கண்களிலுன் காட்சியை காதுகளிலுன் வார்த்தைகளை நிரப்பிக் கொள்ள விரைந்து வருகிறேன்
இதுவே தாமதமென எண்ணியிருக்கையில் அப்புறம் பார்க்கலாமென அலட்சியப் படுத்துகிறாய்.
3)
நேற்று நேற்றுக்கு முன்
சற்று முன் சற்று முன்னுக்கு முன்
இன்று, இப்பொழுது இப்படி எப்பொழுது கேட்டாலும் அப்புறம் என்ற ஆயத்த சொல்லுதிர்க்கிறாய்
காலத்தின் ஒவ்வொரு நுண்ணிய கிளையிலும் தனித்து தங்கி கழிகிறதென் வாழ்வு
இனி, இனியொரு பொழுதுக்குப் பின் வருவதுதான் அப்புறம் அப்புறம் சொல்லாதே அப்புறமென்று.
4)
நித்திரை ஆழியுள் விழுந்து மறைகிறேன் தட்டி எழுப்புகிறதுன் நினைவு விரல்கள்
எச்சில் உலர்ந்த முத்த வடுக்கள் வலிக்கிறது ரணமாய்
ஊழிக்காற்றையே சுவாசித்தும் மூச்சுத் திணருகிறேன்
ஆறுதல் ரத்தம் அவசியப்படும் இந்நிலையில் அப்புறமென்னும் நச்சுச் சொல் உறிஞ்சுகிறதென் உயிரை.
5)
ஒரு முத்தம் கொடுக்கவா? அப்புறம்
இறுக்கிக் கட்டிக் கொள்ளவா? அப்புறம்
கணையாழி மாட்டி விடவா? அப்புறம்
வீட்டுக்கு எப்ப வர்ற? அப்புறம்
எங்கேனும் சுற்றப் போகலாமா? அப்புறம்
ஏதேனும் சாப்பிடுகிறாயா? அப்புறம்
கல்யாணம் முடிச்சிகுவோமா? அப்புறம்
அப்புறம்? ம்ம்ம்...... அப்புறம்.
- மதியழகன் சுப்பையா, மும்பைஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.