வலி
stonesஉணரும் தருணங்களில்
எங்கிருந்தோ முளைக்கிறது
எனக்கான கவிதை

காற்றழிந்த
மணல்வெளியில்
காத்திருக்கும்
என்காலடி
காற்றில் அழிவதற்காய்

நான்
கானலை அருந்த
தயாராகையில்
எப்படியாவது
காப்பாற்றிவிடுகிறது மேகம்

எனக்குத் தெரியும்
கடித்துவிடுகிற
கடைசிநொடி வரைக்குமே
புகழப்படும் எறும்புகள்

ஆனாலும்
எறும்புகளிற்கு
கவலைகிடையா
எதைக்குறித்தும்

என்
வழியெங்கும்
நிறுவிக்கிடக்கிறது
எறும்புகள் உடைத்த
கற்கள்

த.அகிலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)