவும் பயன் அளிக்கக்கூடியது.

விசுத்திமக்கா பரந்துவிரிந்த சிந்தனைகளை கொண்டது என்பதை முன்னரே கண்டோம். இது குறித்துப் பொதுவாக சொன்னால் 1. அற ஒழுக்கங்களை பின்பற்றுதல், 2. தியானநிலையை கைக்கொள்ளுதல், 3. ஞானநிலையை அடைதல் என்கிற மூன்று நோக்கங்களை உடையது எனலாம். இவற்றை சீல, சமாதி, பஞ்ஞா என்கிறது இந்நூல். நல்ல ஆசிரியரிடம் சென்று அற ஒழுக்கங்களை பின்பற்றுவதற்கான நெறிமுறைகளை கற்றுக் கொள்ளவேண்டிய வழிமுறைகளை விளக்குகிறது முதல் பகுதி. மனித வாழ்வுக்கு பயனளிக்க்க் கூடிய வகையில் விளங்குவது தியானம் என்கிற நோக்கத்தில் வெவ்வேறு விதங்களில் தியானம் மேற்கொள்வது குறித்து விவரிக்கிறது இரண்டாம் பகுதி. அதாவது மனதை ஒருநிலைப்படுத்தும் வெவ்வேறு படிநிலைகளை விளக்குகிறது இந்தப் பகுதி. மேலும் இதில் 40.மரபுகள் இருப்பதாகவும் சொல்லுகிறது. அறிவுமுறையின் பலதரப்பட்ட வடிவங்களை விரிக்கிறது மூன்றாம் பகுதி. புத்தநெறியின் அடிப்படை மெய்மைகளான நான்கு உளமெய்கள் (Four noble truths) (துக்கம், துக்க காரணி, துக்கநிவாரணம், துக்கநீக்கம்) துக்க நீக்கத்திற்கான எட்டுவழிமுறைகள் நற்சொல் உள்ளிட்ட அட்டாங்கமார்கங்கள், படிச்சமுத்பாதம் என்று சொல்லப்படுகிற பூதசார்பு சமநிலை மெய்மை புத்தநெறிக்கே உரிய விபாசானா என்று சொல்லப்படுகிற அறிதல் உள்ளிட்டவை விளக்கப்படுகிறது. ஐம்பூதங்களின் கூட்டால் உயிர்கள் தோன்றுகின்றன ஐம்பூதங்களின் சமநிலை கெடுகிறபோது உயிர்களும் மறைந்துவிடுகின்றன. எண்ணங்கள் வாயு தாதுக்களோடு கலக்கிறபோதுதான் செய்லகளாகின்றன, இந்த செயல்கள் பலநூறு வண்ணங்களையும் வடிவங்களையும் பெறுகின்றன. இத்தகைய பிரதிசமத்பாதா, விபாசானா என்பன உள்ளிட்ட மெய்மைகள் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன. மனிதவாழ்வு ஈடேற்றத்திற்காக ஏழு விசுத்திகளை குறிப்பிடுகிறார் புத்தகோசர். விசுத்தி குறித்த விளக்கங்கள் சிறிது வேண்டப்படுகின்றன. விசுத்தி என்பது மிக தூய்மையான, மிகச் சிறந்த, அதிதூய்மையான நெறி என்பன போன்ற விளக்கங்கள் இக்கட்டரையின் முன் பகுதியில் தரப்பட்டுள்ளது. ஆகவே ஏழு விசுத்திகள் இங்குக் குறிப்பிடப்படுகிறது.

1. சீலவிசுத்தி தூய ஒழுக்கம்,

2. சித்தவிசுத்தி மாசற்றமனம்,

3. திட்டைவிசுத்தி தூய நுன்னோக்கு,

4. கங்கவிதரானி ஐய்யம் தெளிவு,

5. மக்காமக்கா அனாதிசனானாவிசுத்தி நன்மை தீமை பகுத்தறிதல்,

6. பதிபாதாவிசுத்தி

உள்ளிட்டவை விளக்கப்படுவதோடு அடுத்தநிலையில் வேறு ஒன்பது நெறிகளும் எடுத்துக்காட்டப்படுகின்றன. அவை,

1. ஏற்ற இரக்கம் உடைய அறிவு உடையபயனுபாசான ஞானா,

2. மயக்கநிலை அறிவு பங்கானுபாசான ஞானா,

3. தீர்வை நோக்கிய அறிவு பயத்துப்பத்தான ஞானா,

4. வேட்கையுடைய அறிவு அதினா உபசானா ஞானா,

5. மேன்மையான அறிவு நிபிதனுபாசான நானா,

6. விருப்பு வெருப்பற்ற அறிவு முன்சிதுகமயதா ஞானா,

7. பிரதிபலிப்பு அறிவு பதிசங்கானுபாசனா ஞானா,

8. வடிவ சமநிலை குறித்த அறிவு சங்காரூபக ஞானா,

9. நேர்நிலை அறிவு

இத்தகைய கருவிகளின் துணையோடு புத்தம் மனித வாழ்வின் விடுதலைக்கான பல புதிய மெய்மைகளை கண்டு சொல்லியது. புத்தரால் கண்டு சொல்லப்பட்ட விபாசனா, துக்கம், அனாதா, அநிச்சா என்பவையாகும் இவை குறித்த விரிவான தகவல்களை புத்தகோசர் வழங்கியுள்ளார். கட்டுரை சுருக்கம் கருதி விசுத்திமக்கா குறித்த பலவிளக்கங்கள் இங்கு தவிர்க்கப்படுகிறது.

விமரிசனங்கள்

புத்தகோசரின் வாழ்வும் பணியும் குறித்து விமரிசன கருத்துக்கள் பல காணப்படுகின்றன. புத்தகோசரின் பணிகள் குறித்த எதிர்நிலை பார்வை கொண்ட ஓரு விமரிசன கருத்துக்களை மதிப்பீட்டுநிலையில் அணுகுவதன் மூலமே முதலில் கோசருடைய பணிகளை அங்கிகரிப்பதாக அமையக் கூடும் என்பதால் மதிப்பீட்டு விமரிசனம் கைக்கொள்ளப்படுகிறது. திரிபிடகங்களுக்கு பிறகு புத்த சமயத்தின் அனைத்து நெறிகளையும் விளக்குவது புத்தகோசரின் ஆக்கங்கள் மட்டுமே என்பதால் இவருடைய ஆக்கங்கள் மிகவும் உயர்வானவைகளாக மதிக்கப்படுகிறது. புத்தகோசரின் விசுத்திமக்கா மிக உயர்வான பல நெறிகளை மிக நுட்பமாக விளக்குகிறது என்றாலும் இதில் கோசரால் கைக்கொள்ளப்பட்டுள்ள நீண்டநெடிய தொடர்களும், கடுமையான மொழி நடையும் வாசகனைப் புரிதலுக்கு வெளியே நிறுத்திவிடுகிறது. விசுத்திமக்கா நிப்பானம் அடைவதற்கான வழிமுறைகளை வகுத்துக் காட்டுகிறது என்பதைக்கூட திபிதக்க, புத்தகோசபதி போன்ற நூல்களை வைத்துக் கொண்டுதான் அறியமுடிகிறது. காலதேச இடைவெளி காரணமாக விசுத்திமக்கா வாசகனின் புரிதல் எல்லையிலிருந்து நழுவிவிடுகிறது எனலாம். விசுத்திமக் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டுக்குரியது. பதிமூன்றாம் நூற்றாண்டுக்கு பிறகுதான் புத்தகோசபதியும் திபிதக்காவும் எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுகிறபோது இந்த கால இடைவெளியில் எவ்வளவோ மொழிமாற்றத்தை மனித சமுதாயம் ஏற்படுத்தியுள்ளது. அடுத்த நிலையில் புத்தகோசரின் பெயர்களில் காணப்படுகிற அனைத்து நூல்களையும் புத்தகோசர் ஒருவராலேயே ஆக்கப்பட்டதா? புத்தகோசர் என்கிற பெயரில் பலர் எழுதி சேர்த்துள்ளனர். என்கிற கருத்தும் ஆய்வுலகில் உண்டு. இது அடிப்படை ஆதாரமற்றது என்பதை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். ஆச்சாரியர் புத்தகோசரால் விடுபட்ட பணிகள் சிலவற்றை தம்மபாலர் தொடர்ந்து முடித்துள்ளார் என்பது உண்மை.

நிறைவாக

இக்கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ள கருத்துகள் சில நிறைவாக தொகுத்தளிக்கப்படுகிறது. புத்தகோசர் தமிழகத்தைச் சார்ந்தவர். அவர் பாலியில் விசுத்தி மக்காவை ஆக்கியுள்ளார். இவர் புத்தத்தாச்சாரியரின் ஆக்கங்களை பெற்றுக்கொண்டார் என்றாலும், அதை அப்படியே பின்பற்றவில்லை. புத்த சமயத்தின் அனைத்து நெறிகளையும் தொகுத்தளித்துள்ளார் ஆச்சாரியர் புத்தகோசர் என்பன போன்ற கருத்துக்களைப் பெறமுடிகிறது.

 

Pin It