ஐந்தாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.

* நாவல்-நாடகம், சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2014 ஆம் ஆண்டு (ஜனவரி 2014 முதல் திசம்பர் 2014 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம்.

* ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும்.

* நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.

* நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 20-06-2015

* அனுப்ப வேண்டிய முகவரி
தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051

- செந்தமிழ் அறக்கட்டளை, மணப்பாறை