jallikattu book

புத்தகத்திலிருந்து....

காந்தியின் அறவழிப் போராட்டத்தின் விளைவாகவே, இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறியதாக பாடங்களில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், முன்பே அதைப் படித்து முடித்திருந்த இளைஞர்களுக்கும், ஏனைய மக்களுக்கும் ஏறு தழுவுதல் போராட்டத்தில் போலீசு நடந்து கொண்ட விதம், அறவழிப் போராட்டங்களைப் பற்றிய சிறந்த நடைமுறை அனுபவமாக விளங்கியது என்பதில் மிகையிருக்க முடியாது!

          ஜனவரி -17ல் இருந்து ஜனவரி -22 வரை, ஒரு வார காலமாக அங்குலம், அங்குலமாக நம்மால் கட்டப்பட்ட கோட்டை, ஜனவரி – 23 அதிகாலை வேளையில் போலீசின் ஒரே ஒரு உதையில் ஒன்றுமில்லாமல் சரிந்து விழுந்தபோதுதான், நம் அனைவருக்கும் தெரிந்தது, நாம் கட்டிய கோட்டை கற்கோட்டையல்ல, மணல் கோட்டை என்பது! அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது, ஆனால் உண்மை அதுவாக இருக்கும் போது, அதை ஏற்பதைத் தவிர நமக்கு வேறு வழியென்ன இருக்கிறது!

          பெரும்பான்மை மக்களின் சக்தியும், ஆற்றலும் ஆட்சியாளர்களின் நலன்களுக்கு எதிராக திரும்பி விடாமல் தடுப்பதே அகிம்சை, அறவழி ஆகியவைகளின் உண்மையான பணியும், கடமையுமாகும். அது தனது வரம்பை மீறுகின்ற அந்தக் கணமே, அதாவது ஆட்சியாளர்களின் நலன்களுக்கு எதிராக மக்களை உருவாக்குவதற்கான ஆயுதமாக மாற்றப்படும்போது என்ன ஆகும் என்பதற்கான ஆதாரமே தமிழக போலீசின் ஜனவரி - 23 கோரத் தாக்குதல்கள் ஆகும்.

 மின்னூலைத் தரவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.