ஒரு பறைவயின் அழைப்பை ஏற்றுப் பின்தொடர்ந்து காற்றின் சங்கீதம் கேட்டு இலைகளின் கரவொலிக்கு நின்று ஆற்றில் புரளும் நீர்ச்சடைகளின் கற்றைகளைப் பிரித்து வானம் பனியென மண்ணிறங்கும் அதிகாலை ஒற்றையடிப் பாதை வழியே தாவரச் சிற்பங்களிடையே நடந்து கண்டேன் ஒரு பூவின் நிறம்