நன்கொடை ரூ.50 மட்டும். முன்பதிவு, தொடர்புகளுக்கு 99427 30983, 98430 68294.
சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் - மாநில கலந்துரையாடல்- 22.03.15 பல்லடம்
தலைமை: தோழர் கொளத்தூர் மணி, தலைவர் தி.வி.க
தீர்மானங்கள்:
1. எதிர்வரும் எப்ரல் 03ல் (03.04.15) சூலூரில் சு.க.ப.க சார்பில், தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் மாட்டிறைச்சி விழா மற்றும் தாலி அகற்றும் விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
2. ஏப்ரல் 1 முதல் 30 ம் தேதி வரையான நாட்களுக்குள் காட்டாறு இதழுக்கு 1000 சந்தாக்கள் திரட்டுவது என இலக்கு நிர்ணயிக்கப் படுகிறது. காட்டாறு ஏட்டிற்கு சந்தா சேகரிக்கும் பணியை பொள்ளாச்சி தோழர் விஜயராகவன், கொளத்தூர் குமார், அ.ப.சிவா, சி.இராவணன் ஆகியோர் ஒருங்கிணைப்பார்கள்.
3. மே 3 ல் புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் நிகழ்ச்சியை பொள்ளாச்சியில் நடத்துவது எனவும், அந்நிகழ்வில் காட்டாறு ஏட்டுக்கான 1000 சந்தாக்களை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.
4. திராவிடர் கலைக்குழு சார்பில் கடவுளர் கதைகள், இராமயாணம் மற்றும் மகாபாரதத்தின் அடிப்படையில் குறும்படங்கள் தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டது.
5. தாலி- பெண்களுக்கு அடிமைச் சின்னம் என்ற கருத்துகளை விளக்கும் துண்டறிக்கைகளை பெண்கள் கல்லூரிகள் முன்பு பெண்கள் விநியோகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.