விசும்பல்களும் விரசங்களும்
நிரம்பிய முன்னிரவு
நினைவுகள் மேலோட
கூனிக் குறுகி போர்வைக்குள்
தொலைக்க பாடுபட்டு
தோற்றுப்போய்
கண்ணீரில் கரைந்து போன
அத்தனை கவலைகளும்
உயிர்பெற்று தொண்டைவரை
நிரம்பிக்கொண்டு - கைதியாய்
நிற்கவைத்து பரிகசிக்க
எத்தனிக்கும் ஒரு மணித்துளியில்,
எங்கிருந்தோ
தென்றல் வருட
யாரிடமோ நன்றி சொல்லி..
யாரிடமோ மன்னிப்பு கேட்டு..
யாரிடமோ சரணடைந்து
சட்டென இறந்து போகிறேன்
தூக்கம் தொலைத்த
மற்றொரு இரவொன்றில்...
- செ. சுபாஷிணி