கருத்து மாறுபாடுகள் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்தால் அதை வெளியிடவே கூடாது என்ற போராட்டங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இந்து மதம் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தில் வெளிவரும் நூல்கள் இந்தியாவில் வெளியிடவே கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனர்கள் மிரட்டுகிறார்கள். உடனே நூல் திரும்பப் பெற்று விடுகிறது. ‘இராமன்-கிருஷ்ணன் ஒரு புதிர்’ என்று அம்பேத்கர் எழுதிய நூலை திரும்பப் பெறக் கூறி மராட்டியத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கலவரத்தில் இறங்கினர். ஆனால், பெரும்பான்மை மக்களை “சூத்திரர்கள்”, “அடிமை கள்”, “பிராமணரின் வைப்பாட்டிப் பிள்ளைகள்” என்று கேவலமாக இழிவு செய்யும் மனுசாஸ்திரங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்ற குரலை எந்த மானமுள்ள தமிழனும் எழுப்பத் தயாராக இல்லை. கோயில் கருவறைக்குள் கடவுளிடம் நெருங்கி, கடவுளுக்கு அர்ச்சனை செய்யக்கூடிய உரிமை பிறப்பால் இழிவான ‘சூத்திரர்-பஞ்சமர்க்கு’ கிடையாது என்று சட்டப்படி உறுதி செய்யப்பட் டுள்ளதைப் பற்றி எந்த “மற”த் தமிழனுக்கும் மானம் பீறிட்டுக் கிளம்புவதில்லை. அதே கோயிலுக்குள் அதே கேவலத்தை ஏற்றுக் கொண்டு கர்ப்பகிரகத்துக்கு கைகட்டி வெளியே தலை தாழ்த்தி நிற்கிறான்.

மாறுபட்ட கருத்துகள், கலை களாக, திரைப்படங்களாக எழுத்து களாக வரவே கூடாது என்ற கருத்து, கருத்துரிமையைப் பறிப்பதாகும். பெரியார் தனது படத்தை எதிரிகள் செருப்பாலடித்தபோதுகூட, “நன்றாக அடியுங்கள்; அதன் மூலம் என் கருத் துகள் பரவும்” என்றுதான் கூறினார்.

வடிவேலு நடித்து வெளிவர இருக்கும் ‘தெனாலி ராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயர் என்ற தெலுங்கு மன்னரை அவமதிக்கும் கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக தமிழ்நாட்டில் ‘தெலுங்கு பேசுவோர் சங்கம்’ என்ற அமைப்பினர் தொடை தட்டி போராடக் கிளம்பிவிட்டார்கள். நடிகர் வடிவேலு, கிருஷ்ண தேவராயர் என்ற பெயரைக்கூட படத்தில் உச்சரிக்கப்படவில்லை என்று கூறுகிறார்.

உண்மையில் கிருஷ்ண தேவராயர், பார்ப்பன அடிமையாகவே ஆட்சி செய்த மன்னன். கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் முதலமைச்சராக இருந்தது ‘சாளுவ திம்பரசு’ எனும் பார்ப்பனர். மன்னனின் குலகுரு தாதாச்சாரி எனும் வேதியப் பார்ப்பான். அப்பையத் தீட்சதர், பெத்தண்ணா, தெனாலி ராமன் ஆகிய பார்ப்பனர்கள், அரசவைக் ‘கவி’கள்!

காலம் முழுதும் “பிராமணர்” களுக்கே பொன் பொருளைக் கொட்டி யழுது பல அக்கிரகாரக் குடியிருப்பு களை உருவாக்கித் தந்தவர் கிருஷ்ண தேவராயர். கிருஷ்ண தேவராயருக்கு ஆண் வாரிசு இல்லை. தனது மகள் வயிற்றுப் பேரனாகிய ‘திருமலை ராயன்’ எனும் 6 வயது சிறுவனை தத்து எடுத்து வளர்த்து, தனது வாரிசாக முடிசூட்டத் திட்டமிட்டார். கிருஷ்ணதேவராயரை ஏமாற்றி சுரண்டி வந்த பார்ப்பனர்களே இதற்கு எதிராக சதி செய்தனர். முதலமைச் சராக இருந்த ‘சாளுவத் திம்மரசு’ என்ற பார்ப்பானே தனது மகன் வழியாக விஷத்தை சாப்பிடக் கொடுத்து, முடிசூட்டப்படவிருந்த சிறுவன் திருமலைராயனை சாகடித்து விட்டான். செய்தி அறிந்த கிருஷ்ண தேவராயர் அதிர்ச்சியில் உறைந்தார். நீதி விசாரணை நடத்தி கொலை காரர்களை கண்டறிந்து தண்டிக்க உத்தரவிட்டார். முதலமைச்சர் மற்றும் அவனது மகன் உள்ளிட்ட மூன்று பார்ப்பனர்களே சதிகாரர்கள் என்பது கண்டறியப்பட்டது. ஆனாலும், பார்ப்பனர்களைக் கொலை செய்வது பாவம்; ‘மனு சாஸ்திர’த்துக்கு விரோதம்; ‘பிரம்மஹத்தி தோஷம்’ வந்துவிடும் என்று அஞ்சி மரண தண்டனை விதிக்க கிருஷ்ண தேவ ராயன் பயந்தார். கொலைகாரர்களின் கண்களை மட்டும் பறிக்குமாறு உத்தர விட்டார். பேரன் மரணத்தால் நிலை குலைந்து கி.பி.1530இல் இறந்தார். இந்த வரலாறு பெருமைக்குரியதா? பார்ப்பன அடிமையாக வாழ்ந்தவர்கள் அதுவும் அரசர்களாக மக்களை சுரண்டி கசக்கிப் பிழிந்தவர்கள் எல்லாம், போற்றுதலுக்கு உரியவர் களா? ‘தெலுங்கர்’ என்பதாலோ, ‘தமிழர்’ என்பதாலோ, ‘கன்னடர்’ என்பதாலோ அது எந்த மொழி அரசனாக இருந்தாலும் அரசர்களை விமர் சிக்கவே கூடாது என்பது என்ன நியாயம்?

“தெலுங்கு பேசுவோர்” சங்கங்கள் இப்படி மொழி வெறிக் கண்ணோட் டத்தில் ஆர்த்தெழுவது அறிவுடைமை யாகாது!

நூல்கள், திரைப்படங்கள், இலக்கி யங்களில் மாறுபட்ட கருத்துகளே வரக்கூடாது; எரிப்போம்; தடுப்போம் என்று தொடை தட்டுவது கருத்து விவாதங்களை அறவே ஒழித்துவிடும். எந்தத் தரப்பிலிருந்து இந்தக் குரல் வந்தாலும் அது ஆர்.எஸ்.எஸ். பாசிச சிந்தனைதான் வன்மையான கண்டனத்துக்கு உரியது!