விவரங்கள்
மாறன்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 24 ஏப்ரல் 2010
காணாமல்போன நிலவு
அச்சிடுக
ஆவலோடு வந்த மகன்
ஏமாறக்கூடாதென்று
குடுவை நீரைக் கையிலேந்தி
பெளர்ணமி காட்டுகின்றேன்
விரல்களின்
இடைவேளி வழியே
வழிந்தோடிவிடுகிறது
காணாமல்போன
நிலவு குறித்து விசும்புகிறான்
மறைந்துபோன
ஆறுபற்றி
நான் யாரிடம் கூறுவது?
-
மாறன்