கற்களை விட
வலிமையான
சொற்களை வீசி விட்டு
உலவுகிறார்கள்
வெறுப்பின் உலகில்
வெப்பமாய்;
மீண்டும் வருகிறார்கள்
காயத்திற்கு களிம்பிட
பூசும் கைகளில்
பூத்திருக்கிறது
எரிமலையின் எரிச்சல்!
**************
உன்னைத் தொலைத்தலும்
உன்னில் தொலைதலும்
உணரத் தொடங்கையில்
படரத் தொடர்கிறது
உன்னில் வெளிச்சம்!
- ந.சுரேஷ், ஈரோடு