vinayaka in riverநீருமற்று மணலுமற்று
உயிர்ப்பற்று
சுரண்டல் மட்டுமே
கரைபுரளும் நதிகளில்
தலை துண்டிக்கப்பட்டு
சிதைந்த முகத்தோடு
கை கால்கள் நசுங்கி குப்புற
கிடக்குது மூர்ச்சையான பக்தி..
கேள்வி கேட்டால்
எல்லோர் வாய்களிலும்
அடைத்துக் கிடக்கிறது
விடைகளுக்குப் பதில்
கொழுக்கட்டைகள்.

- சதீஷ் குமரன்