அகதியின்
ஒவ்வொரு இரவும்
விடிகிறது
தாயகக் கனவுகளுடன்!
____________________
யானைகள் ஊருக்குள்
புகுந்ததாய் சொல்கிறோம்
யானையின் ஊருக்குள்
புகுந்த நாம்!
_________________
கடித்த ஆப்பிளை வீசிய
குழந்தையின் கண்ணில்
நியூட்டனின் ஈர்ப்பு!
_________________
சன்னல் வழிச் சாளரம்
கலிலியோவின்
உருண்டை உலகை
சதுரமாக்கிச் சட்டமிடுகிறது!
____________________
அறுந்தது வார் அல்ல
செருப்பு தைப்பவனின்
வாழ்க்கை!
_____________
இல்லாமை சட்டியை
கல்லாமை சுரண்டியது!
- ந.சுரேஷ், ஈரோடு