விவரங்கள்
குட்டி ரேவதி
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2010
சாதகம்
அச்சிடுக
பொலபொலவென விடியும்
மடல்களின் காலைவேளை
ஏக்கங்களின் சமுத்திரம்
சாம்பல் வழிய விரிந்தது வானமாய்
‘என் வேட்கைப்பேராற்றின்
சில கணச்சரிவில் வெடித்துச் சிதறும்
சிறு குமிழி
உன் ஆணவம்’ என்றாள்
பனிநீரில் நின்றவாறு
சாதகத்திற்கு வந்தவள் முன்
குளிர் விறைத்து நின்றது
-
குட்டி ரேவதி