பேச்சு
சுற்றி
சுழன்றதொரு
சம்பவத்தைப் பற்றி.
 
அக்கம் பக்கம்
குறித்தெந்த  
அக்கறையுமில்லை
அவர்களிடம்.
 
சம்பவ இடம்
பற்றியும்
சரியான
தகவலில்லை.
 
பேச்சின்
சாரத்தை வைத்து
சம்பவத்தை அறிதலும்
சாத்தியப்படவில்லை.
 
உயிரிழப்பு ஏதுமில்லை
என்றொலித்த
வாக்கியமொன்றோடு
அங்கிருந்து கிளம்புகையில்
சற்று
ஆசுவாசமாயிருந்தது.

- செல்வராஜ் ஜெகதீசன்

Pin It