எவருமில்லை
இரண்டு பேரைத் தவிர
பேருந்து நிறுத்தத்தில்.

அறிந்த முகமென
தெரிகிறது இருவருக்கும்.
தயக்கம்
தவிர்ப்பது
யாரெனும் தவிப்பில்.

பெரு நகரிலும் இருக்கிறது
விழுங்கி விட்டும்
தொலைக்காத கிராமியம்
அழகென.

சொல்லியிருக்கலாம்
இன்னார்தானே நீங்களென....
உதவிகள் செய்ய வேண்டுமென
அவர் நினைக்கலாமென்ற
நினைவு வராமலிருந்தால்

- ரவி அல்லது