ஒரு பொது நிகழ்வில் நாம் எதிர்ப்பட
வரும் நாட்களில் என் நிழலானாய்
உனக்கெனவே வாய்த்தது
அந்த பேருந்துப் பயணம்
நடத்துனருக்கு உதிர்க்கும்
ஊர்ப் பெயரை அறிய
கூரான செவிகள்
நான் மணமானவளா-
கழுத்து விரல்களை
தேடித் தீர்க்கும் விழிகள்
என் துறை பணி ஊதியம் இன்னும் பல -
பெரும் ஆய்வை நிகழ்த்தும் மனம்
தொண்டைக்குள் என்னோடு ஓயாமல் பேசுகிறாய்
எதையும் சொல்லாத நான்
பேருந்து நிறுத்தத்தில்
உன்னை தவிக்க வைத்த கிறுகிறுப்பில்
என் இருப்பிடம் நோக்கி நடக்கிறேன் -
யாரும் சொல்லாமலே தெரிகிறது உனக்கு
என் சாதி!
- இரா.பகுத்தறிவு