நினைவுகளை கொறித்துக் கொண்டிருக்கும்
தனிமை கணங்களுக்கு தீனி போடவாவது
தேவை புதிய நினைவுகள்
கிளம்பி போகமுடியாமல் காலெங்கும்
அப்பிக்கிடக்கிறது ஞாபக சிலந்திகளின்
நூலாம்படைகள்
சுவர்களில் வழியும் வக்கிரங்கள்
துரத்துகின்றன துர்நாற்றமென
தப்பிக்கும் வழிகள் தேடி
ஓடி அலைந்த இடமெல்லாம்
தனிமையின் வசிப்பிடம்.
தனிமை வசிக்காத இடமென்று
ஏதும் இல்லையென
அந்த அறையை
ஒழுங்கு செய்தேன்

- ஜனா கே

Pin It