கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பாக தமிழக மக்கள் கல்வி உரிமைக் கருத்தரங்கு திருப்பூர் ஹார்வி குமாரசாமி அரங்கில் நடைபெற்றது. முற்பகல் அமர்வுக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு. மூர்த்தி தலைமை வகித்தார். இவ்வமர்வின் தொடக்கவுரையாக மூத்த கல்விச் சிந்தனையாளர் ச.சீ.இராசகோபாலன் அவர்களின் காணொளிக் காட்சி உரை இடம்பெற்றது.   பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, மொழி உரிமை பரப்பியக்கத்தின் செயலாளர் ஆழி செந்தில்நாதன், சீனாவின் ஜேஜியாங் பல்கலைக் கழக முதுநிலை அறிவியல் ஆராய்ச்சியாளர் விஜய் அசோகன் ஆகியோர் உரையாற்றினர். இரண்டாம் அமர்வு  பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி தாளாளர் மருத்துவர் சு.முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் புலவர் செந்தலை ந.கெளதமன், குடியாத்தம் அரசுக் கலைக் கல்லூரி முன்னாள் முதல் ப.சிவக்குமார், பழங்குடி இருளர் அமைப்பின் தலைவர் பிரபா கல்விமணி ஆகியோர் கருத்துரை ஆற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி அவர்கள் நிறைவுரை ஆற்றினார். தமிழ்நாட்டிற்கே அனைத்துக் கல்விச் சட்ட அதிகாரங்கள், அனைவருக்கும் அரசின் பொறுப்பில் தரமான கட்டணமில்லாக் கல்வி, அனைத்துக் கல்வியும் அன்னைத் தமிழில் ஆகிய முழங்கங்களை வழியுறுத்தி இக்கருத்தரங்கு நடைபெற்றது.

vasanthi devi thiruppur

 நிறைவேற்றப்பட்ட   தீர்மானங்கள் 

9 மற்றும் 10 ஆம்வகுப்புகளில்படிக்கும்குழந்தைகளை 5 கிலோ மீட்டர் எல்லைக்குள் இருந்தும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை 8 கிலோ மீட்டர் எல்லைக்குள் இருந்தும் மட்டுமே தனியார் பள்ளிகள் வாகனங்கள் மூலம் அழைத்து வரவேண்டும் என்ற விதிமுறையை வகுக்கவேண்டும் .தனியார் பள்ளிகள் வாகனங்கள் இயக்குவதை முழுவதுமாக தவிர்க்கும் வகையில் அரசுப் போக்குவரத்துத்துறை மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கென்று தனிப்பேருந்துகளையும் சிற்றுந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு